சென்னை சவுகார்பேட்டையில் மூன்று பேர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியான ஜெயமாலா கைது செய்யப்பட்டுள்ளார். ஜெயமாலா நடத்திய விசாரணையில் பல தகவல்களை தெரிவித்தார். அதில், தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கப்பட்டதாகவும், இதுகுறித்து தனது சகோதரரிடம் தெரிவித்ததாகவும் கூறினார். அந்த ஆத்திரத்தில் தான் இந்த கொலை சம்பவத்தை நடத்தியதாக ஜெயமாலா கூறினார். எனவே இந்த பாலியல் தொல்லை தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்த முடிவு செய்தனர். […]