தொழில்நுட்பம்

Big Dussehra Sale: 40% முதல் 90% வரை தள்ளுபடி அறிவித்த பிளிப்கார்ட்.! தசரா திருவிழாவே களைகட்டப்போகுது..!

Published by
செந்தில்குமார்

தசரா என்பது அக்டோபர் மாதம் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான இந்து பண்டிகையாகும். இது ராமாயணத்தில் ராவணன் என்ற அரக்கனை ராமர் வென்றதைக் கொண்டாடும் விழாவாகும். இந்த தசரா பண்டிகை நாடு முழுவதும் ஒரே நாளில் கொண்டாடப்படுகிறது. நாட்டின் சில இடங்களில் இந்த திருவிழா 10 முதல் 11 நாட்கள் வரை கொண்டாடப்படும்.

இந்த நாளில் பலரும் கோயில்கள் மற்றும் வீடுகளில் வழிபாடுகளை மேற்கொண்டு பல விழாக்களை நடத்துவார்கள். இந்த விழாவை இன்னும் சிறப்பாக மாற்றுவதற்கு ஈ-காமர்ஸ் தளமான ஃபிளிப்கார்ட் தசரா விற்பனையை (Big Dussehra Sale) அறிவித்துள்ளது. பிக் பில்லியன் டேஸ் போலவே இந்த நிகழ்வு, ஃபிளிப்கார்ட்டின் முக்கிய நிகழ்வாகும்.

Retro Edition: புதிய ரெட்ரோ எடிஷனில் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5..! விரைவில் அறிமுகம்.!

அதன்படி, இந்த தசரா விற்பனை அக்டோபர் 22ம் தேதி தொடங்கி அக்டோபர் 29ம் தேதி வரை நடைபெறும். இந்த 7 நாள் விற்பனையின் போது உடைகள், அழகு சாதன பொருட்கள், சமையல் பொருட்கள், டிவி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் உட்பட பல தயாரிப்புகளுக்கு பிளிப்கார்ட் அதிக அளவிலான தள்ளுபடியை வழங்குகிறது.

இதே போல ஐபோன் முதல் சாம்சங், ரியல்மீ, போக்கோ, கூகுள் பிக்சல், ஒப்போ, விவோ என பல மொபைல் பிராண்டுகள் ஸ்மார்ட் ஃபோனில் எண்ணற்ற சலுகைகள் உள்ளன. இந்த தசரா விற்பனையின் போது ஐசிஐசிஐ பேங்கின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை பயன்படுத்தி ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10% உடனடி தள்ளுபடி வழங்கப்படும். கோடக், எஸ்பிஐ, ஆர்பிஎல் வங்கி கார்டுகளுக்கும் 10% உடனடி தள்ளுபடி வழங்கப்படும்.

OnePlus Open: சாம்சங் இசட் ஃபோல்ட்க்கு போட்டியா.? 5கேமரா, 16ஜிபி ரேம்..அறிமுகமானது ஒன்பிளஸ் ஓபன்.!

இதில் சிறப்பு சலுகையாக ரூ.19,999 மதிப்புள்ள ஸ்மார்ட்போனை ரூ.9,999 என்ற விளக்கே பெற்றுக் கொள்ளலாம். அது எவ்வாறெனில் நீங்கள் ரூ.19,999 க்கு ஒரு ஸ்மார்ட்போனை வாங்குகிறீர்கள் என்றால், அதன் விற்பனை விலையானது, ஃபிளிப்கார்ட் தசரா சேலில் ரூ.15,999 ஆக இருக்கும். மேலும், இதற்கு ரூ.1000 வங்கி தள்ளுபடி மற்றும் ரூ.5000 கூடுதல் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கும்.

இதன்மூலம் ரூ.19,999 கொண்ட ஸ்மார்ட்போனை வெறும் ரூ.9,999க்கு வாங்கிக்கொள்ளல்லாம். இது மட்டுமின்றி, நீங்கள் வாங்க்கும் ஸ்மார்ட்போனிற்கு மாதம் ரூ.2,499 என்ற இஎம்ஐ வசதியும் உள்ளது. இந்த விற்பனையில் இந்த ஆண்டு இந்தியாவில் களமிறங்கிய கூகுள் பிக்சல் 8 மற்றும் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் தள்ளுபடி விலையை ஃபிளிப்கார்ட் பட்டியலிட்டுள்ளது.

அதன்படி, கூகுள் பிக்சல் 8 ரூ.75,999 என்ற ஆரம்ப விலையில் உள்ளது. இதற்கு ரூ.3,000 வரை எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி மற்றும் ரூ.8,000 வரை வங்கி சலுகையும் கிடைக்கிறது. இந்த சலுகைகளின் மூலம் கூகுள் பிக்சல் 8 இன் விலை ரூ.64,999 ஆக இருக்கும். இதேபோல, கூகுள் பிக்சல் 8 ப்ரோ ரூ.1,06,999 என்ற ஆரம்ப விலையில் உள்ளது.

12ஜிபி ரேம், 50எம்பி கேமரா, 6000mAh பேட்டரி.! பட்ஜெட் விலையில் களமிறங்கியது விவோ ஒய்33டி & ஒய்78டி.!

இதற்கு ரூ.4,000 வரை எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி மற்றும் ரூ.9,000 வரை வங்கி சலுகையும் கிடைக்கிறது. இந்த சலுகைகளின் மூலம் கூகுள் பிக்சல் 8 ப்ரோவின் விலை ரூ.64,999 ஆக இருக்கும். மேலும், பேஷன் பொருட்கள் மீது 50% முதல் 90% வரை தள்ளுபடி உள்ளது. விளையாட்டு மற்றும் அழகு சாதன பொருட்கள் மீது 40% முதல் 80% வரை தள்ளுபடியும், வீடு மற்றும் சமையல் பொருட்கள் மீது 30% முதல் 80% தள்ளுபடியும், ஃபர்னிச்சர்கள் மீது 80% தள்ளுபடியும் உள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாஙகிய சூர்ய குமார்.! டெல்லி அணிக்கு இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

57 minutes ago

175 பில்லியன் டாலரில் அமெரிக்காவை பாதுகாக்க `கோல்டன் டோம்’.., டிரம்ப் அறிவித்த திட்டம் என்ன?

வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…

2 hours ago

ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்.? ஊர்ந்தீர்களா? தவழ்ந்தீர்களா? ஸ்டாலின் மீது இபிஎஸ் விமர்சனம்.!

சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…

2 hours ago

MI vs DC: பிளே ஆஃப்-க்கு தகுதி பெறப்போவது யார்? டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு.!

மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும்  டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…

3 hours ago

அனகாபுத்தூர் ஆற்றங்கரையோர மக்களுக்கு மாற்று வீடு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

சென்னை : உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் சென்னையை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், அடையாறு நதியை…

4 hours ago

விசாகா கமிட்டி அமைக்காதது ஏன்? – அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி.!

சென்னை : பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் 'விசாகா கமிட்டி’ அமைக்காதது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி…

4 hours ago