Arvind Kejriwal: டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு. கடந்த மாதம் மதுமான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றம் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, அமலாக்கத்துறை கைது சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை சமீபத்தில் நடைபெற்ற நிலையில், அமலாக்கத்துறை மற்றும் கெஜ்ரிவால் தரப்பில் வாதங்கள் […]
Supreme Court: அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம். கடந்த 2008-ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை அந்த துறையை சார்ந்த அமைச்சர் ஐ.பெரியசாமி முறைகேடாக ஒதுக்கியதாக புகாா் எழுந்தது. இதன்பின் கடந்த 2012 அதிமுக ஆட்சியில் ஐ.பெரியசாமிக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஐ.பெரியசாமிக்கு எதிரான […]
Supreme court: உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமைச்சர் ஐ பெரியசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு 8ம் தேதி விசாரணை. வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமைச்சர் ஐ பெரியசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் 8ம் தேதி திங்கட்கிழமை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் இருந்து ஐ பெரியசாமியை விசாரணை நீதிமன்றம் விடுவித்த […]
TN Govt: வெள்ள நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு. கடந்தாண்டு இறுதியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை கொட்டி தீர்த்தது. இதில், குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் வெள்ளத்தில் மிதந்ததால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் கனமழை பெய்து, வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் வாழ்வாதாரம் […]
Senthil Balaji: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ். கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதன்பின் செந்தில் பாலாஜிக்கு எதிரான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, இதற்கான நகலும் அவரிடம் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி பல்வேறு முறை செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றமும், […]
Ponmudi :தமிழக ஆளுநர் ஆர்என் ரவிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து மீண்டும் அமைச்சராக இன்று பிற்பகல் பதவியேற்கிறார் பொன்முடி. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பு தெரிவித்ததை அடுத்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. Read More – நீங்கள் முடிவு எடுக்கலனா நாங்கள் எடுக்க நேரிடும்.. ஆளுநர் ரவிக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை! இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் […]
Electoral Bonds : கடந்த மாதம் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி வாங்கும் நடைமுறையை உச்சநீதிமன்றம் தடை செய்தது. மேலும், தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி வாங்கிய விவரங்கள், பல்வேறு நிறுவனங்கள், தனி நபர்கள் ஸ்டேட் பாங்க் மூலம் தேர்தல் பத்திரங்களை வாங்கிய விவரங்கள் ஆகியவற்றை வெளியிட உத்தரவிட்டது. Read More – இந்தியாவில் ஜனநாயகம் இல்லை… ரயில் டிக்கெட் கூட எடுக்க முடியவில்லை… ராகுல் காட்டம்.! இந்த உத்தரவின்படி, முதலில் […]
Supreme court: பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் விவகாரத்தில் நாளைக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று ஆளுநர் ரவிக்கு உச்சநீதிமன்றம் கெடு வைத்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதனால் இழந்த எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவி பொன்முடிக்கு மீண்டும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. Read More – 20 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள், 24 தொகுதிகளில் தாமரை சின்னம்.! அண்ணாமலை அதிரடி […]
Ankit Tiwari : திண்டுக்கல்லை சேர்ந்த மருத்துவர் சுரேஷ் பாபு என்பவரை மிரட்டி அமலாக்கத்துறை அதிகாரியாக இருந்த அங்கித் திவாரி 20 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றதாக அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகிறது. Read More – 5000 ரூபாய் பணம்.? 2 சிறுவர்களை கொடூரமாக வெட்டி கொலை செய்த கொடூரன்.! இந்த வழக்கில் இருந்து இடைக்கால ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்றத்தை அடுத்து உச்சநீதிமன்றத்தில் அங்கித் திவாரி வழக்கு தொடர்ந்து […]
Supreme Court: தேர்தல் பாத்திரம் விவகாரம் தொடர்பாக எஸ்பிஐ வங்கியின் நடவடிக்கையில் திருப்தி இல்லை என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி வாங்கும் நடைமுறையை உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் ரத்து செய்து, தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை எஸ்பிஐ வங்கி இந்திய தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தது. இதனை […]
SBI : தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஆவணங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் வழங்கி விட்டதாக உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ கூறியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி வாங்கும் முறையை கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் தடை விதித்து உத்தரவிட்டது. அதுமட்டுமில்லாமல், தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கெடு வைத்தது. Read More – காவேரி நீரை மத்திய அரசு கூறினாலும், தமிழக அரசு […]
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அளித்துள்ளது SBI வங்கி. கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி வாங்குவதை தடை செய்து உத்தரவிட்டது. மேலும், ஏப்ரல் 2019 முதல் தற்போது வரையில் விற்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது. READ MORE – தேர்தல் பத்திரங்கள்… நாளை தான் கடைசி.! ஸ்டேட் […]
Ponmudi : முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் எம்.எல்.ஏ பதவி வழங்குவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் விடுதலையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டது. Read More – பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கு! தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு இதனை எதிர்த்து […]
Anand Venkatesh: ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்து பார்ப்பது தவறில்லை, என்றுக் கூறிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில், குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை செல்போனில் பதிவிறக்கம் செய்து பார்த்ததாக திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் இளைஞர் ஒருவர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. Read More – பள்ளிக்கல்வி […]
Ponmudi: சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சர் பொன்முடியை குற்றவாளி என தீர்மானித்ததை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராகவும், கனிம வளத்துறை அமைச்சராகவும் பொன்முடி பதவி வகித்தார். Read More – இது ஸ்டாலின் அண்ணன் கொடுத்த சீர்… நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் முதலமைச்சர் உரை! அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் […]
Electoral Bonds : அரசியல் கட்சிகள் நிதி பெற வழிவகுக்கும் தேர்தல் பத்திரங்கள் முறை ரத்து செய்து கடந்த மாதம் 15ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்தல் பத்திர திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை, இதனால் அந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. Read More – பிரிட்டன் பிரதமர் ரிஷி சுன்க் மாமியாருக்கு இந்தியாவில் எம்பி பதவி.! மகளிர் தின சர்ப்ரைஸ்..! இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் […]
Ponmudi: சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் அவ்வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவி மீது தொடரப்பட்ட வழக்கில் இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக பொன்முடியின் அமைச்சர் பதவி பறிபோனது. இதையடுத்து, சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்தார். […]
Kanimozhi: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட உத்தரவை உறுதி செய்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு திமுக எம்.பி. கனிமொழி வரவேற்பு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த நிலையில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. விதிமீறல்கள் பல இருப்பதால் தான் அரசு மற்றும் உயர்நீதிமன்றம் உரிய முடிவு எடுத்துள்ளது என்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது மாநில […]
Sterlite: தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் போராட்டம் நடத்தினர். ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை மூடசென்னை உயர் நீதிமன்றம் 2020-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல் மேல்முறையீடு செய்தது. இந்த மேல் மேல்முறையீடு வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து […]
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுசூழல் மாசுபடுகிறது, அங்கு சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என கூறி எதிர்ப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்த வேளையில் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பெரும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, மீண்டும் தூத்துக்குடியில் […]