சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மாநில சுகாதாரத்துறை புள்ளி விவரத்தின் படி,தமிழகத்தில் கடந்த 26 நாட்களில் இல்லாத அளவுக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதன்படி,தமிழகத்தில் நேற்று கோவை நர்சிங் கல்லூரியில் 46 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக,கேரளாவில் இருந்து வந்த நான்கு மாணவர்களால் மற்றவர்களுக்கு கொரோனா பரவியது என்று கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் விடுதி […]
தமிழகத்தில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி முதல் தொடங்கி இம்மாதம் 28-ம் தேதி வரை அவகாசம் வழங்கிய நிலையில், கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் விண்ணப்பிக்க அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று வருகின்ற அக்டோபர் 9 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டே புதிதாக ஒரு கால்நடை மருத்துவ கல்லூரி தொடங்கப்படும். நாடு முழுவதும் இன்று 74-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், பல கட்டுப்பாடுகளுடன், சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. முதல்வர் பழனிசாமி 4-வது முறையாக கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றிய முதல்வர் பழனிசாமி, இந்த நிகழ்வின் போது பலருக்கு விருதுகள் வழங்கிய நிலையில், இந்தாண்டே புதிதாக ஒரு கால்நடை மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.