கோயில் குளத்தில் மூழ்கி 3 இளைஞர்கள் உயிரிழப்பு!

செங்கல்பேட்டு அருகே கோயில் குளத்தில் மூழ்கி 3 இளைஞர்கள் உயிரிழப்பு. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சிதம்பர சாமி கோயில் குளத்தில் மூழ்கி 3 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. குளத்தில் மூழ்கி உயிரிழந்த தனியார் கல்லூரி மாணவர்களான முகேஷ் (18), உதயகுமார் (19) மற்றும் விஜய் (18) மூவரது உடலையும் தீயணைப்புத்துறையினர் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கி சூடு சம்பவம் -திமுக எம்.எல்.ஏ. இதயவர்மன் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு

துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக திருப்போரூர் திமுக எம்.எல்.ஏ. இதயவர்மன் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே செங்காடு கிராமத்தில் திமுக எம்எல்ஏ இதயவர்மன் மற்றும் குமார் என்பவருக்கும்  இடையே இருந்த நிலத்தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் இதயவர்மனின் தந்தை லக்ஷ்மிபதி , குருநாதன், மனோகரன் ஆகிய மூன்று பேருக்கும் காயம் ஏற்பட்டதாகவும்  கூறப்படுகிறது.அப்பொழுது இதயவர்மன் குமாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.ஆனால் அந்த குண்டு அவ்வழியே சென்ற அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவர் … Read more