சென்னை : கல்விக்கு நிதி வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு தான் அரசியல் செய்கிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். மும்மொழி விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், இன்னுமே தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், தமிழகத்தில் கல்வியை அரசியலாக்கக்கூடாது என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார். அதில், புதிய கல்விக் கொள்கை மீதான தமிழக அரசின் […]
சென்னை : இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு (FICCI) ஏற்பாட்டில், ‘FICCI மீடியா & என்டர்டெயின்மென்ட் பிசினஸ் கான்க்ளேவ் (MEBC) – சவுத் கனெக்ட் 2025’ மாநாடு இன்று, பிப்ரவரி 21, 2025, சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் தொடங்குகிறது. (பிப் 21-22) இரண்டு நாள் நடைபெறும் இந்நிகழ்வை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கலந்து கொண்டு தொடங்கி வைக்கஉள்ளார். மேலும் நடிகர் கமல்ஹாசன் தலைமை வழிகாட்டியாக பங்கேற்கிறார். மாநாட்டின் […]
சென்னை : பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தால் இனி Go Back மோடி என சொல்ல மாட்டோம் Get Out மோடி என்று தான் சொல்வோம் என மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என குறிப்பிட்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னதாக ஒரு கூட்டத்தில் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு நேற்று கரூரில் நடந்த பட்ஜெட் விளக்க கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். Get Out மோடி : […]
சென்னை : மும்மொழி விவகாரம் தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் திமுக கூட்டணிக் கட்சிகள் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆர்ப்பாட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.க தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, திருமாவளவன் எம்.பி.மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள். அதில் பேசிய உதயநிதி ஸ்டாலின் ” தமிழ்நாட்டு மக்களையும், தமிழ்நாடு அரசையும் மிரட்டி ஒருபோதும் பணிய வைக்க முடியாது. தமிழர்கள் நாம் அன்புக்கு கட்டுப்பட்டவர்கள், […]
சென்னை : மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற காசி-தமிழ் சங்கம் நிகழ்ச்சியில், “புதிய கல்விக் கொள்கையை (NEP) ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி வழங்கப்படும்” என்றும், “மும்மொழிக் கொள்கையை பிற மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளும் போது, தமிழ்நாடு ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை?” எனவும் பேசியது சர்ச்சையாக வெடித்துள்ளது. இதனையடுத்து, மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தியை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி கொடுக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர […]
சென்னை : மக்களவைத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் இணைந்த மக்கள் நீதி மய்யத்திற்கு (மநீம), ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, வருகிற ஜூலை மாதம் நடைபெறும் ராஜ்யசபா தேர்தலின் போது கமல்ஹாசனுக்கு எம்பி பதவி கொடுக்க திமுக திட்டமிட்டு இருப்பதாகவும் சமீபத்தில் அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மநீம அலுவலகத்தில், திமுக அமைச்சர் பி.கே. சேகர் […]
சென்னை : நேற்று இரவு சென்னை ஜாபர்கான்பேட்டை தந்தை பெரியார் சிலைமீது காலணியை வீசிவிட்டு பெரியார் குறித்து அவமரியாதையாக பேசிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி அஜய் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் அந்த நபர் ஈடுபட்டபோது அக்கம் பக்கத்தில் இருந்த மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவலை கொடுத்து அஜய்யை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். ஏற்கனவே, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பெரியாரை விமர்சனம் செய்து வருவதே ஓயாத சர்ச்சையாக இருந்து வருகிறது. இந்த சூழலில், […]
சென்னை : இன்று (பிப்ரவரி 3) மறைந்த முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை வாலாஜா சாலையில் இருந்து அமைதிப் பேரணியாக சென்று அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்திலும் முதலமைச்சர் மரியாதை செலுத்தினார். உடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் திமுக எம்.பி.க்கள் பங்கேற்றனர். நாளை மறுநாள் (பிப்ரவரி […]
சென்னை : இயக்குநர் மகிழ்திருமேனி தற்போது அஜித்தை வைத்து விடாமுயற்சி படத்தினை இயக்கி இருக்கிறார். இந்த படம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இயக்குநர் மகிழ்திருமேனி சமூக ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அப்படி சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் விஜய்க்கு சொன்ன கதை பற்றியும் விஜய்யுடன் அவர் இணைந்து பணியாற்ற […]
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுகிறார். அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்துள்ளன. பிரதான கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பாக சீதாலட்சுமி போட்டியிடுகிறார். மொத்தம் 55 வேட்பாளர்கள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தில் திமுக, நாதக வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திமுக […]
