பேஸ்புக்கைத் தொடர்ந்து வாட்ஸ்ஆப்பிலும் திருட்டா..??

Published by
Dinasuvadu desk

இந்தியாவில் அதிகமான பயனாளிகளை கொண்டுள்ள மிகப்பிரபலமான  மெசேஜ் தளமான வாட்ஸ்ஆப், “பாதுகாப்பானது இல்லை” என்று வாட்ஸ்ஆப் நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

அதன் அடிப்படையில் வாட்ஸ்ஆப்பின் யூசர் அக்ரிமெண்ட் (பயனர் உடன்படிக்கை) நிபந்தனைகளின் மீது சில கேள்விகளும், பல சந்தேகங்களும் எழுந்தன. இவ்வண்ணம், பேஸ்புக்கிற்குச் சொந்தமான வாட்ஸ்ஆப் அதன் பயனர் பாதுகாப்பு சார்ந்த சர்ச்சைக்குள் சிக்கியது. தற்போது தன் மீது கூறப்பட குற்றச்சாட்டுகளுக்கும், தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கும் வாட்ஸ்ஆப் நிறுவனம் விளக்கமும், பதிலும் அளித்துள்ளது.

பயனர்களின் மெசேஜ்களை கண்காணிக்கிறது என்ற குற்றசாட்டிற்க்கு மறுப்பு தெரிவித்துள்ள வாட்ஸ்ஆப் நிறுவனம், பரிமாறப்படும் மெசேஜ்களில் இருந்து “சிறிய அளவிலான” தகவல்கள் மட்டுமே சேகரிகப்படுகிறது என்பதை ஒற்றுக்கொண்டுள்ளது.

சிறிய அளவிலான தரவுகள் சேகரிக்கப்பட்டாலும் கூட அனைத்து வாட்ஸ்ஆப் மெசேஜ்களுமே எண்ட்-டூ- எண்ட் என்க்ரிப்டட் தான் (குறியாக்கம் செய்யப்பட்டவைகள் தான்) என்றும் வாட்ஸ்ஆப் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

சமீப காலமாக ஊடங்களில் வெளியான கருத்துகளுக்கு முரணாக, “வாட்ஸ்ஆப் நிறுவனம் உங்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பற்றிய விவரங்களை தொடர்ச்சியாக கண்காணிகிறது என்பது பொய்” என்று ஒரு வாட்ஸ்ஆப் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

“எங்கள் பயனர்களின் தனியுரிமையும், பாதுகாப்பும் எங்களுக்கு மிகமிக முக்கியமான விஷயமாகும். இன்வைட் லின்க்ஸ் (Invite links) கூட க்ரூப் அட்மின்களுக்கான ஒரு ஆப்ஷனல் அம்சம் தான்” என்றும் வாட்ஸ்ஆப் செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

நமது தனிப்பட்ட அடையாளம் மற்றும் டிவைஸ் சார்ந்த விவரங்கள் போன்ற தகவல்களை பேஸ்புக் உடன், வாட்ஸ்ஆப் பகிர்ந்து கொள்கிறது, இதை வாட்ஸ்ஆப் நிறுவனமே ஒற்றுக்கொண்டுள்ளது.

 

Recent Posts

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

34 mins ago

“இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க முயற்சி”…ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு!!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…

59 mins ago

பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பை சொல்லும் போட்டியாளர்? டேஞ்சர் ஜோனில் சிக்கிய இருவர்!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…

2 hours ago

“இந்தி மாதம் கொண்டாடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…

3 hours ago

‘நிரந்தர பொதுச்செயலாளர்’ விவகாரம்., தவெக தொண்டர்களுக்கு கண்டிஷன் போட்டபுஸ்ஸி ஆனந்த்.!

சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…

3 hours ago

ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி..! வெளியான அறிவிப்பு!

சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…

3 hours ago