போக்குவரத்து போலீசாரிடம் ரூ. 49,000 அபராதம் செலுத்திவிட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த வாகன உரிமையாளர்
பெங்களூரை சேர்ந்த நபர் ஒருவர் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதற்காக ரூ. 49,100 அபராதம் செலுத்திய நிலையில் அது தொடர்பான நீண்ட ரசீதுகளை போலீசாரிடம் இருந்து பெற்றுக் கொண்ட புகைப்படம் சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது. வடக்கு பெங்களூரு போக்குவரத்து துணை கமிஷனர் இது தொடர்பான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், போக்குவரத்து விதிமீறல்களுக்காக, KA50-S-3579 வாகனத்தின் உரிமையாளர் முனிராஜிடம் இருந்து 49,100/- ரூபாய் அபராதம் முழுவதையும் வசூலித்தோம் என குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவுடன், வாகனத்தின் உரிமையாளரான முனிராஜ், இரண்டு போக்குவரத்து காவலர்களுடன் … Read more