இன்னுமா நம்புறீங்க.? வாட்ஸ்அப் பற்றி குண்டைத்தூக்கி போட்ட எலான் மஸ்க்.!

Published by
பால முருகன்

எலான் மஸ்க் : பயனர்களின் தரவை வாட்ஸ்அப் ஒவ்வொரு இரவும் ஏற்றுமதி ( exports ) செய்வதாக எலான் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார்.

டெஸ்லா மற்றும் எக்ஸ் வலைதளத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் அடிக்கடி தன்னுடைய எக்ஸ் வலைதள கணக்கில் வேடிக்கையான விஷயங்களை பதிவிடுவதும், பயனர்களுக்கு பதில் அளித்தும் வருவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், பயனர் ஒருவர் மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப் பற்றி குற்றச்சாட்டை முன்வைத்த  ஒரு கேள்விக்கு எலான் மஸ்க் பதில் அளித்துள்ளார்.

எக்ஸ் வலைத்தளத்தில் பயனர் ஒருவர் ‘வாட்ஸ் அப் நிறுவனம் விளம்பர நிறுவனங்களுக்கு பயனர்களின் தனிப்பட்ட தரவுகளையும் ‘சாட்’ (chat) களையும் விற்பனை செய்கிறது” என்று கூறியிருந்தார். பயனர் கூறிய அந்த கருத்துக்கு எலான் மஸ்க் ” வாட்ஸ்அப் ஒவ்வொரு இரவும் உங்கள் பயனர் தரவை ஏற்றுமதி செய்கிறது. சிலர் இன்னும் வாட்ஸ்அப்  பாதுகாப்பானது என்று நினைக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.

மெட்டாவுக்கு சொந்தமாக இருக்கும் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றிக்கு எக்ஸ் வலைதளம் போட்டியாக இருப்பதாக பார்க்கப்பட்டு வருகிறது. இதனாலே, மெட்டா உரிமையாளர் மார்க் ஸுகர்பெர்க்குக்கும், எலான் மஸ்க்கிற்கும் இடையே சின்ன பனிப்போர்  இருந்து வருகிறது. இந்த சூழலில் எலான் மஸ்க் வாட்ஸ்அப் குறித்து இப்படி கூறியிருப்பது வைரலாகி வருகிறது.

 

Published by
பால முருகன்

Recent Posts

ரசிகர்களே ரெடியா? சேப்பாக்கத்தில் சென்னை – டெல்லி மோதல்! இன்று டிக்கெட் விற்பனை!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன்  காத்திருந்த சென்னை…

46 minutes ago

மியான்மரில் பயங்கர நிலநடுக்கம் : “ஆபரேஷன் பிரம்மா” உதவிகரம் நீட்டிய இந்தியா!

பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…

1 hour ago

அப்போ கே.எல்.ராகுல்…இப்போ ரிஷப் பண்ட்? டென்ஷனாகி திட்டிய லக்னோ உரிமையாளர்!

லக்னோ :  சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…

2 hours ago

இன்று கூடுகிறது சட்டப்பேரவை… கச்சத்தீவை திரும்பப் பெற வலியுறுத்தி ஒரு தனித்தீர்மானம்!

சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…

2 hours ago

லக்னோ படு தோல்வி..பார்முக்கு எப்போ வருவீங்க ரூ.27 கோடி ரிஷப் பண்ட்?

லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப்…

2 hours ago

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு…இன்று வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா தாக்கல்!

டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த…

3 hours ago