வேகமாக வளர்ந்து வரும் நமது பரதம்,பணமில்லா பரிவர்த்தனைக்காக படை எடுக்கும் பன்னாட்டு நிறுவனங்கள்,இனி வருகிறது வாட்ஸ் ஆப் பே

Published by
Kaliraj

இந்தியாவும் இந்தியர்களும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாத  நிகழ்வாகவும் கருப்புதினமாகவும் கருதும் நாள் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில் நமது பாரத பிரதமர் அவர்களால் கொண்டுவரப்பட்ட பணமதிப்பு இழப்பு நடவடிக்கையாகும்.இந்த  பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டபோது,பணப்புழக்கம் குறைந்து இ பரிவர்த்தனை முறைக்கு மாறினார்.அப்போது   எலெக்ட்ரானிக் பணப்பரிவர்த்தனை நிறுவனமான பே டிஎம் எனப்படும் தனியார் நிறுவனம் அதீத  கொண்டாட்டத்தில் இருந்தது.மற்றொருபுறம்  நடுவண் அரசும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை வலியுறுத்தி பிரசாரம் மேற்கொண்டது.

 

Image result for pay tm

இந்நிலையில், மக்களின் பரவலான பயன்பாட்டுக்கு உரியதாக மாறிப்போனது பே டிஎம் பண பரிவர்த்தன நிறுவனம். இந்நிலையில், இந்தியாவில் `வாட்ஸ்அப் பே’ எனப்படும்  பணப்பரிவர்த்தனை முறையை விரைவில்  அறிமுகப்படுத்தப்போவதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இந்த தகவல் தற்போது   பே டி.எம் எனப்படும் பணப்பரிவர்த்தனை  நிறுவனத்துக்கு  அச்சத்தை  ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே பணப்பரிவர்தனை   அமேசான் நிறுவனம், தற்போது தான் இந்தியாவில் ஆண்ட்ராய்டு உபயோகிப்பாளர்களுக்கு  `அமேசான் பே’ என்ற பண பரிவர்த்தனை சேவையை அறிமுகப்படுத்தியிருந்தது.

இதேபோல் கூகுள்  நிறுவனம் அறிமுகப்படுத்திய `கூகுள் பே’வை தற்போது வரை இந்தியாவில் சுமார் 4.5 கோடி பேர் பயன்படுத்தி வருவதாகவும், நடப்பு மாதம்  முன்பு வரை சுமார் 81 பில்லியன் டாலர் அளவுக்கு பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.மற்றொருபுறம் ஆப்பிள் நிறுவனம்  ஆப்பிள் பேவும், மிகக் குறைந்த விலையிலான  ஆப்பிள் ஐபோன்களுடன் இந்தியாவில் இந்த    பணப்பரிவர்த்தனை  துறையில் காலடி எடுத்து வைக்கத் தயாராகிவருகிறது.வளர்ந்து வரும் இந்தியாவில் பணப்பரிவர்த்தனையில் பணமில்ல பரிவர்த்த்னையாக மாறிவருவதை அறிந்த அயல் நட்டு நிருவனங்கள் இந்திய மீது படை எடுக்க தொடங்கியுள்ளனர்.

Published by
Kaliraj

Recent Posts

நெட் சும்மா பிச்சுக்க போகுது! எலான் மஸ்க் உடன் இணைந்த ஏர்டெல்!

சான் பிரான்சிஸ்கோ : ஏர்டெல் நிறுவனம், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை இந்தியாவில்…

8 minutes ago

தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட இந்த மாவட்டங்களில் இன்று மழை வெளுத்து வாங்கும்! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…

33 minutes ago

17 சுரங்கபாதைகள்., நெருங்கிய பாதுகாப்பு படை! பாக். ரயில் கடத்தலின் தற்போதைய நிலை…

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…

9 hours ago

விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு எப்போது? என்னென்ன பாதுகாப்பு வசதிகள்?

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…

11 hours ago

வெறிநாய் கடியால் பறிபோன உயிர்? கோவையில் தற்கொலை செய்துகொண்ட வடமாநில தொழிலாளி!

கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…

11 hours ago

எக்ஸ் சைபர் அட்டாக் : “செஞ்சது இவங்க தான்?” உக்ரைனை சுட்டி காட்டிய மஸ்க்!

சான் பிரான்சிஸ்கோ : பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் இருந்து…

12 hours ago