ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருப்பது மீனவ கிராமங்களில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர், ஒரு படகில் கடலில் இரவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படை, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி, 10 பேரை கைது செய்ததோடு, படகையும் பறிமுதல் செய்து எடுத்து சென்றது. கைதான 10 மீனவர்களும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். விசாரணை […]
ராமேஸ்வரம் : நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, பருத்தித்துறை அருகே இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர். அத்துடன் ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். தற்போது, சிறைபிடிக்கப்பட்ட 12 மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படையினர் அழைத்து சென்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு (நவ.,10) 23 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இன்று 12 பேர் சிறைபிடிப்பால் தமிழக […]
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 55 பேரவை விடுவிக்க கோரி முதலமைச்சர் கோரிக்கை. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 55 பேரை சிறைபிடித்துள்ள இலங்கை கடற்படை, 8 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. இலங்கை கடற்படை செயலுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 55 பேரவை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் […]
இந்திய பெருங்கடலில் உள்ள நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் 8 பேரும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் 2 படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், காங்கேசம் துறைமுகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.