ஒரத்தநாடு திமுக ஒன்றியச் செயலாளர் காந்தி கொரோனாவால் உயிரிழந்துள்ளார். தஞ்சை மாவட்டtத்தைச் சேர்ந்த ஒரத்தநாடு திமுக ஒன்றியச் செயலாளர் காந்தி கொரோனாவால் உயிரிழந்துள்ளார். கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட காந்தி (வயது 55) திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிர்ழந்துள்ளார். கொரோனாத் தொற்றுக்கு அரசியல் பிரமுகர் காந்தியின் மரணம் ஒரத்தநாடு பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.