தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்க சோனியாவுக்கு அதிகாரம் வழங்கி, இமாச்சல் காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியது. இமாச்சல பிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினரால், காங்கிரஸ் கட்சியின் அடுத்த தேசிய தலைவரை தேர்வு செய்ய இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அதிகாரம் வழங்கி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி(AICC) உறுப்பினர்களை நியமிக்கவும் சோனியாவுக்கு இந்த தீர்மானம் உதவும் என கூறப்படுகிறது. இந்த தீர்மானம் குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் […]
“இந்திய அரசியல் வரலாற்றில் இந்த பாரத ஒற்றுமை யாத்திரை ஒரு மாற்றமான தருணமாக இருக்கும்” என்று சோனியா காந்தி கூறினார். காங்கிரஸ் எம்.பியும் மூத்த தலைவருமான ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் 3,570 கிமீ தூரம் நடந்தே சென்று கொண்டிருக்கிறார். நேற்று மாலை கன்னியாகுமரியில் இருந்து இந்த நடைபயணம் தொடங்கியது. பாரத ஒற்றுமை யாத்திரை இன்று இரண்டாம் நாளாக தொடர்கிறது. அடுத்து திருவனந்தபுரம் செல்கிறார் ராகுல் காந்தி. வழிநெடுக காங்கிரஸ் தொண்டர்கள் புடைசூழ ஒற்றுமை […]
நேஷனல் ஹெரல்டு நிறுவனத்தின் டெல்லி அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனத்தை, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு நெருங்கிய தொடர்புடைய நிறுவனத்திற்கு மாற்றிய போது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதாக பாஜகவை சேர்ந்த சுப்ரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்து இருந்தார். இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அண்மையில் கூட அமலாக்கத்துறையினர் விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ஏற்கனவே ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரிடம் விசாரணையும் நடைபெற்றன. […]
நேஷனல் ஹெரால்ட் வழக்கு தொடர்பான இன்றும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகியுள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை நிறுவனத்தின் பங்குகளை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு நெருக்கமான நிறுவனத்திற்கு மாற்றியது தொடர்பாக எழுந்த பணப்பரிவர்த்தனை தொடர்பாக வழக்கு தொடர்பாட்டிருந்தது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த இந்த விசாரணை கடந்த வாரம் மீண்டும் தொடர்ந்தது அப்போது அவர் அமலாக்க துறையின் முன் ஆஜரானார். இந்த வழக்கு தொடர்பாக நேற்று […]
நேஷனல் ஹெரால்ட் வழக்கில் இன்று மீண்டும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகியுள்ளார் சோனியா காந்தி. நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை நிறுவனத்தை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி க்கு தொடர்புடைய நிறுவனத்திற்கு மாற்றியபோது, முறைகேடாக பண பரிமாற்றம் செய்ததாக கூறி பாஜக முக்கிய தலைவர் சுப்ரமணிய சாமி புகார் அளித்து இருந்தார். அதன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் விசாரணை கடந்த வியாழக்கிழமை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் நடைபெற்றது. அப்போது நாடு முழுவதும் காங்கிரசார் பல […]
அமலாக்கத்துறையின் மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் காங்கிரஸ் என்றும் அடிபணியாது. – சோனியா காந்தியை அமலாக்க துறை விசாரணை செய்வதை எதிர்த்து பா.சிதம்பரம் கருத்து. நேஷனல் ஹெரால்டு வழக்கில் பணமோசடி இருப்பதாக கூறி தொடரப்பட்ட வழக்கில், இன்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அமலாக்கத்துறை முன்பு விசாரணையில் இருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான பா.சிதம்பரமும் இந்த […]
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன்,தேர்தல் வியூகரான பிரசாந்த் கிஷோர் 3-வது முறையாக தற்போது மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றார்.வருகின்ற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,அத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு வழி வகுக்கும் முறைகள் தொடர்பாக இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருபதாக கூறப்படுகிறது. ஏற்கனவே,நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக சோனியா காந்தியிடம் கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி பிரசாந்த் கிஷோர் விளக்கிய நிலையில்,நேற்றும் சந்திப்பு நிகழந்துள்ளது.இந்த நிலையில்,தற்போது […]
உத்தரகாண்ட்:டேராடூனில் வசிக்கும் புஷ்பா முன்ஜியால் என்ற மூதாட்டி,காங்கிரஸ் தலைவரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டதாக கூறி,ராகுல் காந்தியின் பெயருக்கு வீடு, தங்க ஆபரணங்கள் உட்பட தனது முழு சொத்தையும் எழுதி வைத்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த 78 வயது மூதாட்டியான புஷ்பா முன்ஜியால்,50 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள்,10 டோலா தங்கம் உட்பட தனது சொத்துக்கள் அனைத்தையும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பெயரில் வைத்துள்ளார்.புஷ்பா முன்ஜியால்,டேராடூன் நீதிமன்றத்தில்,தனது சொத்துக்களின் உரிமையை நேற்று ராகுல் காந்திக்கு அளித்து உயிலை தாக்கல் […]
டெல்லியில் ஏப்ரல் 5-தாம் தேதி சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் ஏப்ரல் 5-ம் தேதி காலை 9 மணிக்கு காங்கிரஸ் எம்பிக்கள் உடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்த உள்ளார்.
