தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பண்ணக்கூடிய பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் கலியமூர்த்தி. இவருடைய மகன் கல்யாணசுந்தரம் இவர் அப்பகுதியில் எலக்ட்ரிக்சன் வேலை செய்து வருகிறார், மேலும் கல்யாணசுந்தரம் தனது வீட்டின் முன்பு நேற்று இரவு நின்று கொண்டிருந்தபோது இரண்டு பேர் வந்து அவரிடம் தகராறு செய்துள்ளனர். மேலும் இந்த தகராறில் , கல்யாணசுந்தரத்தை அந்த இரண்டு பேர் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து கல்யாணசுந்தரத்தை குத்தியுள்ளனர், மேலும் இதனால் கல்யாணசுந்தரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். […]
ஆறாவது நாளாக தமிழகத்தில் தொடரும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தீவிரம் அடையும் நிலையில் தற்போது போக்குவரத்து ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன் போரரட்டம் செய்தனர்.தஞ்சாவூரில் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். 1200 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். தஞ்சை மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். போக்குவரத்து ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து கும்பகோணம் கோட்ட பொதுமேலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார். source: www.dinasuvadu.com