துபாய் : நடிகர் அஜித் சினிமாத்துறையில் நடிப்பதில் மட்டும் ஆர்வம் செலுத்தாமல் அதற்கு அடுத்தபடியாக கார் பந்தயங்களில் கலந்துகொன்டு விளையாடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக, துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின் அணி வெற்றி பெற்றது. சமீபத்தில் நடந்த விபத்தால், அஜித் கார் ரேஸில் பங்கேற்கவில்லை. ஆனால், அவரது அணி சிறப்பாக செயல்பட்டு 3வது இடம் பிடித்தது. அஜித்தின் அணி 3-வது இடத்தில் பிடித்ததை […]
சென்னை : பொங்கல் பண்டிகையொட்டி பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை காண்பதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவருடைய மகன் இன்பநிதி மற்றும் அவரது நண்பர்களும் வருகை தந்திருந்தார்கள். அப்போது, இன்ப நிதி அமர்ந்துவிட்டு பின்புறம் திரும்பி பார்த்தபோது அவருடன் வந்த நண்பர்கள் நின்று கொண்டு இருந்தார்கள். உடனடியாக இன்ப நிதி எழுந்து இங்கே வந்து அமருங்கள் என்பது […]
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர் உரிமைத் தொகை பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த நிலையில், ரூ.1,000 கோரி புதிதாக விண்ணப்பித்த பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்குவது குறித்து 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை தொடங்கியது. சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய காந்திராஜன், […]
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை தொடர்ந்து, மேடையில் பேசிய துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “2026 இல் நாம் பெறும் வெற்றி தமிழ்நாட்டுக்கான வெற்றி மட்டுமில்லை, இந்தியாவுக்கான வெற்றி. 200 இல்லை, 200க்கும் மேல் தொகுதிகளில் வெற்றி பெறுவோம்” என்றார். […]
சென்னை : அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த நவம்பர் 10 முதல் 17ஆம் தேதி வரையில், 6வது உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வந்தன. இதில் ஒற்றையர், இரட்டையர் மற்றும் குழு போட்டிகள் ஆண் – பெண் இரு பாலருக்கும் நடைபெற்றது. இதில், 18வயதுக்கு மேற்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் உலக கேரம் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளார் சென்னை காசிமேட்டை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மெஹபூப் பாஷாவின் 18 வயது இளம் வீராங்கனை எம்.காசிமா. மேலும், […]
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன செஸ் வீரர் டிங் லின்னை தோற்கடித்து உலக செஸ் சாம்பியன் பட்டத்தை இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் வென்றார் . தமிழகத்தை சேர்ந்த குகேஷுக்கு ஏற்கனவே தமிழக அரசு ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவித்து பாராட்டி இருந்த நிலையில், இன்று தமிழக அரசு சார்பில் குகேஷுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதற்காக இன்று சென்னை கலைவாணர் அரங்கிற்கு திறந்தவெளி வாகனத்தில் குகேஷ் ஊர்வலமாக […]
சென்னை: தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழா தமிழக அரசியலில் புதிய புயலை கிளப்பியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் திருமாவளவனை கலந்துகொள்ள விடாமல் கூட்டணி தடுக்கிறது என்று விஜய் பேசியதும், மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்று ஆதவ் அர்ஜூனா பேசியதும் சர்ச்சைக்கான முக்கிய கருப்பொருளாக மாறியுள்ளன. இதில், குறிப்பாக விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்று திமுகவை நேரடியாக தாக்கி பேசியது கூட்டணிக்குள் சலசலப்பை […]
சென்னை: ஃபெஞ்சல் புயல், கனமழை வெள்ளம் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்புகளுக்குள்ளாகி இருக்கிறது. அதேபோல், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான ஆடு, மாடுகளும் பலியாகியுள்ளன. இந்த நிலையில், வெள்ளத்தால் கடும் பாதிப்புகளுக்கு உள்ளான மக்களுக்கு தமிழக அரசு நிவாரணம் அறிவித்தோடு, நிவாரணம் பொருட்களையும் வழங்கி வருகிறது. அந்த வகையில், ஃபெஞ்சல் புயல் நிவாரணப் பணிகளுக்கு ரூ.10 லட்சத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நடிகர் […]
சென்னை : பெஞ்சல் புயல் எதிரொலியாக சென்னை உட்பட பல இடங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மேலும், மையம் கொண்டிருக்கும் ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையைக் கடக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழக அரசு பல முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வரிசையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் துணை நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர் சேகர்பாபு, திமுக எம்பிக்கள், […]
ராஞ்சி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன், இன்று 3ஆவது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார். அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். அங்கு மொத்தமுள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அவரது கட்சி, 34 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உருவெடுத்துள்ளது. மேலும், கூட்டணியில் இருந்த காங்., 16 இடங்களில் வென்றது. 21 இடங்களை வென்று பாஜக எதிர்க்கட்சி […]