மகாராஷ்டிரா: பெண் காவலர்களுக்கு பணி நேரம் குறைப்பு..!

மகாராஷ்டிர மாநிலத்தில் பெண் காவலர்களுக்கு பணி நேரம் குறைக்கப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது.  இன்று காவல்துறை இயக்குநர் சஞ்சய் பாண்டே தெரிவித்துள்ளதாவது, மகாராஷ்டிர மாநிலத்தில் பெண் காவலர்களுக்கு பணி நேரம் குறைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் கூறிய அவர் மகாராஷ்டிர அரசு, பெண் போலீசாரின் பணி நேரத்தை 12 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரமாக குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி நேரமானது விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் பாதுகாப்பு பணியில் கை குழந்தையுடன் பணியில் ஈடுபட்ட பெண் காவலர்..!

உத்தர பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கவுதமபுத்தர் பகுதிக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று நொய்டா நகரில் ரூ.1,452 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்தார். மேலும்  ரூ.1,369 கோடி மதிப்பிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவிலும் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் தருண் விஜய் ,மகேஷ் சர்மா  போன்ற எம்.பி.க்களும் கலந்து கொண்டனர். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு பாதுகாப்புக்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்களில் பெண் காவலர் பிரீத்தி ராணி ( … Read more

பெண் காவலருக்கு காதல் கடிதம் கொடுத்த மனோகரன்..!

கோவை இரட்டை கொலை வழக்கில் மனோகரனுக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு தற்போது கடலூரில் உள்ள மத்திய சிறையில் உள்ளார்.இதற்கு முன் கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த போது மனோகரனை கடந்த சில மாதங்களுக்கு முன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த செல்லும் போது பாதுகாப்புக்காக வந்த பெண் போலீசாருக்கு காதல் கடிதம் கொடுத்தாததாக தெரிகிறது. அதற்கு அந்த பெண் போலீசார் மனோகரனை கண்டித்து உள்ளார்.இதனால் மனோகரன் தனக்கு தானே கைவிலங்கு மூலம் தாக்கி கொண்டார்.இதில் மனோகரனுக்கு கையில் காயம் … Read more

காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு வளைகாப்பு..!

சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு காவல் நிலையத்தில்  பெண் காவலருக்கு  சக காவலர்கள் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர். அண்ணா சாலை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவலராக வேலை செய்து வருபவர் ஷில்பா. இவர் 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவருக்கு சக காவல் நிலையத்தில் வேலை செய்யும் காவலர்கள் சேர்ந்து ஷில்பாவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர். மேலும் வீடுகளில் குடும்பத்தினர் போன்று சீர் வரிசைகள் கொடுத்து வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர்.

தன் தலை முடியை தானமாக கொடுத்த கேரளா பெண் அதிகாரி..! எதற்கு தெரியுமா ..?

கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்த அபர்ணா லவகுமார். இவர் சிவில் பெண் காவல்   அதிகாரியாக உள்ளார். கேரளா பெண்களுக்கு முடியே தனி அழகுதான். அபர்ணாவிற்கு தலை முடி முழங்கால் வரை இருக்கும். இந்நிலையில் தன்னுடைய தலை முடியை புற்றுநோயாளிகளுக்கு காணிக்கையாக  அளித்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் அதிகாரி அபர்ணா கூறுகையில், ஹீமோதெரபி சிகிச்சைக்கு பின்னர் தலைமுடி இல்லாமல் வாடும் புற்றுநோயைகளை பார்த்த பிறகுதான் இந்த  முடிவு செய்தேன். புற்று நோயால் பாதிக்கப்படும் குழந்தைகள் உடன் படிக்கும் மற்ற குழந்தைகள் … Read more

மூதாட்டிக்கு உடை மாற்றி விட்ட பெண் போலீசாருக்கு குவியும் பாராட்டு ..!

மத்திய பிரதேசத்தில் உள்ள பெண் போலீஸ் அதிகாரி சாரதா  சுக்லா. இந்த பெண் அதிகாரி உடை மாற்ற முடியாமல் தவித்துக்கொண்டிருந்த மூதாட்டிக்கு உடை மாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது. இந்த வீடியோவை மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பகிர்ந்து சாரதாவுக்கு பாராட்டுக்களை கூறியுள்ளார்.  அந்த வீடியோவில் உடை மாற்ற முடியாமல் தவித்துக் கொண்டிருந்த மூதாட்டிக்கு பெண் போலீசார் சாரதா உடை  மாட்டி விட்ட பின்னர் அந்த மூதாட்டி சாரதாவை கட்டிப்பிடித்து ஆசிர்வாதம் … Read more

டிக் டாக் மோகத்தால் சீருடை இல்லாமல் லாக்-கப்பில் குத்தாட்டம் போட்ட பெண் காவலர் சஸ்பெண்ட்

குஜராத் மாநிலத்தில் உள்ள மெஹசானா மாவட்டத்தில் உள்ள லங்னாஜ் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணி செய்து வந்தவர் அர்பிதா சவுத்ரி.இவர் டிக் டாக் செயலியை பயன்படுத்தி வந்து உள்ளார். இந்த டிக் டாக்கில் மற்றவர்களை போல தாமும் வீடியோ செய்து வெளியிட வேண்டும் என எண்ணி உள்ளார்.இதை தொடர்ந்து பெண் காவலர் அர்பிதா சவுத்ரி காவல் நிலையத்தில்  உள்ள லாக் அப்பில் சீருடை இல்லாமல் இந்தி பாடலுக்கு குத்தாட்டம் போட்டு உள்ளார். அர்பிதா சவுத்ரி குத்தாட்டம் … Read more