புதிய கொரோனாவிற்கு தடுப்பூசி தேவையா..? மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!

 உலகம் முழுவதும் பேரழிவை உருவாக்கிய கொரோனா வைரஸின் புதிய துணை மாறுபாடு JN.1 இந்தியாவிற்குள் நுழைந்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  கேரளாவில் முதலில் பரவிய பிறகு, கோவா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில்  வேகமாக அதிகரித்து வருகின்றன. இதனிடையே, மாநில அரசுகள் உஷாராக இருக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.  இந்நிலையில், JN.1கொரோனாவிற்கு தற்போது பூஸ்டர் டோஸ் அல்லது நான்காவது தடுப்பூசி போட வேண்டிய அவசியம் இல்லை என … Read more

சிக்குன்குனியாவிற்கு முதல் தடுப்பூசி… கிரீன் சிக்னல் கொடுத்த அமெரிக்கா ..!

சிக்குன்குனியா தடுப்பூசி: சிக்குன்குனியா வைரஸிற்கான உலகின் முதல் தடுப்பூசிக்கு அமெரிக்க சுகாதார அதிகாரிகள் நேற்று ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த தடுப்பூசி ஐரோப்பாவின் வால்னேவாவால் உருவாக்கப்பட்டது. இந்த தடுப்பூசி  “Ixchiq” என்ற பெயரில் விற்கப்படும். சிக்குன்குனியா வைரஸ் தடுப்பூசி 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு சிக்குன்குனியா வைரஸின் அதிக ஆபத்தில் இருக்கும் போது அவர்களுக்கு  வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Today, we approved the first chikungunya vaccine for individuals 18 years of age … Read more

மத்திய அரசுக்கு 2 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசியை இலவசமாக வழங்கிய சீரம் நிறுவனம்..!

சீரம் நிறுவனம், மத்திய அரசுக்கு 2 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசியை இலவசமாக வழங்கியுள்ளது. சீனா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், இந்தியாவில் புதிய வகை கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் சீரம் நிறுவனம் கோவிஷீல்ட் தடுப்பூசியை தயாரித்து வருகிறது. இந்த நிலையில், சீரம் நிறுவனம், மத்திய அரசுக்கு 2 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசியை இலவசமாக வழங்கியுள்ளது. மேலும், கொரோனா அச்சம் எழுந்துள்ள நிலையில் … Read more

உலகில் முதல்முறையாக மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி!

உலகிலேயே முதல்முறையாக மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வந்த நிலையில், சமீப காலமாக தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகிலேயே முதல்முறையாக மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த மருந்துக்கு மத்திய மருந்து தர கட்டுப்பாடு … Read more

செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள் கவனத்திற்கு…! இன்று இலவச தடுப்பூசி முகாம்…!

இன்று உலக ரேபிஸ்   செல்லப்பிராணிகளுக்கு இலவச தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறுகிறது.  இன்று உலக ரேபிஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து செல்லப்பிராணிகளுக்கு இலவச தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறுகிறது. அனைத்து கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகங்களில் காலை 8 முதல் பகல் 12 மணி வரை ரேபிஸ் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. வீடுகளில் செல்லப் பிராணிகளை வளர்க்கும் பொது மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி செல்லப்பிராணிகளை நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்துமாறு கால்நடை பராமரிப்பு துறை … Read more

பொதுமக்கள் கவனத்திற்கு…! தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம்…!

தமிழகத்தில் இன்று 50 ஆயிரம் இடங்கள் தடுப்பூசி முகாம்  நடத்தப்படவுள்ளது. தமிழகத்தில் சமீப நாட்களாகவே பல இடங்களில் காய்ச்சல் பரவி வருகிறது.  அதிலும், ப்ளூ வைரஸ் காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்களும் பரவி வருகிறது. இதனையடுத்து, தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் இன்று 50 ஆயிரம் இடங்கள் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிஷீல்ட் தடுப்பூசியால் ஏற்பட்ட மகளின் மரணம் தொடர்பாக இந்திய சீரம் நிறுவனம் மற்றும் பில் கேட்ஸ் மீது வழக்கு தொடர்ந்த தந்தை!!

எஸ்ஐஐ இன் கோவிஷீல்டு தடுப்பூசியின் பக்கவிளைவுகளால் தனது மகள் இறந்துவிட்டதாகக் கூறி ஒருவர் தாக்கல் செய்த மனுவில், பம்பாய் உயர் நீதிமன்றம், இந்திய சீரம் நிறுவனம் (எஸ்ஐஐ) மற்றும் தொழிலதிபர் பில் கேட்ஸிடம் இருந்து பதில் அளிக்க  கோரியது. மனுதாரர், திலீப் லுனாவத், கோவிட்-19 க்கு எதிரான தடுப்பூசியை தயாரிப்பதில் இந்திய சீரம் நிறுவனம் முயற்சிகளுக்கு நிதியளித்ததால், பில் கேட்ஸை வழக்கில் ஒரு குற்றவாளியாக சேர்த்ததாக, பார் அண்ட் பெஞ்ச் தெரிவித்துள்ளது. லுனாவத் தனது மனுவில் மருத்துவ … Read more

தமிழகம் முழுவதும் நாளை மெகா தடுப்பூசி முகாம்..!

தமிழகம் முழுவதும் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் தடுப்பூசி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. சென்னையில் ஒரு வார்டுக்கு 10 என 200 வார்டுக்கு 2 ஆயிரம் முகாம் நடைபெற உள்ளது.

பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த பில்கேட்ஸ்..!

200 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தியது சிறந்த நிர்வாகத்தின் மற்றொரு மைல்கல் என பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து பில்கேட்ஸ் ட்வீட். இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைமேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வண்ணம் இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்தியா முழுவதும் தடுப்பூசி போட்டுக் கொண்டோர்  எண்ணிக்கை இருநூறு … Read more

இன்று முதல் 75 நாட்களுக்கு இலவச பூஸ்டர் டோஸ்..!

இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை, டெல்லியில், அமைச்சர் மன்சூக் மாண்டவியா தொடங்கி வைத்தார். ஜூலை 15-ஆம் தேதி முதல் 75 நாட்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆன நிலையில், 75 நாட்களுக்கு இலவச பூஸ்டர் டோஸ் அளிக்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்து இருந்தது. இந்த  நிலையில், இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி … Read more