பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று வரலாற்று சாதனை ..!

பாகிஸ்தான் அணியை 115 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா தொடரை 1-0 என கைப்பற்றியது. பாகிஸ்தான் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்தன. இதைத்தொடர்ந்து, லாகூரில் நடைபெற்ற பாகிஸ்தான் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 115 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா வெற்றி: 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. மூன்றாவது … Read more

#SAvsIND டெஸ்ட் – முதல் நாள் ஆட்டம் முடிவு..!

இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 90 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் எடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. இன்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் இருவரும் … Read more

தென்னாப்பிரிக்க வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்திருப்பதன் காரணம் ?

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.முதல் நாளான இன்று தென்னாப்பிரிக்க வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவிய அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பேராயர் டெஸ்மண்ட் டுட்டுவின் மறைவுதான் இதற்கான காரணம் என தெரியவந்துள்ளது. டுட்டு தென்னாப்பிரிக்காவின் புகழ்பெற்ற ஆளுமை நெல்சன் மண்டேலாவின் சமகாலத்தவர். ஆப்பிரிக்காவில் வெள்ளை சிறுபான்மை … Read more

தோல்வியை நெருங்கவிடாமல் கேப்டனாக தொடரும் ரஹானே..!

டெஸ்ட் போட்டியில் தோல்வியை காணாத கேப்டனாக ரகானே தொடர்ந்து வருகிறார். இந்தியா சுற்று பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் விளையாடிய 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையில் கடந்த 25-ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்தியா அணி தனது முதல் இன்னிங்சில் 111.1 ஓவர் … Read more

4-நாள் ஆட்டம் முடிவு- 291 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து வெற்றி..!

4-ஆம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட்டை இழக்காமல் 32 ஓவரில் 77 ரன்கள் எடுத்துள்ளனர். இந்தியா-இங்கிலாந்து இடையே 4 டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதனத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 191 ரன்கள் எடுத்தனர். இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 290 ரன்கள் எடுத்தனர். இதனால், இங்கிலாந்து அணி 99 ரன்கள் முன்னிலையில் இருந்த நிலையில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்க்ஸை தொடங்கியது. … Read more

இங்கிலாந்து அணிக்கு 368 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா..!

இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 148.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 466 ரன்கள் எடுத்தனர். இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது இந்தியா-இங்கிலாந்து இடையே 4 டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதனத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், முதலில் இந்திய அணி பெட்டிங் செய்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 61.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 191 ரன்கள் எடுத்தனர். … Read more

#BREAKING: சென்னை டெஸ்ட் போட்டி – ரசிகர்களுக்கு அனுமதி.!

சென்னையில் நடைபெறும் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 5 முதல் 9 ஆம் தேதி வரையிலும், 2 வது டெஸ்ட் போட்டி, பிப்ரவரி … Read more

அடுத்தடுத்து விக்கெட் டெஸ்ட் போட்டியில் விக்கெட் கணக்கை தொடங்கிய சின்னப்பம்பட்டி எக்ஸ்பிரஸ் ..!

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ளது. இதனைதொடர்ந்து, 4 ஆம் டெஸ்ட் போட்டி, இன்று முதல் 19 ஆம் தேதி வரை பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெறுகிறது. இன்று தொடங்கிய 4-வது டெஸ்ட் போட்டி மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் அறிமுகமானார். இந்நிலையில், இன்றைய முதல் போட்டியில் 64 ஓவரை வீசிய … Read more

சிட்னி டெஸ்ட்: ரிஷாப் பந்த் வலியுடன் விளையாடி 12 பவுண்டரிகள், 3 சிக்ஸர் விளாசல்..!

சிட்னியில் நடைபெற்றுவரும் 4 வது டெஸ்ட் போட்டியில் ஐந்தாவது மற்றும் கடைசி நாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்தியா அணியின் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் ரிஷாப் பந்த் இரண்டாவது இன்னிங்சில் 5-வது இடத்தில் களமிறங்கினர். இந்த போட்டியில் ரிஷாப் பந்த் தனது மூன்றாவது டெஸ்ட் சதத்தை தவறவிட்டார். நாதன் லியோன் வீசிய பந்தை அடித்த ரிஷாப் பந்த் கேட்சை பாட் கம்மின்ஸ் பிடித்தார். இந்த இன்னிங்சில் 97 ரன்கள் எடுத்த பிறகு பந்த் அவுட்டானார். … Read more

4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 98 ரன்கள்..!

இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 3-வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 105.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 338 ரன்கள் எடுத்தனர். இறங்கிய  இந்திய அணி 100.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 244 ரன்கள் எடுத்தனர். இதன் காரணமாக 94 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்சை  ஆஸ்திரேலிய அணி நேற்றைய 3-ம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய … Read more