இறுதிப்போட்டியில் கலந்துகொள்ளும் ஆஸ்திரேலிய துணைப்பிரதமர்..!

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான உலகக்கோப்பை இறுதிப்போட்டி  நாளை நடைபெறுகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் கலந்து கொள்கிறார் என பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில் இன்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியைக் காண பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்லஸும் கலந்துகொள்ளவதாக தகவல் வெளியான நிலையில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் போட்டிக்கான பாதுகாப்பு மற்றும் பிற ஏற்பாடுகளை … Read more

உலகக்கோப்பை தொடர் ஆட்டநாயகன் விருதுக்கு 4 இந்திய வீரர்கள் தேர்வு … யார் யார் தெரியுமா..?

அரையிறுதிக்கு தகுதி பெற்ற நான்கு அணிகளில் இருந்து ஒன்பது வீரர்கள் ஆட்டநாயகன் விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். இதில் 4 இந்திய வீரர்களும்,  2 ஆஸ்திரேலிய வீரர்களும், 2 நியூஸிலாந்து வீரர்களும் மற்றும் ஒரு தென்னாப்பிரிக்கா வீரர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அதன்படி நாமினி பட்டியலில் இந்திய வீரர்களில், விராட் கோலி , முகமது ஷமி , ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரும், ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் , ஆடம் ஜம்பா, நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா, டேரில் … Read more

உலகக்கோப்பை இறுதிபோட்டிக்கான நடுவர்கள் யார்..? வெளியான தகவல்.!

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இதனால், இறுதிப்போட்டியில் 2 முறை கோப்பையை கைப்பற்றிய இந்திய அணியும், ஐந்து முறை கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணியும் மோதவுள்ளது. கிரிக்கெட் ரசிகர் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்புகள் கொண்ட … Read more

# ஐசிசி அறிவிப்பு-T20உலககோப்பை ஒத்திவைப்பா??

ஐசிசி ஆண்கள் டி20 உலக கோப்பை தொடர் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐசிசி ஆண்கள் டி0 உலக கோப்பை தொடரை அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் ஆனது அடுத்த மாதமாகிய அக்டோபரில்  ஆஸ்திரேலியாவில் கோலகலமாக நடைபெறவிருந்தது. ஆனால் உலக முழுவதும்  கொரோனா தொற்று காரணமாக அடுத்த ஆண்டிற்கு போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் போட்டிஅடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் போட்டிகள் நடைபெறும் என்று தற்போது  ஐசிசி அதிரடியாக … Read more

ஆல்டைம் உலகக்கோப்பை லெவன் தேர்வு செய்த அப்ரிடி ! சச்சின் & இம்ரான் கானுக்கு இடமில்லை !

கொரோனா வைரஸ் காரணமாக இந்தாண்டு நடைபெற இருந்த கிரிக்கெட் தொடர்கள் அனைத்து ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால்  கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். அந்தவகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி உலகக்கோப்பை தொடரின் ஆல்டைம் லெவனை தேர்வு செய்துள்ளார். இதில் முக்கிய வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் இம்ரான் கானுக்கு இடமில்லை. சச்சின் டெண்டுல்கரின் ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.   சாகித் அப்ரிடியின் ஆல்டைம் ஐபிஎல் லெவன் :-  1. தொடக்க வீரர்கள் … Read more

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை தள்ளி வைக்கலா- இங்கிலாந்து வீரர்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை தள்ளி வைக்கலாம் என்று  இங்கிலாந்து வீரர் தெரிவித்துள்ளார்.  கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் பரவியது என்றாலும் தற்போது உலக நாடுகளை உலுக்கி வருகிறது.இதன்விளைவாக உலக நாடுகள் முடங்கியுள்ளது.கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.எனவே உலகில் நடைபெற இருந்த பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.   அந்த வகையில் வருகின்ற அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் உலக கோப்பை டி -20 போட்டி நடைபெற உள்ளது.எனவே கொரோனா பாதிப்பு காரணமாக உலக கோப்பை … Read more

#Under19WorldCup: கோப்பையை தட்டி தூக்கியது வங்கதேசம்.! போராடி தோற்றது இந்தியா.!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பைக் இறுதி போட்டியில் 3 விக்கெட் இழப்புக்கு வங்கதேச அணி வெற்றிபெற்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி தென் ஆப்ரிக்காவில்  நடைபெற்று  வருகிறது. இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இடையேயான இறுதிப்போட்டி இன்று சென்வெஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் … Read more

உலக கோப்பை இறுதிப்போட்டியில் நுழையுமா?இந்தியா..இன்று பங்காளி பாகிஸ்தானோடு பலபரீச்சை

13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது இன்று இந்திய -பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைய பலபரீச்சை  நடத்துகிறது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 13வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. கேப்டன் பிரியம் கார்க் தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது.இந்த தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி அரை இறுதிக்கு முன்னேறியது. அதன்படி இந்திய அணி தான் எதிர்கொண்ட லீக் ஆட்டங்களில் இலங்கை அணியை … Read more

உலகக் கோப்பை இறுதிப்போட்டி- தோல்வியுற்ற நியூசிலாந்து அணிக்கு சிறப்பு விருது..!

உலகக் கோப்பை NZ VS ENG இறுதிப்போட்டியில் விளையாடிய நியூசிலாந்து அணிக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து மனவுறுதி விருது வழங்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 10 அணிகளை கொண்டு உலகக்கோப்பை  போட்டி நடத்தப்பட்டது. அதில் இறுதியாக உலகக்கோப்பைக்கு இறுதிச் சுற்றில் நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகள் மோதின. ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து கொண்டு வந்தது. பின்பு இரு அணிகளும் ‘டிரா’வில் முடிந்ததால் சூப்பர் ஓவர் நடந்தது. இதுவும் டிரா ஆனதால், அதிக பவுண்டரிகள் அடித்துள்ள … Read more

உலகக்கோப்பை கால்பந்து கலந்துகொள்ளும் வாய்ப்பை இழந்த இந்திய அணி..!

2022 ஆம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பை போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் அணிகளுக்கான தகுதி போட்டிகள் நடைபெற்று வருகிறது. மொத்தம் 40 ஆசிய அணிகளை எட்டு பிரிவுகளாக பிரித்து தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி “இ” பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்திய அணி விளையாடிய நான்கு போட்டிகளில் 3 போட்டிகளில் டிரா , ஒரு போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. வெற்றி பெற வேண்டும் என்ற முக்கியமான போட்டியில் ஓமன் அணியை … Read more