இந்த மாதம் இல்லையாம்..ஜெமினி AI வெளியீடு தள்ளிவைப்பு.! கூகுள் அறிவிப்பு.!

Published by
செந்தில்குமார்

செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் மனிதர்களால் செய்ய முடியாத வேலையை கூட எளிதில் செய்ய முடியும். இதனை பல தொழில்நுட்ப நிறுவனங்கள் உருவாக்க முயற்சி செய்து வருகின்றன. அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஓபன்ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு நிறுவனம் சாட் ஜிபிடி (Chat GPT)  என்ற ஏஐ சாட் போட்டை அறிமுகம் செய்தது.

இந்த ஏஐ அறிமுகமான சில வாரங்களிலேயே அனைத்து பயனர்களையும் தன் பக்கம் ஈர்த்தது. இதற்கு போட்டியாக கூகுள் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் ஏஐ சாட் பாட்டுகளை உருவாக்கி அறிமுகம் செய்து வருகின்றன. கூகுள் கடந்த மார்ச் மாதம் ‘பார்ட்’ எனும் ஏஐ சாட் பாட்டை அறிமுகம் செய்தது. இதனையடுத்து சில கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது

பிறகு இந்தியா உட்பட 180க்கும் மேற்பட்ட நாடுகளில் பார்ட்  ஏஐ அறிமுகமானது. சார்ஜ் சாட் ஜிபிடிக்கும் பார்ட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், சாட் ஜிபிடி 2021 ஆம் ஆண்டுக்கு முந்தைய தகவல்களை மட்டுமே ஆய்வு செய்து தரக்கூடியது ஆகும். ஆனால் பார்ட் தற்போது இருக்கக்கூடிய தகவல்கள் வரை கூகுளில் தேடி தரக்கூடியது.

சேட் ஜிபிடியை ஓரம்கட்ட வருகிறது ‘ஜெமினி AI’..! கூகுளின் அடுத்த மாஸ்டர் பிளான்..?

இந்த பார்ட்-ஐ அறிமுகம் செய்ததோடு கூகுள் நிறுவனம் விடாமல், அதன் முன்னணி ஏஐ நிறுவனமான டீப் மைண்ட் (DeepMind) மூலம் ஜெமினி எனப்படும் புதிய ஏஐ-ஐ உருவாக்கியுள்ளது. இதனால் ஜெமினி பல வகையான தரவுகளை கையாள முடியும். ஓவியங்கள், உரைகள், படங்கள் போன்றவற்றை புரிந்துகொள்ளும் மற்றும் உருவாக்கும் திறன் கொண்ட இதில், மேம்படுத்தப்பட்ட சர்ச் அல்காரிதங்களுடன் கூடிய ஏஐ அமைப்பு (AlphaGo) உள்ளது.

முதன்முதலில் இந்த ஜெமினி ஏஐ ஆனது கடந்த மே மாதம் நடந்த கூகுளின் டெவலப்பர் மாநாட்டில் வெளியானது. இதன்பிறகு இந்த டிசம்பர் மாதம் வெளியாகும் என திட்டமிடப்பட்டது. அதன்படி, வெளியீட்டு நிகழ்வானது நியூயார்க் வாஷிங்டன் மற்றும் கலிபோர்னியாவில் அடுத்த வாரம் நடைபெற இருந்தது. ஆனால் தற்போது ஜெமினி ஏஐ வெளியீடானது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப்பில் AI சாட் போட்.! மறைத்து வைக்க புதிய வசதி அறிமுகம்.!

ஜெமினி 1.0-வின் வெளியீடு அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.  ஏனெனில், இந்த ஜெமினி ஏஐ-ல் ஆங்கிலம் இல்லாமல் உள்ளிடப்படும் தகவல்களுக்கு நம்பகமான தகவலை தருவதில் பிரச்சனைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, ஜெமினி ஏஐ வெளியிடானது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஜெமினி ஏஐ-ன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என பார்ப்பதற்கு இத்தொழில்நுட்ப உலகம் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறது.

Recent Posts

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…

12 hours ago

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

12 hours ago

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

13 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

14 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

14 hours ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

17 hours ago