பிறப்பு முதல் இறப்பு வரையிலான சான்றிதழ்களுக்கும், சேவைகளுக்கும் தமிழகம் முழுக்க நடைமுறையில் இருக்கும் லஞ்சப் பட்டியல் இது. மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அவர்கள், திருச்சியில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவரிடம், நீங்கள் ஊழல், லஞ்சம் பற்றி கூறினீர்கள். இந்த ஊழல் ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே காணப்படுகிறது. பொதுமக்கள் இதை பழகிவிட்டார்கள். எனவே, தற்போது நீங்கள் முன் வைக்கும் ஊழல் ஒழிப்பு கருத்துக்கள் மக்களை சென்றடையுமா? என கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்க்கு […]
இந்தியப் பெண்களுக்கு கழிவறை வசதி 73 ஆண்டுகளாகத் தீராத பிரச்சனை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் ஓரிக்கை வேளிங்கப்பட்டரை ஆசிரியர் தெருவை சேர்ந்த 24 வயதுடைய மாற்றுத்திறனாளியான சரண்யா, அரசு வேளாண் விரிவாக்க மையத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த மையத்தில் கழிவறை வசதி இல்லாததால், அருகில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்றா சரண்யா, கழிவு நீர் தொட்டியின் மீது கால் வைத்த […]
உள்ளே ஒழுகியது மழைநீரா, ஊழலா? பயணிகள் குடைபிடித்து குடையா? ஆளும் கட்சிக்கான கருப்பு கொடியா? தமிழகத்தில் தற்போது பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாக அளிக்கிறது. வெளியில் பயணம் செய்யும் மக்கள், பேருந்தில் சென்றால் பாதுகாப்பாக செல்லலாம் என நினைத்து பேருந்தில் பயணம் செய்வதுண்டு. ஆனால், இன்று பேருந்திற்குள்ளும் குடை பிடித்துக் கொண்டு பயணம் செய்ய வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கமலஹாசன் தனது ட்வீட்டர் பக்கத்தில் […]
வெற்றியை நெருங்கி வரும் ஜனநாயக கட்சி தலைவர் ஜோ பைடன் பதிவிட்ட முக்கியமான பதிவு. அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3-ம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு என்னும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், ஜனநாயக கட்சி தலைவர், ஜோ பைடன் 264 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார். இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெறுவதாக ட்ரம்ப் நீதிமன்றத்தை நாடினார். ஆனால், எந்த ஆதாரமும் இல்லாத காரணத்தால் […]
கமல்ஹாசனின் 66-வது பிறந்தநாளையடுத்து கவிஞர் வைரமுத்து வாழ்த்து. பிரபல நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான கமலஹாசன் இன்று தனது 66-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து இவருக்கு வாழ்த்து தெரிவிக்க, அவரது ரசிகர்களும், தொண்டர்களும் காலையிலேயே அவரது வீட்டின் முன்பாக திரண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும், பல பிரபலங்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘பிறந்தநாள் என்பது சில மெழுகுவர்த்திகளை அணைப்பதல்ல. சில தீபங்களை ஏற்றுவது. […]
மனுஸ்மிருதி நூல் புழக்கத்தில் இல்லாதது. அது குறித்த விமர்சனம் தேவை இல்லாதது. மனுஸ்மிருதி நூலில் பெண்கள் குறித்து இழிவாக கூறப்பட்டுள்ளதாக திருமாவளவன் கூறிய கருது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதற்க்கு பாஜகவினர் தரப்பில் போராட்டங்கள் எடுக்கப்பட்டது. திருமாவளவனின் இந்த கருத்துக்கு, பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பல அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்ற்னர். இதனையடுத்து, இன்று சென்னை, தியாகராயபுரத்தில், செய்தியாளர் சந்திப்பின் கமலஹாசன், மனுஸ்மிருதி நூல் புழக்கத்தில் இல்லாதது. அது குறித்த விமர்சனம் தேவை இல்லாதது.’ […]
ஆட்டுக்குத் தாடியும், மாநிலத்துக்கு ஆளுனர் பதவியும் தேவையில்லாதவை. மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற, அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என, தமிழக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதித்து வருகிறார். ஆளுநரின் இந்த செயலை கண்டித்து, அரசியல் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாமக நிறுவனர் டாக்.ராமதாஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘7.5 […]
மிலாதுன் நபியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து. நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை நினைவு கூறும் வகையில், இஸ்லாமியர்கள் மிலாதுன் நபி திருநாளை அனுசரித்து வருகின்றனர். இதனையடுத்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இஸ்லாமிய பெருமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், இத்திருநாள் சகோதரத்துவத்தை மேம்படுத்தும் என நம்புகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
ரிசர்வ் வங்கி கவர்னருக்கு கொரோனா தொற்று உறுதி. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசால், 7,909,959 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாமர மக்கள் முதல் பிரபலங்கள் வரை பலரையும், இந்த வைரஸ் தாக்கி வருகிறது. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவர் […]
சீனா என்ற பேரை உச்சரிக்கவே பயப்படும் மோடிக்கு இதையாவது கண்டிக்கும் துணிவிருக்கிறதா? அமெரிக்காவில் வரும் 3-ம் தேதி, அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராக, ஜோ பைடன் போட்டியிடுகிறார். இதனையடுத்து, இவர்கள் இருவரும் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஒருவரையொருவர் மாறி, மாறி குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், நேற்று இருவருக்கும் இடையே நேரடி விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியா மீது சில குற்றசாட்டுகளை வைத்தார். இதுகுறித்து, […]
