பாகிஸ்தானில் கல்குவாரியில் பாறை சரிந்ததில் 22 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பக்துங்வா மாகாணம் மொஹமண்ட் மாவட்டத்தில் பளிங்கு கல் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல இதில் ஏராளமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென பெரிய பாறை ஒன்று சரிந்து தொழிலாளர்கள் மீது விழுந்ததால் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அதில் சிக்கிக்கொண்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் பாறைகளை அகற்றி மீட்பு பணிகளை ஆரம்பித்தனர். […]