இந்தியாவில் பல இடங்களில் கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் தீவிரமாக பரவி வருகிற நிலையில், தமிழ்நாட்டில் இந்நோயானது 400-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் சிறப்பு வார்டுகளில் இயக்கப்பட உள்ள தானியங்கி ரோபோக்களை சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். இந்த ரோபோக்களை, Propeller techno என்ற தனியார் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ரோபோக்களுக்கு, Zafi, zafing bo, […]