மருந்துகள் தேவையில்லை… நீரிழிவை கட்டுப்படுத்தும் சில இயற்கையான வழிமுறைகள் இதோ…!

எல்லோருமே ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். ஆனால் பணம் சம்பாதிப்பதற்காக குடும்பத்திற்காகவும் வேலையை பார்த்து செல்லக்கூடிய நபர்களுக்கு காலப்போக்கில் அவர்களை அறியாமலேயே உடல்நலம் அதிகம் பாதிக்கப்பட்டு விடுகிறது. அதிலும் தற்போது பலருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீரிழிவு பிரச்சனை இருந்தால் உணவு வகைகளில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்பது மட்டுமல்லாமல் மருந்துகளும் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. கணையம் இன்சுலினை குறைவாக உற்பத்தி செய்வது தான் நீரிழிவு நோய்க்கான காரணம். இதற்காக … Read more

வெறும் 3 பொருள் இருந்தால் போதும்… 90 கிட்ஸுக்கு மிகவும் பிடித்த பால் கோவா தயார்….!

பெரும்பாலும் 90 கிட்ஸ் எல்லோருமே அவர்கள் பள்ளியில் வளர்ந்து வந்த காலகட்டங்களில் கடைகளில் விற்கப்பட்ட சிறு சிறு தின்பண்டங்களை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் இந்த தின்பண்டங்கள் தற்பொழுது கிடைப்பதில்லை. இப்போது உள்ள குழந்தைகளுக்கு ஏற்றவாறு அவசரமாக தயாரிக்கக்கூடிய பொரிகள், மிட்டாய்கள் தான் தற்பொழுது விற்கப்பட்டு வருகிறது. 90 கிட்ஸ் காலத்தில் விற்கப்பட்ட உணவுகள் நாளடைவில் கண்களுக்கு தெரியாமல் மறைந்து போய்விட்டது. இருப்பினும் இந்த உணவுகளை எப்படி நாம் வீட்டிலேயே செய்து கொள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். … Read more

இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் இயற்கை வழிமுறைகள் சில இதோ!

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைப்பதற்கான இயற்கை வழிமுறைகள் சிலவற்றை நாம் இன்று அறிந்து கொள்வோம். நீரிழிவு நோயாளிகளுக்கு உயர் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது வழக்கம்தான். இந்த ரத்த சர்க்கரையின் அளவை எவ்வாறு குறைப்பது என்று தெரியாமல் ஆங்கில மருந்துகள் மற்றும் மாத்திரைகளை அதிகம் உட்கொண்டு நாளடைவில் அதன் மூலமாகவே மாற்று நோய்களையும் தேடி வைக்க கூடிய நிலை தற்பொழுது உருவாகிவிடுகிறது. மன அழுத்தம், தூக்கமின்மை, காலை உணவை தவிர்ப்பது, போதுமான தண்ணீர் குடிக்காதது … Read more

சர்க்கரை ஏற்றுமதிக்கு ரூ.3500 கோடி மானியம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்…!

சர்க்கரை ஏற்றுமதி மானியத்திற்கு ரூ. 3,500 கோடி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள நிலுவைத் தொகையை அகற்ற உதவும் முயற்சிகளின் ஒரு பகுதியாக 2020-21 நடப்பு ஆண்டில் 60 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ய சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.3,500 கோடி மானியம் வழங்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. மானிய பணத்தை நேரடியாக விவசாயிகளின் கணக்குகளில் டெபாசிட் செய்ய   அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. 60 லட்சம் டன் சர்க்கரை … Read more

2 முட்டை இருந்தால் போதும், மாலை நேர இனிப்பு உணவு தயார்!

மாலை நேரத்தில் குழந்தைகள் எதாவது சாப்பாடு கேட்பது வழக்கம், நாம் அதற்காக கடைகளில் விற்கும் எண்ணெய் பண்டங்களை வாங்கி கொடுக்காமல் வீட்டிலிருக்கும் முட்டையை வைத்து சுவையான வட்லாப்பம் செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருள்கள் முட்டை பால் பவுடர் சர்க்கரை ஏலக்காய் உப்பு செய்முறை முதலில் முட்டையை நன்றாக உடைத்து ஒரு கிண்ணத்தில் போட்டு நுரை வரும் அளவுக்கு அடித்து வைத்து கொள்ளவும். பின்பு சர்க்கரை மற்றும் பால் பவுடரை நன்றாக கலக்கி முட்டை … Read more

விசித்திரமான ட்ரிக்.! கரப்பான் பூச்சியை வெறும் சீனியை வைத்தே அடிச்சு ஓட விடலாம்.!

