தொழில்நுட்பம்

5000 mAh பேட்டரி.. 100 வாட்ஸ் சார்ஜிங்.! வெளியானது ரியல்மீ 12 ப்ரோ+ அம்சங்கள்.!

Published by
செந்தில்குமார்

ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான ரியல்மீ (Realme), கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி ரியல்மீ 11 ப்ரோ 5ஜி சீரிஸை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதனையடுத்து நார்சோ மாடல்களில் கவனம் செலுத்தி வந்த ரியல்மீ,  ஜிடி சீரிஸில் ரியல்மீ ஜிடி 5 ப்ரோ (Realme GT5 Pro) ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது.

இதற்கு மத்தியில் ரியல்மீ 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களையும் தயாரித்து அறிமுகம் செய்யவுள்ளது. இதில் ரியல்மீ 12, ரியல்மீ 12 ப்ரோ மற்றும் ரியல்மீ 12 ப்ரோ+ ஆகிய மூன்று மாடல்கள் அறிமுகமாகலாம். இதில் ரியல்மீ 12 ப்ரோ+ போனின் ஒரு சில அம்சங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் களமிறங்கும் இன்ஃபினிக்ஸ்-ன் பட்ஜெட் போன்.! என்ன மாடல்..எப்போ அறிமுகம் தெரியுமா..?

அதன்படி, ரியல்மீ 12 ப்ரோ+ ஸ்மார்ட்போனில் 1.5K ரெசல்யூஷன் கொண்ட 6.7 இன்ச் அளவில் எல்டிபிஎஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய ஓஎல்இடி டிஸ்பிளே பொருத்தப்படலாம். இந்த டிஸ்பிளே 90 முதல் 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்டைக் கொண்டிருக்கலாம்.

வெளியான தகவலின் படி, இந்த ஸ்மார்ட்போனில் அட்ரினோ கிராஃபிக்ஸ் கார்டுடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 பிராசஸர் பொருத்தப்படலாம். இதற்கு முந்தைய ரியல்மீ 11 ப்ரோ சீரிஸ் மாடலில் மீடியாடெக் டைமன்சிட்டி பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

50 எம்பி டெலிஃபோட்டோ கேமராவுடன் அறிமுகமாகிறது ரியல்மீ ஜிடி 5 ப்ரோ.! எப்போ தெரியுமா.?

இதன் கேமராவைப் பொறுத்தவகையில், டிரிப்பில் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுடன் (OIS) கூடிய 50 எம்பி மெயின் கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 64 எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவை அடங்கும். செல்ஃபிக்காக 32 எம்பி கேமரா வரலாம் என்று கூறப்படுகிறது.

ரியல்மீ 12 ப்ரோ+ போனில் 5000 mAh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டிருக்கலாம். இதை சார்ஜ் செய்ய 100 வாட்ஸுக்கான ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெளியான 11 ப்ரோ சீரிஸ் ரூ.23,999 என்ற விலைக்கு அறிமுகமானது. அதே போல ரியல்மீ 12 ப்ரோ+ போனும் ரூ.25,999 என்ற விலைக்கு அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Recent Posts

ஈரோடு இரட்டைக் கொலை வழக்கு : 4 பேர் கைது!ஈரோடு இரட்டைக் கொலை வழக்கு : 4 பேர் கைது!

ஈரோடு இரட்டைக் கொலை வழக்கு : 4 பேர் கைது!

ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…

4 hours ago
குஜராத் அணி அசத்தல் வெற்றி! குதூகலத்தில் பெங்களூர், பஞ்சாப்!குஜராத் அணி அசத்தல் வெற்றி! குதூகலத்தில் பெங்களூர், பஞ்சாப்!

குஜராத் அணி அசத்தல் வெற்றி! குதூகலத்தில் பெங்களூர், பஞ்சாப்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…

4 hours ago
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது – சசிகலா சாடல்!திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது – சசிகலா சாடல்!

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது – சசிகலா சாடல்!

சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…

5 hours ago

பருவமழை முன்னெச்சரிக்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம்!

சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

5 hours ago

இன்று இந்த 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..அலர்ட் செய்த வானிலை மையம்!

தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…

6 hours ago

டெல்லியை பந்தாடி த்ரில் வெற்றி…முதல் அணியாக பிளே ஆஃப்க்கு தகுதி பெற்ற குஜராத்!

டெல்லி : அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது.…

6 hours ago