மைசூர்பாக்கை நாங்களே சாப்பிட்டு விடுவோம் அப்புறம் பாத்துக்கோங்க

தமிழகத்திற்கு மைசூர்பாகுவிற்கான புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதாக டுவிட்டரில் வதந்தி ஒன்று பரவியது. இதனால் கொதித்தெழும்பிய கன்னட அமைப்பு ஒன்றின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தமிழகத்திற்கு மைசூர்பாக்கை கொண்டு செல்ல விடமாட்டோம், அப்படி மீறி கொண்டு செல்லப்பட்டால் மாநில எல்லையில் மைசூர்பாக்கை தடுத்து நாங்களே சாப்பிட்டு விடுவோம் என்று தெரிவித்துள்ளார்.