விக்கிரவாண்டியில் உள்ள ஒரு சாவடியில் எந்திரம் கோளாறு ..!

இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இடைதேர்தல் நடைபெற்று வருகிறது. அதன் படி விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி  மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைப்பெறும். இந்நிலையில் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எந்திரகோளாறால் ஒருமணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தபட்டு உள்ளது.235ஆவது எண் கொண்ட இந்த  வாக்குச்சாவடியில் பழுதடைந்த இயந்திரத்தை சீரமைக்க அலுவலர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியா? போட்டியிட விருப்பமனு தாக்கல்

உதயநிதி ஸ்டாலின் விக்கிரவாண்டி தொகுதியில்  போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்களவை மற்றும் இடைத்தேர்தலிலும் உதயநிதி ஸ்டாலின் திமுகவிற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும்ர தேர்தல் பிரச்சாரங்களை செய்து வந்தார்.கடந்த சில மாதங்களாக  அவரது அரசியல் செயல்பாடு அதிகமாகவே இருந்து வந்தது. இதனையடுத்து  திமுகவின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின்  நியமனம் செய்யப்பட்டார். திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்  செய்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார்.37 ஆண்டுகாலமாக … Read more