ஸ்வீடன் இளவரசர் கார்ல் பிலிப் மற்றும் இளவரசி சோபியா இருவருக்கும் லேசான கொரோனா அறிகுறி உறுதிசெய்யப்பட்ட நிலையில், அரண்மனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஸ்வீடன் இளவரசர் கார்ல் பிலிப் மற்றும் இளவரசி சோபியா இருவருக்கும் லேசான கொரோனா அறிகுறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மன்னர், ராணி, பட்டத்து இளவரசர் மற்றும் அரச குடும்பத்தினர் அனைவரும் கொரோனா பரி சோதனைக்கு உட்படுத்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று அரச குடும்பத்தினர் அனைவரும் ராணியின், சகோதரரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். […]