சென்னை மேற்கு மாம்பலம் அயோத்யா மண்டபம் பிரச்சனை தொடர்பாக பேரவையில் பாஜக புகாருக்கு முதல்வர் பதில். தமிழக சட்டப்பேரவையில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைப்பெறுகிறது. அப்போது கேள்வி நேரத்தின் முன்னதாக சென்னை மேற்கு மாம்பலம் அயோத்யா மண்டபம் பிரச்சனை குறித்து வானதி சீனிவாசன் பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேவையில்லாத அரசியலை புகுத்தி, அதன் மூலம் பாஜகவை பலப்படுத்த நினைத்தால் அது […]
தமிழநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து ட்விட்டரில் அவதூறாக பதிவிட்டதாக கூறி கரூர் பாஜக பிரமுகர் விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். திமுக தகவல் தொழில்நுட்ப அணி புகாரின் பேரில் முனியப்பனூர் வீட்டில் விக்னேஷை போலீசார் கைது செய்தனர்.
தமிழிசை செளந்தரராஜனை தரக்குறைவாக பேசுவதை ஏற்க முடியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அரசுக்கு 7 மணி நேரம் அவகாசம் அளித்திருந்தேன், ஏனெனில் அவர்களால் வரமுடியாது. கட்டுகதையை கிளப்பினால் மட்டும் போதாது ஆதாரம் வேண்டும். என் வாழ்க்கையை புரட்டிபோட்டு பார்த்தாலும் ஒரு கடுகு கூட கிடைக்காது, ஒன்றுமே கிடைக்காது என தெரிவித்தார். திமுக பொறுத்தவரை பொய் சொல்வதில் வள்ளுவர்கள். அரசியலில் கருத்தியல் ரீதியாக எங்களோடு […]
நான் பேசிய அனைத்து விவரங்களுக்கும் ஆதாரம் உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி. சென்னை கமலாயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அனுப்பியுள்ள நோட்டீசை சட்டப்படி சந்திப்பேன். நான் பேசிய அனைத்து விவரங்களுக்கும் ஆதாரம் உள்ளது. திமுக அவதூறு வழக்கு போடும் அளவிற்கு நான் தகுதி இல்லாத சாதாரண விவசாயி தான். 610 கோடி ரூபாய்க்கு நான் வொர்த் இல்லை, என்கிட்ட 2 டப்பா, ஊரில் 2 ஆடு, மாடுகள் […]
நம் நாட்டின் நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என மாநில தலைவர் அண்ணாமலை ட்வீட். சர்வேதேச முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 4 நாள் அரசுமுறை துபாய் பயணத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்ததற்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்திருந்தார். திமுகவின் ஆர்எஸ் பாரதி கூறுகையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் துபாய் பயணத்தை, சொந்த பணத்தை முதலீடு செய்ய சென்றிருப்பதாக அண்ணாமலை கூறுகிறார். முதலமைச்சரை விமர்சித்த அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல கோடி மதிப்புடைய உலோகச் சிலைகளை கடத்திய வழக்கில் பாஜக நிர்வாகி உள்பட 4 பேர் கைது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கால்வாயில் மறைத்து வைக்கப்பட்ட பல கோடி மதிப்புடைய 7 உலோக சுவாமி சிலைகளை, சிலைகள் கடத்தல் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இரு நடராஜர், நாக கன்னி, காளி, முருகன், விநாயகர், நாக தேவதை ஆகிய 7 சிலைகள் பறிமுதல் செய்தனர். சிலைகளை கடத்திய வழக்கில் ராமநாதபுரம் மாவட்டம் பாஜக சிறுபான்மை அணி […]
வேளாண் சட்டங்கள் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை 14 கேள்விகளை முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி கேட்டு அறிக்கை வெளியீடு. வேளாண் சட்டங்கள் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை 14 கேள்விகளை முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டு, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினால் பிரச்சனை தீருமா? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு திமுக தேர்தல் […]
மேகதாது விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுவது பற்றி எனக்கு கவலையில்லை என கர்நாடக முதல்வர் பசுவராஜ் பொம்மை பதிலடி. கர்நாடக முதல்வராக எடியூரப்பா இருந்த போது, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் பெரும் மோதல் ஏற்பட்டு வந்தது. அணையை கட்டவிடமாட்டோம் என்று தமிழகத்தில் தீமனங்கள் நிறைவேற்றப்பட்டு, டெல்லி வரை சென்று கோரிக்கை வைத்துவிட்டு வந்தனர். அதேபோல் மேகதாதுவில் அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது என்று கர்நாடக அரசு […]
