வலையில் சிக்கிய பாம்பை மீட்க முயன்ற நபர் பாம்பு தாக்கியதில் பரிதாபமாக உயிரிழப்பு. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள ஆரம்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜசேகர் (35). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு அருகாமையில், உள்ள வீட்டில் அடிக்கடி விஷபாம்புகள் வந்து போவதால், இவர் தனது கடைக்குள் வராமல் இருப்பதற்காக, வலை ஒன்றை அமைத்துள்ளார். இன்று காலை அந்த வலையினுள், 6 அடி நீளம் கொண்ட விஷப்பாம்பு ஒன்று சிக்கியுள்ளது. […]
பாம்பு விஷத்தை கடத்திய கும்பல். காவல்துறை பிடித்து சிறையில் அடைப்பு. இந்தியா மட்டுமின்றி உலக அளவிலும் பாம்புகளின் விஷம் பெரும் மதிப்பை பெற்றுள்ளன. இந்த பாம்பின் விஷத்தை கொண்டு பல்வேறு மருந்துப்பொருள்களை உருவாக்குகின்றனர். அதிலும் குறிப்பாக பாம்புக்கடிக்கு மருந்தாகப் பயன்படும் கோப்ராக்சின் எனும் மருந்துப்பொருள் இந்த பாம்பின் விஷத்தின் மூலமே உருவாக்குகின்றனர். இதனால் இதற்க்காக அரசின் சார்பில் பல்வேறு பாம்பு பண்ணைகள் மூலம் இந்த நஞ்சுகள் சேகரிக்கப்படுகின்றன. இந்நிலையில், மேற்கு வங்கம் மாநிலம் மால்டா மாவட்டத்தில் பாம்பு […]