என்னமா இப்படி பண்றீங்களே ? இந்தியாவில் 50% பேர் முகக்கவசம் அணிவதில்லை

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தற்போது மிகமுக்கிய கவசமாக மக்களை பாதுகாப்பது முகக்கவசமே. இந்நிலையில் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி குறித்து 2000 பேருக்கு 25 நாட்கள் என்ற அடிப்படையில் சுகாதார அமைப்பு கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர். இதில் ஒரு நபர் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றால் அவரால் ஒரு மாதத்தில் 406 பேருக்கு பாதிப்பு ஏற்படும் என்று கண்டுபிடித்துள்ளனர். சமூக இடைவெளியே மிக முக்கியமான சமூக தடுப்பூசி என்று தெரிவித்துள்ளனர்.  இது … Read more

சமூக இடைவெளியைக் கடைபிடிக்க மூங்கில் குச்சிகளை வைத்து வித்தியாசமான முறையில் நடைபெற்ற திருமணம்..!

சத்தீஸ்கரில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க மணமக்கள்,மூங்கில் குச்சிகளை வைத்து மாலையை மாற்றிக்கொண்டு வித்தியாசமான முறையில் திருமணத்தை நடத்தியுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையானது மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது.இதனால்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.எனவே,கொரோனா பரவாமலிருக்க முகக்கவசம் அணிதல்,தடுப்பூசி போட்டுகொள்ளுதல் மற்றும் சமூக இடைவெளியைக் கடைபித்தல் போன்றவை கட்டாயமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,சத்தீஸ்கிராவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர்,கொரோனா தொற்று பரவும் இந்த கடுமையான சூழலில் திருமணம் செய்து … Read more

அதிமுக-வின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படவில்லை – ஐகோர்ட்

அதிமுக-வின் முதல் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படவில்லை என ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவி வருகின்ற நிலையில், மக்கள் பொது இடங்களில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுமாறு அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது. அதன்படி பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்வது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது போன்றவற்றை தமிழக அரசு தெரிவித்திருந்தது. அந்தவகையில், அதிமுக-வின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில், தனிமனித இடைவெளி பின்பற்றப்படவில்லை என்று … Read more

சென்னையில் 3 அடி சமூக இடைவெளி 6 அடியாக அதிகரிப்பு.!

சென்னையில் கடைகளில் 3 அடி சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது  அதை 6 அடியாக அதிகரிப்பு. மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில், சமூக விலகலை கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவது, கடைகளின் வெளியே சானிடைசர் வைக்க வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களை கூறினார். மேலும், கடைகளில் குளிர்சாதனங்களை இயக்கக்கூடாது என்றும் இதனை மீறுபவர்கள் மீது அபராதத் தொகை வசூலிக்கப்படும் என தெரிவித்தார். இந்த கூட்டத்தில் கடைகளில் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் 3 அடி … Read more

மாஸ்க் போடுங்க ! 5 பேர் மட்டும் உள்ளே வரவும் ! வந்துவிட்டது நவீன கதவு

ஸ்வீடனை சேர்ந்த அஸ்ஸா அப்லோய் (assa abloy) எனும் நிறுவனம், 5 பேரை மட்டும் உள்ளே அனுப்பும் வகையிலான ஆட்டோமடிக் கதவை உருவாக்கியுள்ளது. உலகளவில் கொரோன வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து கொண்டே வருகிறது. உலக அளவில் இதுவரை, 7,091,634 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 406,192 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலில், வல்லரசு நாடான அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்த வைரஸின் தாக்கத்தை குறைக்க பல நாடுகளில் சில … Read more

சமூக இடைவெளியை மீறினால் அலர்ட் செய்யும் கருவி.! அருங்காட்சியகத்தின் அசத்தல் ஐடியா.!

இத்தாலியில் உள்ள அருங்காட்சியகத்திற்கு வரும் பார்வையாளர்களின் கைகளில் எலக்ட்ரிக் டேக் கட்டாயமாக அணிவிக்கப்படுகிறது. இதன் மூலம் சமூக இடைவெளி உறுதி செய்யப்படுகிறது.  ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இருக்கிறது இத்தாலி. இந்த நாட்டில், இதுவரை 32 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இரண்டு மாத கொரோனா கோரப்பிடியில் இருந்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு இத்தாலி நாடு திரும்பி வருகிறது. கடந்த 22ஆம் தேதி முதல் இத்தாலி நாட்டில் உள்ள பெர்காமோ … Read more

சப்ளையர் இல்லாமல் டேபிளுக்கு வரும் சாப்பாடு.! சமூக விலகளுக்கு முன்னுதாரணம் ஸ்வீடன் ஓட்டல்.!

சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் சுவீடன் நாட்டில் ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற சாதுரியமான செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றன. கொரோனா வைரசின் தாக்கத்தால் உலகம் முழுவதும் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இந்த வைரஸ் சுவீடன் நாட்டிலும் பரவி வருகிறது. அங்கு கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 27,272ஆகவும் உயிரிழப்பின் எண்ணிக்கை 3,313 ஆகவும் உள்ளது. இதுவரை 4,971 பேர் குணமடைந்து உள்ளார்கள். இதற்கிடையில், இந்த கொடிய … Read more

சமூக இடைவெளியை இந்த சிங்கங்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்.!

இரண்டு சிங்கங்கள் முன்னே இடைவெளி விட்டு செல்ல 2 சிங்கங்கள் பின்னே இடைவெளி விட்டு செல்கின்றன. இந்த வீடியோவை டிவிட்டரில் ஒருவர் பதிவிட்டுள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் போக்குவரத்து முடங்கி உள்ளன. தொழிற்சாலைகள் பெரும்பாலும் இயங்கவில்லை. இதனால், அதிகளவு மாசு குறைந்துள்ளது. மனித  நடமாட்டம் பெருமளவு குறைந்துள்ளதால், காட்டு மிருகங்கள் வீதியில் நடமாடும் செய்தியை அவ்வப்போது செய்தியாக பார்த்து வருகிறோம் அப்படி தற்போது இணையத்தில் ஒரு வீடியோ உலாவருகிறது. அதில், 4 சிங்கங்கள் சாலையில் … Read more