Tag: tngov

பயிர்க்கடன் தள்ளுபடி – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு.!

பயிர் கடன் தள்ளுபடிக்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 5-ம் தேதி நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இது விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட, கடன் தள்ளுபடி 16.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்திருந்தார். மேலும், பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது 15 நாட்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றும் தேர்தல் பரப்புரையில் போது தெரிவித்திருந்தார். இந்நிலையில், […]

#ADMK 4 Min Read
Default Image

கிராம சபை கூட்டம்: தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.!

கிராம சபை கூட்டங்களை நடத்த கோரிய வழக்கில் ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. கிராம சபை கூட்டங்களை நடத்த கோரி திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று விரசனைக்கு வந்தபோது, கிராம சபை கூட்டங்களை நடத்த கோரிய வழக்கில் ஒருவாரத்தில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்காவிட்டாலும்  விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று […]

#DMK 2 Min Read
Default Image

#BREAKING: பிப்.13ல் முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்.!

தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் பழனிசாமி தலைமையில் வரும் 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது.  முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் பிப்ரவரி 13-ஆம் தேதி நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால நிதிநிலை அறிக்கை தொடர்பாக தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 110-ன் கீழ் முதல்வர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 15வது சட்டப்பேரவையின் இறுதி கூட்டத்தொடர் வருகின்ற 22-ஆம் தேதி தொடங்கும் என்று […]

#CabinetMeeting 2 Min Read
Default Image

அரசு ஊழியர்கள் மீதான வழக்குகள் வாபஸ்; அரசாணை வெளியீடு!

அரசு ஊழியர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் கைவிடுவதாக முதல்வர் அறிவித்திருந்த நிலையில், தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான நிலுவையில் உள்ள வழக்கை வாபஸ் பெறுவதாக முதல்வர் பழனிசாமி சென்ற வாரத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில், 2019-ம் ஆண்டு ஜனவரி 22 முதல் 30-ம் தேதி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட குற்றவியல் வழக்குகள் உள்ளிட்ட அனைத்தும் […]

CMedapadiKpalanisami 2 Min Read
Default Image

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள்.!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையம் தொடங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 36 மாவட்டங்கள், 7 மாநகராட்சிகள் உள்ளிட்டவற்றில் புதிய சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக ஏடிஎஸ்பி தலைமையில் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் செயல்படும் என தகவல் கூறப்படுகிறது.

cybercrime 1 Min Read
Default Image

“யாரும் யாருக்கும் அடிமை இல்லை” – துணை முதல்வர் ஓபிஎஸ்

கொத்தடிமை முறை ஒழிப்பு நாளையொட்டி தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். கொத்தடிமை முறை ஒழிப்பு நாளை முன்னிட்டு தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், கொத்தடிமைகளாக அவதிப்படுவோரின் அடிமை விலங்கை உடைத்து, அவர்களுக்கு நல்வாழ்வு நல்குவதை உணர்த்தும் கொத்தடிமை முறை ஒழிப்பு நாளை இன்று இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தில் அம்மாவின் அரசு கொண்டாடி வருவதில் பெருமை அடைகிறேன். மேலும் […]

#ADMK 4 Min Read
Default Image

குடிமராமத்து பணி விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு

அரசு பணியில் வெளிப்படைத்தன்மை இருந்தால் அங்கு ஊழல் என்பது குறைக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது. மதுரை அரசரடியை சேர்ந்த அன்புநிதி என்பவர் மதுரை உயரநீதிமன்றம் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் 2016ம் ஆண்டு குடிமரமாத்து திட்டம் உருவாக்கப்பட்டது. ஆறு, ஏறி, குளங்களை ஆழப்படுத்துவது, கரையை மேம்படுத்துவது போன்றவைகளை மேற்கொள்ளவதற்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2016 முதல் 2020 வரை இந்த திட்டத்திற்கு ரூ.928.64 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், கடந்த […]

civilworks 4 Min Read
Default Image

துயரச் செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்., உதவி செய்ய தமிழக அரசு தயார் – முதல்வர் அறிக்கை

