தொழில்நுட்பத்தின் ஆபத்துகள் குறித்து எச்சரிக்க, AI இன் காட்பாதர்’ கூகுளிலிருந்து ராஜினாமா.!

Published by
Muthu Kumar

செயற்கை நுண்ணறிவின் பிதாமகன் என்று அழைக்கப்படும் கணினி விஞ்ஞானி ஜெஃப்ரி ஹிண்டன், தொழில்நுட்பத்தின் ஆபத்துகளைப் பற்றி பேசுவதற்காக கூகுளில் இருந்து விலகியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகளுக்கான அடித்தளத் தொழில்நுட்பத்தை உருவாக்கிய ஜெஃப்ரி ஹிண்டன், தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் அளித்த பேட்டியில் இந்தத் துறையில் செய்யப்பட்ட முன்னேற்றங்கள், சமூகத்திற்கும் மனித குலத்திற்கும் பெரிய அபாயங்களை ஏற்படுத்துவதாகக் கூறினார்.

மேலும் இதன் ஆபத்துகளைப் பற்றி பேசுவதற்காக கூகுளில் தனது வேலையை விட்டுவிட்டார் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தொழில்நுட்பம் இப்போது எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.

தொழில்நுட்ப நிறுவனங்களுக்கிடையேயான போட்டி காரணமாக அசுர வேகத்தில், புதிய AI தொழில்நுட்பங்களை வெளியிட இந்த போட்டி நிறுவனங்களைத் தூண்டுகிறது, மற்றும் தவறான தகவல்களைப் பரப்புகிறது என்று ஹிண்டன் கூறினார்.

AI ஆல் உருவாக்கப்பட்ட தவறான தகவல் பரவலைப் பற்றி எச்சரித்த விஞ்ஞானி, சராசரி நபர் “இனி உண்மை என்ன என்பதை அறிய முடியாது” என்று அவர் மேலும் கூறினார். மனிதர்களுக்கு ஆதரவாக AI பயன்படுத்தப்பட்டாலும், ChatGPT போன்ற சாட்பாட்களின் வேகமான விரிவாக்கம், மனித வேலைகளுக்கு ஆபத்தை விளைவிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த மாதம் ஹிண்டன் தனது ராஜினாமாவை, கூகுளுக்கு அறிவித்ததாக டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Published by
Muthu Kumar

Recent Posts

மேட்ச் ஓவர்! சென்னையில் வைத்தே சம்பவம் செய்த கொல்கத்தா…8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…

9 hours ago

தோனி அவுட்டா இல்லையா? அம்பயர் முடிவால் அப்செட்டான சென்னை ரசிகர்கள்!

சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…

9 hours ago

முதல் பேட்டிங்கிலும் சொதப்பிய சென்னை…கொல்கத்தாவுக்கு வைத்த சின்ன இலக்கு!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…

10 hours ago

எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம்…எம்பி கனிமொழி காட்டம்!

சென்னை :  2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…

11 hours ago

டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு! சென்னையில் ருதுராஜ் பதில் யார்?

சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…

12 hours ago

பாஜக மாநிலத் தலைவர் தேர்தல் : நயினார் நாகேந்திரனுக்கு போட்டியாக ஒருவர் வேட்புமனு?

சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…

13 hours ago