மழை நேரத்தில் ஏசி போடலாமா? நிபுணர்கள் கூறுவது என்ன ?

Published by
அகில் R

சென்னை : மழை பெய்யும் நேரத்தில் ஏசியை உபயோகப்படுத்தலாமா கூடாதா ? மழை பெய்யும் பொழுது பயன்படுத்தினால் என்ன ஆகும் என்பதை பற்றி இந்த தகவலில் நாம் தெளிவாக பார்க்கலாம்.

தமிழகத்தில் தற்போது கோடை காலம் நிலவி வருகிறது.இந்த கோடை காலத்தில் வெப்பத்திலிருந்து தப்பிக்க ஏசியை நாம் பயன்படுத்தி வருகிறோம். அது ஒன்றும் பெரிய விளைவை பயன்படுத்திடும் ஏசிக்கும், நமக்கும் ஏற்படுத்துவதில்லை. ஆனால், அதே சமயம் மழை பெய்யும் போது ஏசியை பயன்படுத்தலாமா என்ற குழப்பம் நம்மில் பலருக்கும் இருக்கும், அதை பற்றிய தெளிவான விளக்கத்தை நாம் பார்க்கலாம்.

தமிழகத்தில் தற்போது கோடை கால மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான சூழல் ஆங்காங்கே நிலவி வருகிறது. இந்த மழை நேரத்தில் ஏசி உபயோகப்படுத்தலாமா என்று கேட்டால் லேசான மழை பொழிவு இருக்கும் பட்சத்தில் ஏசியை உபயோகப்படுத்தினால் அதனால் ஒன்றும் ஆபத்து இல்லை என நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த லேசான மழையால், நாம் ஏசிக்காக வெளிப்புறத்தில் வைத்திருக்கும் ஏசி யூனிட்டில் (AC Unit) படிந்திருக்கும் தூசி மற்றும் அழுக்குகள் இதனால் சுத்தம் செய்யப்படுகிறது.

மேலும், அதி கனமழை, புயல் போன்றவற்றலிருந்து வெளிப்புறத்தில் வைத்திருக்கும் இந்த ஏசி யூனிட்டுகள் சேதம் அடையாமல் நாம் பார்த்து கொள்ள வேண்டும். என்னதான் அந்த ஏசி யூனிட்டுகள் சேதமடையாத அளவிற்க்கு தயாரிக்கபட்டிருந்தாலும் இது போன்ற அதிக கனமழை பெய்வதனால் சிறுது சேதமடையதான் செய்யும் எனவும் ஏசி டெக்னீஷியன்கள் தெரிவிக்கின்றனர்.

முடிந்த அளவுக்கு ஏசி யூனிட்டுகள் மழையால் சேதமடையாத அளவிற்கு வீட்டிற்கு வெளியில் வைக்க வேண்டும் இல்லை என்றால் மழை பெய்யும் நேரத்தில் ஏசியை அனைத்து விடுவது மிகவும் நல்லது. மழை பெய்யும் போது ஏசியை இயக்குவது வேறு சில விளைவுகளையும் ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர் அது என்னவென்றால் இது போன்ற மழை நேரத்தில் நாம் ஏசி உபயோகிப்பதால் வழக்கத்தை விட வேகமாக அது வெப்பம் அடையலாம்.

அதற்கு காரணம் மழையால் உங்கள் ஏசியினுள் இருக்கும் சுருள்கள் ஈரமாகிவிடுவதால் தான். அதை மீறி சுழன்று இயங்க வேண்டி இருக்கும் என்பதால் இது போன்ற சூழ்நிலையில் ஏசி மூலம் மழை நீர் வீட்டிற்குள் வரவும் வாய்ப்பு உள்ளது. அதே நேரம் புயலின் போதும்  ஏசியை இயக்கக்கூடாது என நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் இடி அல்லது மின்னல் போன்றவைகள் உங்கள் வீட்டைத் தாக்கினால், அது மின்சாரக் கம்பிகள் வழியாகச் சென்று உங்கள் ஏசி யூனிட்டை சேதப்படுத்தும்.

இதனால் வீட்டிற்குள் மின்சாரம் பாய்வதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர். இது எல்லவத்திற்கும் மேலாக மின்சாரத்தின் கட்டணம் எகுறுவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் மழை நேரங்களில் ஏசியை உபயோகிக்காமல் இருப்பதே நல்லது என ஏசியை பற்றி ஆராயும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Published by
அகில் R

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

4 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

5 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

6 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

6 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

7 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

7 hours ago