இந்தியாவில் 800 மில்லியன் டாலர் மதிப்புள்ள 4 திட்டங்களுக்கு உலக வங்கி ஒப்புதல்..!

இந்தியாவில் 800 மில்லியன் டாலர் மதிப்புள்ள நான்கு திட்டங்களுக்கு உலக வங்கி நிர்வாக இயக்குநர்கள் குழு நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த திட்டங்கள் பலவிதமான வளர்ச்சி முயற்சிகளை ஆதரிக்கின்றன. இந்தியாவின் சமூக பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துதல், சத்தீஸ்கரில் உள்ள பழங்குடியின குடும்பங்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் விவசாயத்தை ஊக்குவித்தல், நாகாலாந்தில் தரமான கல்வியை மேம்படுத்துதல் மற்றும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தற்போதுள்ள அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்துதலுக்கு உதவுகிறது. இந்த நான்கு திட்டங்கள் ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய … Read more

6 இந்திய மாநிலங்களில் கல்வி தரத்தை மேம்படுத்த ரூ.3,700 கோடி கடன்- உலக வங்கி .!

இந்தியாவில் 6 மாநிலங்களில் பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்த உலக வங்கி ரூ.3,700 கோடி கடன் அளிக்க ஒப்புதல் கொடுத்துள்ளது. உலக வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில், இந்திய மாநிலங்களில் பள்ளிக் கல்வி தரத்தை மேம்படுத்தவும் அனைவருக்கும் கல்வி என்ற அரசின் லட்சியத்துக்கு ஆதரவு அளிக்க கடந்த 1994-ம் ஆண்டு முதல் உலக வங்கியுடன், இந்திய அரசு இணைந்து செயல்பட்டு வருகிறது. கடந்த 24-ஆம் தேதி உலக வங்கியின் நிா்வாக இயக்குநா்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த … Read more

100 நாடுகளுக்கு 160 பில்லியன் டாலர் – உலக வங்கி அதிரடி அறிவிப்பு.!

கொரோனாவால் பாதித்த 100 நாடுகளுக்கு சுமார் ரூ.12 லட்சம் கோடி நிதி ஒதுக்கி உலக வங்கி அறிவித்துள்ளது. உலக முழுவதும் கொரோனா வைரஸ் சுமார் 200 நாடுகளில் பரவி உள்ளது. இந்த கொடிய வைரசால் இதுவரை 50,90,157 பேர் பாதிக்கப்பட்டு, 3,29,739 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. பொதுமுடக்கம் காரணமாக தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், பொது போக்குவரத்து சேவைகள் முடங்கியுள்ளது. இதனால் பொருளாதாரம் கடும் சரிவை … Read more

கொரோனாவால் இந்திய பொருளாதாரம் கடும் வீழ்ச்சி.! – உலக வங்கி தகவல்.!

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இந்திய பொருளாதாரம் கடும் சரிவை சந்திக்கும் சூழல் நிலவி வருகிறது. இந்திய பொருளாதாரத்தின் இந்த சரிவு குறித்து, உலக வங்கி தனது அறிக்கையில், கொரோனா வைரஸ் காரணமாக இந்திய பொருளாதாரம் சரிவடையும் என கூறப்பட்டுள்ளது.  மேலும், உலக வங்கி அறிக்கையில் இந்தியாவை பற்றி கூறுகையில் , ‘ இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடையும். இந்த ஆண்டு இந்திய … Read more

ரூ.90,000 கோடி நிதி ஒதுக்கிய உலக வங்கி.! உடனடியாக நடவடிக்கை எடுங்கள்.!

உலகெங்கிலும் கொரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,131 ஆக அதிகரித்துள்ளது. சீனா உட்பட உலகம் முழுவதும் 92,312 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழை நாடுகளில் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும் வகையில் ரூ.90,000 கோடி உலக வங்கி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மக்களுக்கு சுகாதார வசதிகளை விரைந்து கிடைக்கச்செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சி விகிதம் அதிகரிக்குமாம் உலகவங்கி தகவல் எப்படி…??

  2018-ம் ஆண்டு இந்தியா 7.3 வளர்ச்சி இலக்கை அடையும் என உலக வங்கியானது தனது ஆய்வறிக்கையில் கூறியுள்ளது. உலக பொருளாதார முன்னேறம் குறித்து உலக வங்கி அளித்துள்ள ஆய்வறிக்கையில், இந்தியாவி்ல் 1000,500 ரூபாய் நோட்டு ஒழிப்பு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு உள்ளிட்ட காரணங்களால் 2017-ல் வளர்ச்சி விகிதம் 6.7 சதவீதமாக குறைந்திருந்தது.ஆனால் தற்போதைய நிலவரப்படி 2018-ம் ஆண்டில் இது 7.3 சதவீதமாகவும் அடுத்த இரண்டு ஆண்டுகளி்ல் 7.5 சதவீத உயருவதற்கு சாத்தியம் உள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து உலக வங்கியின் மேம்பாட்டு இயக்குனர் … Read more