இடைத்தேர்தலை நிறுத்த கோரி கமலஹாசன் கட்சி சார்பில் மனு! எந்த தொகுதியில்?

தமிழ் நாட்டில் மக்களவை தேர்தல் நிறைவடைந்தாலும் இடைத்தேர்தல் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. நாளை இடைதேர்தல் நடைபெற உள்ள நிலையில் நேற்றுடன் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பிரச்சாரம் ஓய்ந்தது. இந்நிலையில் இடைதேர்தல் நடைபெறும் சூலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சியின் பொது செயலாளர் அருணாச்சலம், தலைமை தேர்தல் ஆணையருக்கு மின்னஞ்சல் மூலம் மனு அனுப்பியுள்ளார். DINASUVADU