காயமுற்றோர் விரைவில் நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். விருதுநகர் மாவட்டத்திலுள்ள குந்தலப்பட்டி எனும் இடத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில், பட்டாசுகளுக்கு இடையே ஏற்பட்ட உராய்வில் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிற நிலையில், துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்கள், தனது ட்வீட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘விருதுநகர் – எரிச்சநத்தத்தில் பட்டாசு […]
56-வது பிறந்தநாளை கொண்டாடும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து. மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா, இன்று தனது 56-வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு, பிரபலங்கள் பலரும், தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில், அமித்ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்து, ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு, Birthday wishes to […]
இங்கிலாந்தில் விடுதலை புலிகள் மீதான தடை நீக்கம். பிரிட்டனில் விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், ஒரு மகிழ்ச்சியான பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், பிரித்தானிய நீதிமன்றம் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கிய செய்தியறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன். அதற்காக சட்டப்போராட்டம் நடத்தி உழைத்திட்ட தமிழர்களுக்கும், உறவுகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். பிரித்தானியாவில், தமிழீழ […]
விஜய் சேதுபதி குறித்து ட்வீட்டரில் பதிவிட்ட பாஜக பிரமுகர் குஷ்பூ. இலங்கையில் பிரபல கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வராரு படத்தில், முரளிதரன் கதாபாத்திரத்தில், நடிகர் விஐய் சேதுபதி நடிப்பதற்கு பல எதிர்ப்புகள் எழுந்தது. காரணம் என்னவென்றால், முத்தையா முரளிதரன், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த போராட்டத்தில், சிங்களவர்களுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றசாட்டுகள் எழுந்த நிலையில், இந்த எதிர்ப்புகள் எழுந்தது. இந்நிலையில், பல போராட்டத்திற்கு மத்தியில், நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலகுவதாக […]
கவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா? காத்திருக்கிறார்கள் கண்மணிகள். கடந்த சில நாட்களுக்கு முன்பதாக மருத்துவ நுழைவு தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியான நிலையில், அதில், தேர்வு எழுதியவர்களை விட, தேர்ச்சி அடைந்தவர்களின் புள்ளிவிவரம் மிகவும் அதிகமாக இருந்தது. இதனால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளானார்கள். அதனை தொடர்ந்து, தேர்வு முடிவுகள் இணையத்தில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், மீண்டும் திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியானது. அதிலும் […]
விஜய் மகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து திருமாவளவன் ட்வீட். பிரபல கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட இருந்த நிலையில், இந்த படத்தில் அவர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு, பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். காரணம் என்னவென்றால், முரளிதரன், இலங்கை நடைபெற்ற போராட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்ற குற்றசாட்டு கிளம்பியதால், இந்த எதிர்ப்பு கிளப்பியது. நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு ட்விட்டர் மூலம் பாலியல் […]
பெண் குழந்தைகளை கிள்ளுக்கீரையாக நினைக்கும் கீழ்த்தரமான கயவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். பிரபல கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட இருந்த நிலையில், இந்த படத்தில் அவர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு, பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். காரணம் என்னவென்றால், முரளிதரன், இலங்கை நடைபெற்ற போராட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்ற குற்றசாட்டு கிளம்பியதால், இந்த எதிர்ப்பு கிளப்பியது. இந்நிலையில், இதுகுறித்து முத்தையா முரளிதரன் […]
மத்திய அரசின் நிலைப்பாட்டை கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட். திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையையும் பொருட்படுத்தாமல், முதுகலை சிறப்பு படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக இருக்கும் மத்திய அரசின் நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டித்து, தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ள நிலையில், மத்திய அரசின் திணிப்புகளுக்கு எதிராக நின்று, மாநிலத்தின் அதிகாரத்தையும், தன்னாட்சியையும், முதலமைச்சர் […]
ஏழை மாணவர்களுக்கும் அனைத்து வாய்ப்புகளும் கிடைப்பதில்லை என்பதே நீட் தேர்வை எதிர்ப்பதற்கு காரணம். தேனி மாவட்டம் சில்வார்பட்டியைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவரும், கால்நடை மேய்க்கும் தொழிலாளியின் மகனுமான ஜீவித் குமார், நீட் தேர்வில் 720-க்கு 664 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் அரசு பள்ளி மாணவர்களில் முதலிடம் பிடித்துள்ளார். இதுகுறித்து ராமதாஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மேலும், ராமதாஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கமும், வாய்ப்புகளும் வழங்கப்பட்டால் அவர்கள் […]
தூக்கு மேடை ஏறியபோதும் தூக்கு கயிற்றை முத்தமிட்டு,வீரத்திற்கு இலக்கணமாய் விளங்கும் வீரபாண்டிய கட்டபொம்மன். தமிழகத்தில் ஆங்கில ஆட்சியை எதிர்த்து போரிட்ட மன்னர்களுள் வீரப்பாண்டிய கட்டபொம்மனும் ஒருவர் ஆவார். இன்று இவரது நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, பிரபலங்கள் பலரும் தங்களது இணைய பக்கத்தில், கட்டபொம்மனின் வீரத்தை போற்றி கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘ஆங்கிலேயரின் அடக்கு முறையை எதிர்த்து “என் நாட்டில் விளையும் பொருட்களுக்கு வரி செலுத்த […]