கோடநாடு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்தி பேச அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உய்ரநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் சனாதன சர்ச்சை விவகாரம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாஜக அரசை விமர்சித்து அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், அதிமுகவையும் கடுமையாக விமர்சித்திருந்தார். சனாதனம் என்றால் என்ன என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து தேடிக்கொண்டிருக்கும் எடப்பாடி அவர்களே, கோடநாடு கொலை, கொள்ளை வழக்குகளிலும், ஊழல் வழக்குகளில் […]
அதிமுகவும், பாஜகவும் எங்களுக்கு ஒன்றுதான் என திமுகவுக்கும், பாஜகவுக்கும்தான் இனி போட்டி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய கருத்து தொடர்பான கேள்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார். அதிமுக – பாஜக கூட்டணி முறிவிற்கு பிறகு நேற்று சென்னை தி- நகரில் பாஜக கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வகைகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். […]
கடந்த செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி சென்னையில், காமராஜர் அரங்கில் , தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் “சனாதன ஒழிப்பு மாநாடு ” எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு, திமுக எம்பி ஆராசா , திராவிடர் கழகம் தலைவர் கீ.வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்த நிகழ்ச்சிக்கு சனாதன எதிர்ப்பு மாநாடு என வைக்காமல் , சனாதன ஒழிப்பு மாநாடு […]
விளிம்பு நிலை மக்களை மேம்படுத்தும் துறைகள் உதயநிதியிடம் வழங்கப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் பேச்சு. விமர்சனத்துக்கு தனது செயல்பாடுகளால் பதில் சொல்லி அனைவரது பாராட்டையும் பெறுபவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்று திருச்சியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் விளிம்பு நிலை மக்களை மேம்படுத்தும் துறைகள் உதயநிதியிடம் வழங்கப்பட்டுள்ளது என்றும் தனக்கு ஒதுக்கப்பட்ட துறையை சிறப்பாக நடத்தி அனைவரது பாராட்டையும் பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் கூறியுள்ளார்.
இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 அறிவிப்பு எப்போது என்று முதல்வர் அறிவிப்பார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி. தமிழக அமைச்சரவையில் 35-ஆவது அமைச்சராக நேற்று சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றார். உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. அமைச்சராக பொறுப்பேற்ற உடனே விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு உள்ளிட்ட 3 முக்கிய கோப்புகளில் உதயநிதி ஸ்டாலின் நேற்றே கையெழுத்திட்டார். முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் அமைச்சராக பொறுப்பேற்ற […]
அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து ட்வீட். சென்னை ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றார். உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்என் ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனைத்தொடர்ந்து, சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தனது அறையில் இளைஞர் நலத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார் 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். தமிழக அமைச்சரவையில், அமைச்சர் உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் […]
2010 தேர்தலில் எப்படி உங்களை விரட்டினோமோ, 2024 தேர்தலிலும் விரட்டுவோம் என இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் உதயநிதி பேச்சு. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்தி திணிப்பு மற்றும் ஒரே மாதிரியான நுழைவு தேர்வு ஆகியவற்றை எதிர்த்து, அதனை திரும்ப பெற வலியுறுத்தி திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்தி […]
சியான் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “கோப்ரா”. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்க, இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டே இந்த படம் வெளியாகவிருந்தது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி சென்றே போனது. அதன்பிறகு ஒருவழியாக வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமத்தை […]
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “மாமன்னன்”. இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். வடிவேலு, ஃபகத் ஃபாசில் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறாரக்ள். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். வித்தியசமான கதைக்களத்தை கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது. படத்திற்கான படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது . இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் ஃபகத் ஃபாசில் இணைந்துள்ளார். படக்குழு […]
டிக்கெட்களை வாங்கி இலவசமாகக் கொடுக்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம். அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரையரங்குகளின் வெளியாகி வெற்றிகரமாக ஓடிகொண்டியிருக்கிறது. காமெடி படங்களை ஒதுக்கிவிட்டு கருத்துள்ள படங்களில் நடிக்கும் முடிவில் களமிறங்கி உள்ள உதயநிதி ஸ்டாலின், பாலிவுட்டில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஆர்ட்டிக்கள் 15’ என்ற திரைப்படம் ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. போனி கபூர் தயாரிப்பில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த […]
