மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் – வானிலை மையம் எச்சரிக்கை.!

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை அளித்துள்ளது. தமிழகத்தில் மீனவர்கள் அடுத்த 5 நாட்களுக்கு அரபிக் கடல் பகுதிக்குச் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை அளித்துள்ளது. மேலும், நீலகிரி, சேலம், தருமபுரி, ஈரோடு, கரூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது.