மேற்குவங்கத்தில் பொதுமுடக்கம் ஜூலை 31 வரை நீட்டிப்பு.. முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவு!

மேற்கு வங்கத்தில் பொதுமுடக்கத்தை ஜூலை 31 வரை நீடிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அம்மாநிலத்தில் பொதுமுடக்கத்தை ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்க அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், மாநில அரசு அனுமதித்துள்ள வணிக வளாகங்கள், உணவகங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் திறக்க அம்மாநிலத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு மெட்ரோ ரயில் சேவை மற்றும் பள்ளி கல்லூரிகள் திறக்க அனுமதி இல்லை … Read more

நாளை முதல் தமிழகத்தில் தனியார் பேருந்துகள் ஓடும்..!

சென்னை உட்பட 4 மாவட்டங்களை தவிர தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பேருந்துகள் ஓடவில்லை. இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர பிற இடங்களில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயங்கும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க செயலாளர் தர்மராஜ் அறிவித்துள்ளார். மேலும், பேருந்தில் 60 சதவீத பயணிகளை ஏற்றிச்செல்ல … Read more

கேரளாவில் 9 ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு.. முதல்வர் அறிவிப்பு!

கேரளாவில் ஜூன் 9 ஆம் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தளங்களும் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.  இந்தியாவில் கொரோன வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்பொழுது சில தளர்வுகளுடன் ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இதில், பல துறைகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டது. இந்நிலையில், கேரளாவில் ஜூன் 9 ஆம் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தளங்களும் திறக்கப்படும் என அம்மாநில … Read more

( SOPs )வெளியீடு.! உணவகங்களில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள்.!

ஜூன்-8ம் தேதி முதல் உணவகங்கள் திறப்பதால் புதிய நடைமுறை ( SOPs) மத்திய அரசு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 மாத காலமாக உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தற்போது இந்த 5-ம் கட்ட ஊரடங்கில் சில தாளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன்-8ம் தேதி முதல் உணவகங்கள்  திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.  அவ்வாறு உணவகங்கள்திறக்கும் போது, கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை … Read more

Unlock 1.0: மால்கள், ஹோட்டல்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன.. புதிய SOPs வெளியீடு.!

ஜூன் 8 முதல் ஷாப்பிங் மால், தியேட்டர் திறப்பதினால் புதிய நடைமுறை ( SOPs) மத்திய அரசு ஒன்றை வெளியிட்டுள்ளது. UNLOCK 1.0  கீழ் ஜூன் 8 முதல் வழிபாட்டுத் தலங்கள் பொதுமக்களுக்காக திறக்கப்படுகின்றன. கொரோனா பரவலை தடுக்கும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு நடைமுறை ( SOPs) ஒன்றை வெளியிட்டுள்ளது. UNLOCK 1.0 இல் 3ஆம் கட்டத்தில் மெட்ரோ ரயில், சினிமா மால்கள் , நீச்சல் குளம், ஜிம் மற்றும் பொழுதுபோக்கு … Read more

பேருந்தில் நின்றுகொண்டு பயணம்.! காற்றில் பறக்கும் சமூக இடைவெளி.!

திருச்செந்தூர் – திருநெல்வேலி மார்க்கமாக செல்லும் பேருந்துகளில் பயணிகள் வழக்கம் போல அனைத்து இருக்கைகளிலும் அனைவரும் அமர்ந்தும், மேலும், பலர் நின்றுகொண்டும் பயணித்து வருகின்றனர். இதனால், கொரோனா பரவும் அபாயம் அதிகமாக காணப்படுகிறது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டிருந்த 5 கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் விடப்பட்டிருந்தன. அதில் முக்கியமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலங்களை தவிர மற்ற மண்டலங்களில் 50 சதவீத பேருந்து இயக்கப்பட்டது திருநெல்வேலியில் இருந்தும் தினமும், தூத்துக்குடி, … Read more

நெல்லை போக்குவரத்து கழகத்தில் இருந்து இன்று முதல் 900 பேருந்துகள் இயக்கம்.!

நெல்லை போக்குவரத்து கழகத்தின் கீழ் இன்று 900 பேருந்துகள் இயங்க உள்ளது. காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையில் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.  தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள 5ஆம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, தமிழக மாவட்டங்கள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து மற்ற 6 மண்டலங்களில் மண்டலங்களுக்குள் 50 சதவீத பேருந்துகளை மட்டும் 60 சதவீத பயணிகளுடன் (40 … Read more

இந்த மாவட்டத்தில் நாளை பேருந்துகள் இயங்காது.! ஆட்சியர் அதிரடி.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் நாளை பேருந்து இயங்காது. பேருந்து இயக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 5 ஆம் கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் ஜூன் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக மாவட்டங்கள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய  மற்ற இரு மண்டலங்களை தவிர்த்து, மற்ற மண்டலங்களில் நாளை முதல் பொதுப்போக்குவரத்து சேவை 50 சதவீத பயணிகளுடன் மண்டலங்களுக்குளேயே இயங்க அனுமதி … Read more

ஊரடங்கு 5.0 இவற்றுக்கெல்லாம் தமிழகத்தில் தடை தொடரும்.. தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது. மத்திய அரசு நேற்று வெளியிட்ட விதிமுறைகளின் படி, சில தளர்வுகளுடன் தமிழக அரசு, தமிழகத்தில் ஜூன் 30 வரையில் ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது. வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு … Read more

இந்த மாவட்டங்களில் பேருந்துகள் இயங்குவதற்கான தடை தொடர்கிறது.!

தமிழகத்தில் பிரிக்கப்பட்டுள்ள 8 மண்டலங்களில், மண்டலம் 7 மற்றும் 8 இல் பெருத்து இயங்குவதற்கான தடை ஜூன் 30 வரையில் தொடர்கிறது. மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி, தமிழகத்தில் 5ஆம் கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் ஜூன் 30 வரையில்  தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.  இதில் மண்டலம் 7 (காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு), மண்டலம் 8 ( சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி) ஆகிய மண்டலங்களை தவிர்த்து, … Read more