தொழில் கண்காட்சியில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை துபாய் பயணம் மேற்கொள்கிறார். தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை துபாய் பயணம் மேற்கொள்கிறார்.சுமார் 192 நாடுகள் பங்கேற்கும் பல்தொழில் கண்காட்சி துபாயில் நடைபெறுகிறது.இந்த நிலையில்,தொழில் கண்காட்சியில் பங்கேற்க இன்று மாலை தனி விமானத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் துபாய் செல்கிறார். பன்னாட்டு முதலீட்டாளர்களை சந்தித்து அழைப்பு: அங்கு சென்று தமிழகத்தில் புதிய தொழில் தொடங்க பன்னாட்டு முதலீட்டாளர்களை சந்தித்து அழைப்பு விடுக்கிறார்.மேலும், கண்காட்சியில் தமிழ்நாடு அரசின் கைத்தறி, விவசாயம், சிறுதொழில் உள்ளிட்ட […]
தொழில் கண்காட்சியில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை துபாய் பயணம் மேற்கொள்கிறார். தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை துபாய் பயணம் மேற்கொள்கிறார்.துபாயில் நடைபெறும் தொழில் கண்காட்சியில் பங்கேற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், பன்னாட்டு முதலீட்டாளர்களை சந்திக்கின்றார். முதலமைச்சருடன்,எம்எல்ஏ உதயநிதி உள்ளிட்டோரும் துபாய்க்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல் முறையாக வெளிநாடு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று உதயநிதி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.இதனால் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.திமுக சார்பில் மக்கள் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது.தற்போது உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.மேலும் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்றும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கரூர் வாலாஜா பேட்டை பகுதியில் […]
ஜெயலலிதா நினைவிடத்தின் இறுதிகட்ட பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டனர். ஜெயலலிதா நினைவிடத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்கிறார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.வருகின்ற 27-ஆம் தேதி அன்று காலை 11 மணியளவில் திறந்து வைக்க உள்ளதாகவும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் , இணை ஒருங்கிணைப்பாளர் […]
உதயநிதிக்கு முன்னுரிமை என்று பேசுவது எல்லாம் எதையாவது சொல்லி தி.மு.க.வை எப்போதும் குறை சொல்பவர்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். அப்பொழுது அவரிடம் ,உங்கள் மகனும் இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருடைய செயல்பாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்? தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா? அதே நேரத்தில் அவரது நுழைவு குடும்ப அரசியலை ஊக்குவிப்பதாகக் குற்றச்சாட்டை எழுப்புமல்லவா? என்று […]
சிம்புவின் ஈஸ்வரன் படத்தை தொடர்ந்து இயக்குனர் சுசீந்திரன் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் அவர்களை வைத்து படம் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் சுசீந்திரன் கடைசியாக சாம்பியன் எனும் படத்தை இயக்கியிருந்தார்.தற்போது இவரது இயக்கத்தில் மூன்று படங்கள் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது.இவர் இயக்கிய ஏஞ்சலினா கடந்தாண்டு வெளியாகவிருந்தது .அதே போன்று ஜெய் நடிக்கும் சிவசிவா படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு சிம்புவுடன் இணைந்து ஈஸ்வரன் படத்தினை இயக்கினார் . சமீபத்தில் அதன் படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது அதன் இறுதிக்கட்ட […]
உதயநிதியின் பிரச்சாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறுகையில்,அவரின் பிரச்சாரத்தை தாங்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 5 மாதங்களில் நடைபெற உள்ளது. தொடர்ந்து 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் உள்ளது. இந்த தேர்தல் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தல் ஆகும். இதனால், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியயை அமைக்க போவது யார்..? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதைத்தொடர்ந்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் […]
இன்று இரண்டாவது நாளாக நடைபெற்ற பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 5 மாதங்களில் நடைபெற உள்ளது.அதனை தொடர்ந்து 100 நாள் பிரச்சாரத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி அறிவித்தார். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் நேற்றைய தினம் தனது தேர்தல் பிரச்சாரத்தை கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையிலிருந்து தொடங்கி வைத்தார்.இதில் பங்கேற்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் ஊரடங்கு விதிகளை மீறியதாக கூறி போலீசார் […]
‘நீட்’டில் கைவிட்டது போல் இல்லாமல் மாணவர்களை அரசு காக்க வேண்டும் என்று உதயநிதி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் பாதிப்பு காரணமாக கல்லூரி மாணவர்களின் இறுதி ஆண்டு தேர்வை தவிர மற்ற அனைத்து பருவ தேர்வுகளுக்கும் தடை விதித்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்திருந்தார் தமிழக முதல்வர் பழனிசாமி. மேலும் அரியர்ஸ் எழுதுவதற்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனிடையே அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து முன்னாள் […]
நீட் அநீதியை எதிர்த்து குரல் கொடுத்த நண்பர் சூர்யா அவர்களுக்கு வாழ்த்துகள் என்று உதயநிதி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது.இதற்கு இடையில் தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அவரது அறிக்கையில்,நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்கியது.கொரோனா அச்சத்தால் […]