அமெரிக்காவின் முதல் கருப்பின செயலாளராகிறார் – லாயிட் ஆஸ்டின்

அமெரிக்கா: ஓய்வுபெற்ற ராணுவ ஜெனரல் லாயிட் ஆஸ்டின் நேற்று அமெரிக்காவின் முதல் கருப்பு பாதுகாப்பு செயலாளராக ஆனார்.100 உறுப்பினர்களைக் கொண்ட அறையில் 93-2 வாக்குகளில் வெள்ளிக்கிழமை அவரை உறுதிப்படுத்த செனட் வாக்களித்தது. பதவியேற்ற பின்னர், ஆஸ்டின் பென்டகன் தலைவராக தனது முதல் புலனாய்வு விளக்கத்தைப் பெற்றார். பின்னர் அவர் கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்த உயர் பாதுகாப்புத் துறை தலைவர்களுடன் ஒரு கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். ஒரு காலாட்படைப் பிரிவு மற்றும் இராணுவப் படைகள் இரண்டையும் கட்டளையிட்ட … Read more

நான்கு பேர் உயிரிழப்பு., வன்முறை பற்றிய செய்திகள் வேதனை அளிக்கிறது – பிரதமர் மோடி

வாஷிங்டன் டி.சி.யில் நடைபெறும் வன்முறை பற்றிய செய்திகள் வேதனை அளிக்கிறது என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்கா வாஷிங்டனில் டி.சி.யில் நடைபெறும் கலவரம் மற்றும் வன்முறை பற்றிய செய்திகள் வேதனை அளிக்கிறது. அமெரிக்க அதிபர் அதிகார மாற்றம் அமைதியாக நடைபெற வேண்டும். சட்ட விரோத ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஜனநாயக வழிமுறையைத் தகர்த்தெறிய அனுமதிக்க முடியாது என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனிடையே, அமெரிக்கா தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ … Read more

மீண்டும் கருப்பின இளைஞன் கொலை – வாஷிங்கடனில் வெடித்த கலவரம்!

கருப்பின இளைஞர் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு அமெரிக்காவில் மீண்டும் போராட்டம். அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கு எதிரான வன்முறை நீடித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ஜார்ஜ் ஃ பிளாயிட் எனும் கருப்பின இளைஞர் போலீசாரால் கொடூரமாக கொல்லப்பட்டு, அவனுக்காக நீதி கேட்டு பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தது. இந்த பிரச்சினையை இன்னும் முடிவடையாத நிலையில் தற்போது மற்றொரு இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். தலைநகர் வாஷிங்டனில் ஜேக்கப் பிளேக் என்னும் மற்றொரு இளைஞர் கொல்லப்பட்டதை … Read more

காற்றில் பரவும் கொரோனா.? தடுப்பதற்கு இதுதான் சிறந்த வழி.!

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் தலைமுடி, இருமல், தும்மலிலிருந்து கொரோனா வைரஸ் காற்றில் பரவி அருகில் இருப்பவர்களின் நாசி துவாரம் வழியாக எளிதில் மனிதர்களின் மூச்சுக்குழலில் ஆழமாக சென்றுவிடுகிறது. என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் காற்றில் பரவுமா என பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. இதனை பற்றி நோபல் பரிசு பெற்ற மரியோ ஜே.மோலினா உள்ளிட்ட விஞ்ஞானிகள் அடங்கிய குழு மூன்று குழுக்களாக வுகான் நகர் சீனா, வாஷிங்க்டன் நகரம் அமெரிக்கா, இத்தாலி ஆகிய இடங்களில் ஆராய்ச்சி மேற்கொண்டனர். காற்றில் … Read more

அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் காந்தி சிலை அவமதிப்பு! போலீசார் தீவிர விசாரணை!

அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் காந்தி சிலை அவமதிப்பு. அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள,  மின்னியாபோலீஸ் நகரத்தில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டிருந்த நிலையில், ஜார்ஜ் போலீஸ் அதிகாரி ஒருவரால், ஈவு இரக்கமற்ற முறையில், முழங்காலால் கழுத்து நெரித்து  கொல்லப்பட்டார்.  ஜார்ச், போலீஸ் அதிகாரியிடம், கெஞ்சி கேட்ட போதும், அந்த போலீஸ் அதிகாரி இரக்கம் காட்டவில்லை. இதனையடுத்து இவர் கொடூரமாக கொல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியான நிலையில்,  போலீஸ் … Read more

இந்தியாவுக்கு புறப்பட்ட அமெரிக்கா அதிபர் டிரம்ப்..! 

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நாளை அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வருகிறார். இந்நிலையில், வாஷிங்டனிலிருந்து தனி விமானம் மூலம் இந்தியா புறப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், நாளை அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வருகிறார். ட்ரம்புடன் அவரின் குடும்பத்தினரும் வருகின்றனர். இந்தியாவுக்கு முதல் முதலாக வரும் டிரம்ப், நாளை, நாளை மறுநாள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அதிபர் ட்ரம்ப் பார்வையிடும் தாஜ்மஹால், டெல்லி மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் துணை ராணுவ படையினர், போலீஸார் பலத்த … Read more