உலகம் முழுவதும் சுமார் 130 கோடி பேர் பயன்படுத்தும் ஓர் தகவல் பரிமாற்ற செயலி வாட்ஸாப். பேஸ்புக்கிற்கு கிழே செயல்படும் இந்த ஆப்பை இந்தியாவில் மட்டும் சுமார் 20 கோடி நபர்கள் பயன்படுத்துகிறார்கள். இதில் அதிகமாக புரளிகள் போலி செய்திகள் பரவுவதாகவும், ஆதலால் இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்தியாவில் ஓர் அதிகாரியை நியமிக்கவும் மத்திய அரசு கூறிவந்தது.
அமெரிக்கைவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனம் இந்தியாவில் பெரிய டீமை உருவாக்கி,தற்போது அதன் தலைவரை நியமித்துள்ளது. அபிஜித் போஸ் என்பவரை இந்தியாவின் வாட்சப் குழும தலைவராக நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக எஸ்டாப் எனப்படும் மின்னணு பணப்பரிமாற்ற செயலி நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தாண்டு தொடக்கத்தில் இவர் இந்தியாவில் வாட்சப் தலைவராக பொறுப்பேற்க உள்ளார். இந்தியாவில் அதிகமாக பரவி வரும் வாட்சப் வதந்திகளை கண்டறிந்து அதனை தடுப்பதே இவரின் முதல் வேலையாக இருக்கும்.
DINASUVADU
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…