ChatGPT experts [Image-Getty]
செயற்கை நுண்ணறிவு, சாட் ஜிபிடியில் திறமையான வல்லுநர்களுக்கு கோடியில் சம்பளம் தர நிறுவனங்கள் தயார் என ஆய்வில் தகவல்.
தகவல் தொழிநுட்ப துறை மற்றும் பல்வேறு துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு (AI) அடைந்துள்ள அபிரிவிதமான வளர்ச்சி, மேலும் சாட் ஜிபிடி போன்ற ஏஐக்கள் தற்போது உள்ள உலகை ஆட்டிப்படைக்கிறது, மனிதர்களுக்கு வேலைவாய்ப்பு குறையப்போகிறது, மனிதகுலத்திற்கு ஆபத்து என்று கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவு பற்றிய திறன் வல்லுநர்களுக்கு பெரும்பாலான நிறுவனங்கள் மத்தியில் மவுசு அதிகம் இருப்பதாக சமீபத்திய ஆய்வின் தகவல் தெரிவிக்கிறது. இது குறித்து ரெஸ்யும் பில்டர் நடத்திய ஆய்வில், 91% நிறுவனங்கள் சாட் ஜிபிடியில் கைதேர்ந்தவர்களை வேலைக்கு எடுக்க தயாராக இருப்பதாக அந்த ஆய்வின் தகவல் தெரிவிக்கிறது.
இதேபோல் பிசினஸ் இன்சைடர் நடத்திய ஆய்விலும் சாட் ஜிபிடி பற்றிய அனுபவம் மற்றும் அதில் வல்லுனர்களாக இருந்தால் ஆண்டுக்கு 1.5 கோடி ரூபாய் சம்பளம் வரை கொடுத்து லிங்கிடின் இல் வேலைக்கு எடுப்பதற்கு நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன என ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.
மேலும் அடுத்த ஆண்டுக்குள், 43% நிறுவனங்கள் வேலைக்கு ஆட்களை எடுப்பதற்கு செயற்கை நுண்ணறிவின் (AI) நேர்காணல் மூலம் பணிகளை நிரப்ப முடிவு செய்துள்ளதாகவும் சில ஆய்வுகள் தெரிவித்தாலும், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் நேர்காணல் நடத்தும் போது திறமையான பணியாளர்களை எடுக்கமுடியும் என அந்த நிறுவனங்கள் நம்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில மாதங்களில் பார்க்கும் போது, செயற்கை நுண்ணறிவு (AI) மனிதர்கள் போலவே பேசுவது, செயல்படுவது போன்றவை மற்றும் பல மொழிகளிலும் பேசுவதால் நேர்காணலுக்கு உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : டெல்லியில் நடைபெற்று முடிந்த 70 சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 2013 (54 நாட்கள்…
கேரளா : நடிகரும் இயக்குனருமான பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன் லால், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘எம்புரான்' படத்தின் கதாபாத்திரங்களை…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே…
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை…
ஷார்ஜா : இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி…
ஜோகன்னஸ்பேர்க் : ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரும், தற்போதைய மும்பை கேப் டவுன் அணியின் கேப்டனுமான ரஷீத் கான், நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பப்படும்…