சர்வதேச சந்தையில் மக்களிடம் ஏற்பட்ட அலைபேசி மோகத்தால் நல்ல முன்னேற்றமும்,விற்பனையும் என கலைகட்டி வந்த ஆப்பிள் ஐ போன் மோகம் தற்போது குறைந்துவருகிறது.இதன் தொடர்ச்சியாக சர்வதேச சந்தைகளில் விற்பனை குறைவு மற்றும் மக்களிடையே சாதனங்களுக்கான மோகம் குறைந்திருப்பதால் ஐபோன்களின் விலையை அதிரடியாக குறைக்க ஆப்பிள் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.அதன்படி,உலகின் மிகப்பெரிய சந்தையான சீனாவில் முதலில், ஐபோன் XR, ஐபோன் XS, ஐபோன் XS MAX, ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8+ உள்ளிட்ட மாடல்களின் விலையை குறைப்பதாக ஆப்பிள் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.
இதுபோக வாடிக்கையாளர்களை கவர விலை குறைப்பு மட்டுமின்றி பை-பேக் சலுகைகள் மற்றும் இதர தள்ளுபடிகளையும் வழங்க ஆப்பிள் நிறுவனம் ஆலோசனையும் நடைபெற்று வருகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த முடிவிற்கு பொதுமக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.இதை, ஆப்பிள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியான அறிவிப்பானது, ஐபோன் XR விலை $449 டாலர்கள், ஐபோன் XSன் விலை $699 டாலர்கள் முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய சந்தையான சீனாவில் முதலில் இந்த விலை குறைப்பு அறிமுகமாகியுள்ள நிலையில் விரைவில் இந்தியா மற்றும் இதர நாடுகளில் ஐபோன் விலை குறைப்பு சார்ந்த அறிவிப்பு வெளிவரும் என தெரிகிறது.இதனால் இந்த செய்தி ஐபோன் பிரியர்களை மிகுந்த ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
DINASUVADU.
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…