தமிழக அரசியல் களம் பாஜக கூட்டணியா, திமுக கூட்டணியா என்ற விவாதத்தை நோக்கி நகர்ந்துவிட்டது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை. தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட அண்ணாமலை, இன்று சென்னை கமலாலயத்தில் பதவியேற்றுக் கொண்டார். இந்த பதவியேற்பு விழாவில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக மூத்த தலைவர்கள் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், வி.பி.துரைசாமி, தமிழகப் பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிலையில், தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள அண்ணாமலை […]
தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் விருப்பம் என்று மாநில தலைவராக பொறுப்பேற்கவுள்ள அண்ணாமலை பேச்சு. தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றதை தொடர்ந்து தமிழக பாஜக புதிய தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலை நியமிக்கப்பட்டார். புதிய தலைவராக நியமித்ததை அடுத்து, சென்னை தி.நகரில் உள்ள கட்சி அலுவலகமான கமலாலயத்தில், வரும் 16ம் தேதி, தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்க உள்ளார். இந்த நிலையில், பாஜக […]
தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும் என புதிய மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும். வயது முக்கியமல்ல, மூத்த, இளம் தலைவர்கள் என அனைவரையும் அரவணைத்து செல்வேன். மற்ற கட்சிகள் தனிநபர் கட்சிகள், பாஜகவைப் பொறுத்தவரை கூட்டுமுயற்சிதான். வயது, அனுபவம் என பல்வேறு விஷயங்களைக் கொண்டு பாஜக பொறுப்பளித்து வருகிறது என்றும் பாஜக தனி மனிதரை முன்னிருத்தும் கட்சியல்ல, அனைவருடன் […]
மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதை தொடர்ந்து கரூரில் போலீசாரும் பாஜகவினர் வாக்குவாதம். தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டு, பதவியேற்றத்தை தொடர்ந்து பாஜகவின் மாநிலத் துணை தலைவராக இருந்த அண்ணாமலை தலைவராக செயல்படுவார் என்று பாஜக தேசிய தலைவர் ஜெபி நட்டா நேற்று அறிவித்திருந்தார். இந்த நிலையில், கரூர் ஆட்சியர் பிரபு சங்கர் காரில் செல்லும்போது பாஜகவினர் பட்டாசு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதை பட்டாசு […]
தமிழக பாஜக தலைவர் எல். முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றதை அடுத்து புதிய தலைவராக அண்ணாமலை நியமனம். பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை நேற்று விவாக்கம் செய்யப்பட்டு, 43 புதிய மத்திய அமைச்சரகள் பதவியேற்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த பாஜக மாநில தலைவர் எல் முருகன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவருக்கு மீன்வளத்துறை, கால்நடை வளர்ப்பு மற்றும் பால் வளத்துறை, தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை உள்ளிட்ட பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் […]
தமிழகத்தில் பாஜக ஆட்சியமைப்பது வெகுதொலைவில் இல்லை என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 20 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வென்றிருந்தது. இதையடுத்து சென்னை தியாகராயநகரில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி தலைமையிலான கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கிஷன் […]
தமிழக பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தேர்வு. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக 20 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வென்றிருந்தது. அதன்படி, கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன், திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன், நாகர்கோவில் தொகுதியில் எம்.ஆர்.காந்தி, மொடக்குறிச்சி தொகுதியில் சி.கே.சரஸ்வதி ஆகியோர் எம்.எல்.ஏக்களாக வெற்றி பெற்றுள்ளனர். இந்த நிலையில், சென்னை தியாகராயநகரில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி தலைமையிலான […]