பிளிப்கார்ட் நிறுவனம் சிங்கப்பூரைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனத்திடமிருந்து நிதி!

Published by
Venu

பிளிப்கார்ட் நிறுவனம் சிங்கப்பூரைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனத்திடமிருந்து  ரூ.4,843 கோடி நிதி திரட்டியுள்ளது. இந்த நிதியை இந்தியாவில் தனது சந்தையை விரிவுபடுத்துவதற்காக செலவிட உள்ளது.அலிபாபா, அமேசான் போன்ற ஆன்லைன் போட்டியாளர்களை சமாளிக்க இந்த நிதியை முதலீடு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூர் முதலீட்டு நிறுவனத்திடமிருந்து பிளிப்கார்ட் இ-காமர்ஸ் தளத்தின் விரிவாக்கத்துக்கு ரூ.4,472 கோடியும், பிளிப்கார்ட் இண்டர்நெட் நிறுவனத்துக்கு ரூ.370.90 கோடியும்  திரட்டியுள்ளது. பிப்ரவரி மாதத்தில் இந்த முதலீடு திரட்டப்பட்டுள்ளது என்றும், இது தொடர்பான ஆவணங்களை பிளிப்கார்ட் நிறுவனம் கம்பெனி பதிவாளருக்கு அனுப்பியுள்ளது என்றும் தகவல் அறிந்தவர்கள் கூறியுள்ளனர்.

அமேசான் நிறுவனம் இந்திய இ-காமர்ஸ் சந்தையில் கணிசமான பங்குகளை பிரித்துவரும் நிலையில் அதற்கு போட்டியாக தனது தொழிலை விரிவாக்கம் செய்ய இந்த நிதியை பிளிப்கார்ட் பயன்படுத்த உள்ளது. கடந்த ஆண்டில் இரண்டு கட்டமாக, டென்சென்ட், இ-பே, மைக்ரோசாப்ட் மற்றும் சாப்ட் பேங்க் குழுமத்திலிருந்து 400 கோடி டாலரை பிளிப்கார்ட் திரட்டியது. அதற்கு அடுத்து தற்போது பிளிப்கார்ட் நிதி திரட்டியுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பிளிப்கார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்வது தொடர்பாக பேசிய சாப்ட் பேங்க் குழும தலைமைச் செயல் அதிகாரி மாசயோஷி சன், தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில் பிளிப்கார்ட் நிறுவனத்தில் முதலீட்டை அதிகரிக்க உள்ளோம் என்று குறிப்பிட்டிருந்தார்.

தவிர பிளிப்கார்ட் நிறுவனம் அமெரிக்காவின் முக்கிய சில்லரை வர்த்தக நிறுவனமான வால் மார்ட் நிறுவனத்திடமிருந்து நிதி திரட்டவும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய இ-காமர்ஸ் துறையின் ஒட்டுமொத்த ஆண்டு வளர்ச்சி விகிதம் 30 சதவீதமாக உள்ளது. 2027-ம் ஆண்டுக்குள் 20,000 கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டும் என்று மார்கன் ஸ்டான்லி நிதிச் சேவை நிறுவனம் கணிப்பை வெளியிட்டுள்ளது

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

மணிமேகலை விஷயத்தில் கதறி அழுத பிரியங்கா! உண்மையை உடைத்த வனிதா!

மணிமேகலை விஷயத்தில் கதறி அழுத பிரியங்கா! உண்மையை உடைத்த வனிதா!

சென்னை : மணிமேகலை விஷயத்தில் பிரியங்காவுக்கு எதிராக அவருடைய குணத்தை மட்டம் தட்டும் அளவுக்கு விமர்சனங்கள் எழுந்தது என்றே கூறலாம்.…

10 mins ago

உதயநிதிக்கு கிரீன் சிக்னல்.? “ஏமாற்றம் இருக்காது” மு.க.ஸ்டாலின் ‘பளீச்’ பதில்.!

சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை…

16 mins ago

INDvsBAN : 2-வது டெஸ்ட் போட்டியில் மழைக்கு வாய்ப்பா? வானிலை அறிக்கை கூறுவது என்ன?

கான்பூர் : கடந்த செப்.19 தேதி முதல் 4 நாட்களாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில்…

25 mins ago

மெய்யழகனுக்கு U சான்றிதழ்… போர் அடிக்காமல் காப்பாத்துவாரா இயக்குனர்.?

சென்னை : நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் வரும் செப்டம்பர்…

44 mins ago

ரவுடிகள் மீதான அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்.! சென்னை முதல் கன்னியகுமரி வரை…

சென்னை : தமிழகத்தில் சட்டவிரோத குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் காவல்துறையினர் சமீப காலமாக தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு…

58 mins ago

“பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை”….அவதூறு பரப்பிய இயக்குநர் மோகன் ஜி கைது?

சென்னை : திரௌபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் மோகன் ஜி அடிக்கடி தனக்குத்…

1 hour ago