தமிழக முதலமைச்சர் தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம்!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன்,சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மாலை  அமைச்சரவை கூட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமைச்சரவை கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத் … Read more

பிப்ரவரி 2 ஆம் தேதிமுதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது

இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி ஆளுநர் உரையுடன், சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இந்திய அரசமைப்பு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தை பிப்ரவரி 2 ஆம் தேதி , காலை 11.00 மணிக்கு  கலைவாணர் அரங்கம், மூன்றாவது தளத்தில் உள்ள பல்வகை கூட்டாங்கத்தில் கூட்ட இருக்கிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.ஆண்டின் முதல் கூட்டம் … Read more

துணை பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்.

துணை பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல்  செய்ய உள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் வரும் 14ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக தனிமனித இடைவெளியை பின்பற்றி சென்னை கலைவாணர் அரங்கத்தில் கூட்டத் தொடரை நடத்த பொதுப்பணித்துறை ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்திற்கு முன்பாக எம்எல்ஏக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அரசு திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த  கூட்டத்தில் துணை பட்ஜெட்டை துணை … Read more

BREAKING:குடும்ப அட்டைதார்களுக்கு ரூ.1,000- எடப்பாடி பழனிச்சாமி.!

தமிழத்தில் உள்ள குடும்ப அட்டைதார்களுக்கு தலா  ரூ.1,000 நிவாரணமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.   மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் கொரோனா வைரஸ் நிவாரண அறிவிப்பு. pic.twitter.com/HzjPoDIBoV — AIADMK (@AIADMKOfficial) March 24, 2020 தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது.சட்டப்பேரவையில்  முதலமைச்சர் பழனிசாமி 110 விதியின் கீழ் கொரோனா வைரஸ் நிவாரணஅறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் .அவரது அறிவிப்பில்,அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு ,சமையல் எண்ணெய், … Read more

நஷ்டத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படும்-அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

கோழிப்பண்ணையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்  தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.இதில் திமுக  சட்டமன்ற உறுப்பினர் வேலு உரையாற்றினார்.அவரது உரையில்,  கொரோனா தொற்று அச்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு தீவனம் வாங்க மான்யம் வழங்க அரசு முன்வருமா? என்று தெரிவித்தார். இதன் பின் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசினார்.அவர் பேசுகையில், கோழிகள் மூலம் எந்தவித கொரனா வைரஸும் பரவுவதில்லை. கோழிப்பண்ணையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று … Read more

தமிழக சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணித்துறை மீது விவாதம்

தமிழக சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை மீதான விவாதம் நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு  கடந்த 9 -ஆம் தேதி நடைபெற்றது.பேரவையில், முன்னாள் உறுப்பினர் சந்திரன், முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் காத்தவராயன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.பேரவையில், மறைந்த திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பின் மறைந்த சட்டமன்ற உறுப்பினருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பேரவை அலுவல்கள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இறுதியாக தமிழக சட்டப்பேரவை மீண்டும் கடந்த 11- … Read more

தூத்துக்குடியில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் துவங்கப்படும் -அமைச்சர் அறிவிப்பு

தூத்துக்குடியில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்  துவங்கப்படும் என்று அமைச்சர்  உடுமலை ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.  2020-2021 ம் ஆண்டிற்கான கால்நடை பராமரிப்புத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.இதில் கால்நடைத்துறை அமைச்சர்  உடுமலை ராதாகிருஷ்ணன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவரது அறிவிப்பில்,தூத்துக்குடியில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்  துவங்கப்படும்.சென்னை காட்டுப்பாக்கத்தில்  சிவப்பு செம்மறியாடு உள்ளீட்டு மையம் துவங்கப்படும்.தென்காசியில் ரூ.2.70 கோடியில் வெள்ளாட்டின ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். மேலும் எந்த அச்சமுமின்றி கோழிக்கறியை உண்ணலாம் என்றும் … Read more

வெடிகுண்டு கலாச்சாரத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் – துரைமுருகன்

வெடிகுண்டு கலாச்சாரத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.  தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.பேரவையில் எதிர்கட்சித் துணைத் தலைவரும் ,திமுக சட்ட மன்ற உறுப்பினருமான துரைமுருகன் பேசினார். அவர் பேசுகையில், தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். அதிமுக அமைச்சர் மற்றும் திமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆகியோரின் வீடுகளில் வெடிகுண்டு வீசப்பட்டிருப்பது ஆபத்தானது என்பதை அரசு உணர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

குடியுரிமை திருத்த சட்டம் : அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் – மு.க.ஸ்டாலின்

குடியுரிமை திருத்த சட்டம்  பற்றி விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.அப்பொழுது குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தப்பட்டது. அப்பொழுது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், இஸ்லாமிய அமைப்பினருடன் தலைமைச் செயலாளர் பேசியது என்ன ?  என்று கேள்வி எழுப்பினார். இஸ்லாமியர்களுடன் தலைமைச் செயலாளர் என்ன பேசினார் என்பதை விளக்க வேண்டும் என்று தெரிவித்தார்.குடியுரிமை திருத்த … Read more

ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படாது- முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படாது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.  இன்று தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நடைபெற்றது.இதில் சுற்றுச்சூழல் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.அப்பொழுது தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பரசன்    ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக பேசினார்.இதற்கு பதில் அளிக்கும் விதமாக முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.   அப்பொழுது அவர் பேசுகையில் ,தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படாது.காவிரி டெல்டா பகுதி முழுமையாக பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அச்சப்பட வேண்டியதில்லை  என்று பதில் அளித்தார்.