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது எனது முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார். உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்திலுள்ள நந்ததேவி பணிக்குன்றில் ஒரு பகுதி திடீரென்று நேற்று உடைந்ததால் அப்பகுதிகளில் உள்ள நதிகளில் திடீரென்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் கரையோரம் அமைந்திருந்த வீடுகள் வெள்ளத்தில் அடித்து சென்றது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்றும் 18 பேர் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாநில […]

CMedapadiKpalanisami 5 Min Read
Default Image

பள்ளிகளை திறப்பதில் தாமதம் செய்ய முடியாது – அமைச்சர் செங்கோட்டையன்

பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளை திறப்பதில் தாமதம் செய்ய முடியாது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் பூட்டப்பட்ட பள்ளிகள், நாளை முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்திருந்தது. பள்ளிக்கு வரக் கூடிய மாணவர்கள் பெற்றோர்களின் அனுமதி கடிதத்துடன் வரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், விருப்பப்பட்ட மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளை திறப்பதில் […]

MinisterSengottiyan 3 Min Read
Default Image

தமிழகத்தில் ட்ரீம் 11 செயலிக்கு தடை – தமிழக அரசு

சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டம் செயலிகள் தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தில் ட்ரீம் 11 செயலுக்கு தடை. கடந்த 4ம் தேதி நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவை தாக்கல் செய்தார். அவசர சட்டத்தின் மூலம் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்ட நிலையில் சட்டம் ஆக்குவதற்காக மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தடையை மீறி ஆன்லைனில் சூதாடுவதற்கு ரூ.5000 அபராதம், 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் […]

banned 3 Min Read
Default Image

சசிகலா வருகை: மீண்டும் டிஜிபியிடம் புகார் அளித்த அதிமுக.!

நாளை மறுநாள் பெங்களூரில் இருந்து தமிழகம் வரும் சசிகலா மீது அதிமுக அமைச்சர்கள் மீண்டும் டிஜிபியிடம் புகாரளித்துள்ளனர். சென்னையில் டி.ஜி.பி. திரிபாதியை சந்தித்து சசிகலா மீது அதிமுக சார்பில் அதிமுக மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் மீண்டும் புகாரளித்துள்ளனர். அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த கூடாது என ஏற்கனவே புகார் அளிக்கப்பட்ட நிலையில், மீண்டும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. தங்கமணி, ஜெயக்குமார், சிவி சண்முகம் உள்ளிட்ட அமைச்சர்கள் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு சென்று, சசிகலா பெங்களூரில் இருந்து வரும் போது சட்டம் […]

#ADMK 2 Min Read
Default Image

உயிரிழந்த 50 காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி – முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் உயிரிழந்த 50 காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.  இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உடல்நலக் குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 50 காவலர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும், இச்சம்பவங்களில் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார். தமிழகத்தின் பல்வேறு […]

CMedapadiKpalanisami 3 Min Read
Default Image

ஆளுநரிடமிருந்து எந்த தகவலும் அரசுக்கு நேரடியாக வரவில்லை – சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம்

7 பேர் விடுதலை குறித்து ஆளுநரிடமிருந்து எந்த தகவலும் அரசுக்கு நேரடியாக வரவில்லை என்ற சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் பன்வரிலால் புரோகித்திடம் இருந்து எந்த தகவலும் அரசுக்கு வரவில்லை. உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தாக்கல் செய்த ஆவணம் அரசுக்கு தந்தால் அதனை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனிடையே, 7 பேர் […]

CVShanmugam 2 Min Read
Default Image

பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, கூட்டுறவு சங்க பதிவாளர் இன்று ஆலோசனை.!

பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, கூட்டுறவு வங்கி மேலாளர்கள், பதிவாளர்களுடன் ஆலோசனை இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, கூட்டுறவு சங்க பதிவாளர் இன்று ஆலோசனை மோற்கொள்ள உள்ளனர். கூட்டுறவு வங்கி மேலாளர்கள், பதிவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்கள். இந்த ஆலோசனை கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது. இதனிடையே, நேற்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், கூட்டுறவு வங்கியில் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர் கடன்களை தள்ளுபடி செய்வதாக முதல்வர் அறிவித்திருந்தார். இதனால் 16 […]

#EdappadiPalaniswami 2 Min Read
Default Image

#BREAKING: தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.!

கடந்த 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், பதிலுரையும் நடைபெற்றது. இதன்பின் சட்ட மசோதா ஆய்வு செய்தலும், நிறைவேற்றுதலும் நடைபெற்ற நிலையில், 8 முக்கிய மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையில், கடந்த 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், சட்டபேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார். இதனிடையே, தமிழக […]

#TNAssembly 4 Min Read
Default Image

#BREAKING: ஜல்லிக்கட்டு வழக்குகள் வாபஸ் – முதல்வர் அதிரடி அறிவிப்பு.!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது காவல்துறை பதிவு செய்த வழக்குகள் திரும்ப பெறப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். விரும்பத்தகாத நிகழ்வுகளான காவலர்களை தாக்கியது தொடர்பான வழக்குகளை தவிர மற்ற அனைத்து வழக்குகளும் திரும்பபெறப்படும் என்று தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பதிலுரையின் போது முதல்வர் பழனிசாமி இதனை அறிவித்துள்ளார். இதனிடையே, நேற்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை […]

#TNAssembly 3 Min Read
Default Image

குற்றவாளி தண்டனையை அதிகரிக்கும் மசோதா பேரவையில் தாக்கல்., எத்தனை ஆண்டுகள் தெரியுமா?

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் குற்றவாளி தண்டனையை அதிகரிக்கும் மசோதாவை தாக்கல் செய்தார் அமைச்சர் சிவி சண்முகம். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று ஆளுநர் உரைக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், பதிலுரையும் நடைபெற்றது. இதன்பின் சட்ட மசோதா ஆய்வு செய்தலும், நிறைவேற்றுதலும் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் குற்றவாளி தண்டனையை அதிகரிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. குற்றவாளிகளின் தண்டனையை அதிகரிப்பதற்கான மசோதாவை சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தாக்கல் செய்தார். […]

#ADMK 2 Min Read
Default Image

#குட் நியூஸ்: ரூ.12,110 கோடி பயிர் கடன் தள்ளுபடி – விவசாயிகள் பெரும் வரவேற்பு.!

கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர் கடன்கள் ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்யப்பட்டதை விவசாயிகள் வரவேற்பு அளித்து வருகின்றனர். கடந்த 2-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் கூட்டத்தொடர் குறித்து முடிவு எடுக்கப்பட்டது. இதில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கும் […]

#Farmers 6 Min Read
Default Image

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலையை பிரதமர் அறிவிக்க வாய்ப்பு – அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன்

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து அரசின் பரிந்துரையை ஆளுநர் பன்வரிலால் புரோகித் நிராகரிக்கவில்லை – அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் பழனிசாமி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து, 7 பேர் விடுதலை செய்வதில் குடியரசு தலைவருக்கே அதிகாரம் உண்டு என்று நேற்று ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இது […]

#BanwarilalPurohit 3 Min Read
Default Image

தமிழக அரசின் பரிந்துரை நிராகரிப்பு., குடியரசு தலைவருக்கே அதிகாரம் – ஆளுநர் தரப்பு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்வதில் குடியரசு தலைவருக்கே அதிகாரம் உண்டு என்று ஆளுநர் தரப்பு தெரிவித்துள்ளது. 7 பேர் விடுதலை தொடர்பான பரிந்துரையை சட்டத்திற்கு உட்பட்டு மத்திய அரசு பரிசீலிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான ஆளுநரின் முடிவு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யபட்டது. பேரறிவாளன் முன்கூட்டியே விடுதலை செய்ய கோரும் மனுமீது விசாரணை வரும் 9-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. எழுவர் விடுதலையில் ஆளுநருக்கே அதிகாரம் […]

#BanwarilalPurohit 3 Min Read
Default Image