இந்தியாவின் தொலைதொடர்பு சந்தையில் தனி இடத்தை பிடித்துள்ள பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. மேலும் பிஎஸ்என்எல் தரும் வரம்பற்ற டேட்டா திட்டங்களுடன் இலவச கால் அழைப்புகள் போன்ற சேவையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது,அதன்படி 157ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது அந்நிறுவனம். மேலும் இந்த திட்டம் வடக்கு கிழக்கு ஜம்மு& காஷ்மீர் மற்றும் அசாம் மாநிலங்களில் செல்லுபடியாகாதது என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் பிஎஸ்என்எல் அறிவித்துள்ள மெகா ரூ.949 பிளானில் 157ஜிபி டேட்டா ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு இந்த திட்டம் பல்வேறு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்க பயன்படும் வகையில் உள்ளது. இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் அறிவித்துள்ள ரூ.949 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 100எஸ்எம்எஸ் மற்றும் இலவச கால் அழைப்புகளை பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 157நாட்கள் மட்டும் இந்த திட்டம் செல்லுபடியாகும் என பிஎஸ்என்எல் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் ரூ.187/-திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா வீதம் 28நாட்கள் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,மேலும் வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால் அழைப்புகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக நாள் ஒன்றுக்கு 100எஸ்எம்எஸ் பெற முடியும் என்று பிஎஸ்என்எல் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் ரூ.485/-திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா வீதம் 91நாட்களுக்கு பயன்படுத்த முடியும், மேலும் இந்த திட்டத்தில் இலவச கால் அழைப்புகள் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் ரூ.666/-திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டா வீதம் 129நாட்கள் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால் அழைப்புகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக நாள் ஒன்றுக்கு 100எஸ்எம்எஸ் பெற முடியும் என்று பிஎஸ்என்எல் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…