உத்திரபிரதேசம் , பஞ்சாப் , கோவா , உத்தராகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை தழுவியது. அதிலும், குறிப்பாக ஆளும் மாநிலமாக இருந்த பஞ்சாபிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவியது.இதனால், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, பா. சிதம்பரம், பிரியங்கா காந்தி உள்பட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டனர். கட்சியின் தோல்விக்கான காரணங்கள், எதிர்கால திட்டங்கள், கட்சியில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள், […]
உத்திரபிரதேசம்,பஞ்சாப்,கோவா,உத்தராகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் முன்னதாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.இதனையடுத்து,தேர்தல் முடிவுகள் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது. அதில்,பஞ்சாப் தவிர மற்ற நான்கு மாநிலங்களில் பாஜக பெரும் வெற்றி பெற்றது.மேலும்,பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.ஆனால்,5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை தழுவியது. அதிலும்,குறிப்பாக ஆளும் மாநிலமாக இருந்த பஞ்சாபிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவியது.இந்நிலையில்,காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் […]
உத்திரபிரதேசம் , பஞ்சாப் , கோவா , உத்தராகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை தழுவியது. அதிலும், குறிப்பாக ஆளும் மாநிலமாக இருந்த பஞ்சாபிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், 5 மாநில தேர்தல் தோல்வி மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் […]
டெல்லி:காங்கிரஸ் கட்சியின் 137-வது ஆண்டு தினத்தையொட்டி,கட்சி தலைமையகத்தில் அக்கட்சி தலைவர் சோனியா காந்தி கொடி ஏற்றும்போது,கயிறு கழன்று அவரது கைகளில் கொடி விழுந்தததால் கட்சியினர் அதிர்ச்சி. காங்கிரஸ் கட்சியின் 137-வது ஆண்டு தின விழா இன்று நாடு முழுவதும் அக்கட்சியினரால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில்,தலைநகர் டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் கொடி ஏற்றுவதற்கு,இன்று காலை அக்கட்சி தலைவர் சோனியா காந்தி வருகை புரிந்தார். அவர் கொடி கம்பத்தில் ‘காங்கிரஸ் கொடி’ ஏற்றும்போது,கொடி […]
பஞ்சாப் மாநில மக்களவை எம்.பி.க்கள் சோனியா காந்தியை சந்திக்கிறார். இன்று மாலை 6.30 மணிக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் பஞ்சாப் மாநில மக்களவை எம்.பி.க்கள் சந்திக்கிறார். காங்கிரஸின் ஸ்கிரீனிங் கமிட்டி கூட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. கூட்டம் பின்னர் பேசிய பஞ்சாப் மற்றும் சண்டிகரில் உள்ள காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரிஷ் சவுத்ரி ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கட்சி சீட்டு வழங்க முடிவு செய்தது. இன்றைய கூட்டத்தில் 117 […]
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது பிறந்தநாளை நாளை கொண்டாடுவதில்லை என்று முடிவு செய்துள்ளார். இன்று காலை குன்னூர் அருகே முப்படைகளின் தளபதி பிபின் ராவத் புறப்பட்டு சென்ற ராணுவ ஹெலிகாப்டர் காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், நாளை டிசம்பர் 9 ஆம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை என்று […]
மோடி அரசுக்கு விவசாயிகள் மீது அக்கறை இல்லை என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அவர்கள் டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், மத்திய அரசை கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார். அதாவது வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் 700 பேருக்கும் மரியாதை செலுத்துவோம். நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை உயர்ந்துள்ளது. எனவே ஒவ்வொரு குடும்பத்தின் மாதாந்திர பட்ஜெட்டும் […]
இன்று ஜவர்ஹலால் நேரு பிறந்த தினம் கொண்டாடப்படும் நிலையில், அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை செலுத்தியுள்ளார். 1889 ஆம் ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி அலகாபாத்தில் பிறந்தவர் தான் பண்டித ஜவஹர்லால் நேரு. இந்தியாவின் முதல் பிரதமரான இவர் குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். எனவே இவரது பிறந்த தினம் ஆண்டுதோறும் நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்றும் மறைந்த முன்னாள் பிரதமர் நேரு அவர்களின் 132 வது பிறந்த நாள் […]
பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் சேர்வதற்கு மூத்த தலைவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், தலைவர் சோனியா காந்தி விரைவில் முடிவு. பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்த தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், ஐ-பேக் என்ற நிறுவனத்தின் மூலமாக பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் வியூகங்கள் வகுத்து கொடுத்து வருகிறார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக பிரசாந்த் கிஷோர் […]
காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் தற்போது காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி,18 எதிர்க்கட்சி தலைவர்களுடன் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.காணொலி வாயிலாக நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்,விடுதலை சிறுத்தைக் கட்சி,முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் எம்பி […]
சிக்கிம், நாகாலாந்து மற்றும் திரிபுராவின் காங்கிரஸ் பொறுப்பாளரை நியமனம் செய்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார். சிக்கிம், நாகாலாந்து மற்றும் திரிபுராவின் காங்கிரஸ் பொறுப்பாளராக அஜோய் குமாரை நியமனம் செய்து, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார். அஜோய் குமார் ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். 15 வது மக்களவையில், ஜாம்ஷெட்பூர் மக்களவைத் தொகுதியின் எம்.பி. அவர் இந்திய தேசிய காங்கிரசின் தேசிய செய்தி தொடர்பாளர். அவர் ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் கமிட்டியின் […]