கரப்பான் பூச்சியை வெறும் சீனி மற்றும் பேக்கிங் பவுடரை வைத்தே அடிச்சு ஓட விடலாம் வாருங்கள் பார்க்கலாம். தற்போது உலக முழுவதும் பயன்படுத்தப்படும் பொருளில் ஒன்றாக சர்க்கரை மாறியுள்ளது. கேக்குகள், காபி, புட்டுகள், அணைத்து இனிப்புகளுக்கும் சர்க்கரை முக்கிய பங்கு வகுக்கிறது. உலகெங்கிலும் உள்ளவர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு முறைக்கு மேல் சர்க்கரையைப் பயன்படுத்துகிறார்கள். உலகம் முழுவதும் அனைத்து குடும்பங்களுக்கும் ஒரு பழக்கப்பட்டஒரு முக்கியமான தொல்லை கரப்பான் பூச்சியாகும். கரப்பான் பூச்சியை முழுமையாக விரட்ட இதுவரை எந்த … Read more

சிகப்பு நிற உதடு வீட்டிலிருந்தே பெறுவது சுலபம்! எப்படி தெரியுமா?

பெண்கள் ஆண்கள் யார் என்றால் என்ன? இருவருக்குமே உதடு சிகப்பாக இருந்தால் வேண்டாம் என்றா இருக்கிறது. உதடு என்பது முகத்தில் அழகை கூட்ட கூடிய ஒரு அங்கமாக கருதப்படுகிறது. இது சிலருக்கு மிகவும் கருப்பாக இருப்பதால் முகம் வாடியது போல காணப்படும். இந்த உதட்டை எப்படி வீட்டில் இருந்தே சிகப்பாக மாற்றலாம் என பார்க்கலாம். தேவையான பொருட்கள் சீனி எலுமிச்சை பழச்சாறு செய்முறை முதலில் சிறிதளவு சீனி எடுத்துக் கொண்டு அதனுடன் எலுமிச்சை சாறு எடுத்து லேசாக … Read more

முந்துங்கள் மக்களே.! இன்று தான் கடைசி நாள் பொங்கல் பரிசு பெறாதவர்களுக்கு SMS அனுப்பப்படும்.!

தமிழகத்தில், இதுவரை 94.71% சதவீதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறாதவர்ககளுக்கு, அவரவர் ரேஷன் கடைகளில் இருந்து பொங்கல் பரிசு பெற்றுக்கொள்ளுமாறு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில் கடந்த 9-ம் தேதியில் இருந்து குடும்ப அட்டை ஒன்றுக்கு, ரூ.1000 ரொக்கமும், 1கி பச்சரிசி, சர்க்கரை, கரும்புத்துண்டு உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. … Read more

சர்க்கரையை குறைத்து கொண்டால் இவ்வளவு நன்மையா.?

இன்றைய காலகட்டத்தில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அதிகம் இனிப்பு சார்ந்த பொருள்களை விரும்பி சாப்பிடுகின்றனர்.இனிப்பு உணவுகளில் அதிக அளவு சர்க்கரை பயன்படுத்துகின்றனர். டீ, காபி போன்ற அனைத்திற்கும் அதிக அளவு சர்க்கரையை சேர்த்து உண்டு வருகின்றனர். அப்படி அதிக அளவு சர்க்கரை உடலில் சேர்வதால் பல வகையான கேடு ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக அதிக சர்க்கரை உயர் ரத்த அழுத்தம் , மாரடைப்பு ,  வாந்தி ,சிறுநீர் பாதிப்பு போன்றவையும் ஏற்படுகிறது. அந்தவகையில் … Read more

60 அடி கிணறுக்குள் விழுந்த லாரி.. 25,000 கிலோ சர்க்கரை நாசம்..!!

நாமக்கல் மாவட்டத்தில் இருந்து நெல்லை மாவட்டத்திற்கு வினியோகம் செய்ய வந்த லாரி கிணறில் மூழ்கியது. மலை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு கிணறில் மூழ்கி 25,000 கிலோ சர்க்கரை நாசமானது. நாமக்கல் மாவட்டமான மோகனுரில் சர்க்கரை ஆலையில் இருந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்வதற்காக ஒரு லாரியில் 25,000 கிலோ சர்க்கரை மூட்டைகள் வந்துள்ளது. இந்த லாரியானது நேற்று காலை நெல்லை பக்கத்தில்  தாழையூத்தில் இருக்கும் அரசு அரிசி ஆலைக்கு வந்துள்ளது. அரசி குடோனுக்கு … Read more