நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40க்கு 40-ஐ ஜெயிக்கும்.! முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உறுதி.!

2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றியடையும். அதற்கு பிறகு சட்டமன்றத் தேர்தலிலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக வெற்றி பெரும் – முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே  ஓர் தனியார் மண்டபத்தில் அதிமுக சார்பில் 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனைகூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர், ‘ஒவ்வொரு பூத்துகளிலும் ஆட்களை நியமிக்க வேண்டும். அதிமுக … Read more

தமிழ்நாட்டை திராவிட இயக்கங்கள் தான் ஆளும் – செங்கோட்டையன்

தமிழ்நாட்டை திராவிட இயக்கங்கள் தான் ஆளும் என தமிழக சட்டப்பேரவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு. தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, அதிமுக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான செங்கோட்டையன், கடந்த அதிமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் என்ன மாதிரியான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது என்பது குறித்து பட்டியலிட்டு பேசினார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டை திராவிட இயக்கங்கள் தான் ஆளும், வேறு எவராலும் தமிழ்நாட்டை ஆள முடியாது என்று தெரிவித்தார். இதற்கு பேரவையில் திமுக … Read more

+2 தேர்வு.., அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்பு..!

நாளை நடைபெறவுள்ள சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொள்ளகிறார்.  இன்று மாலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதிகாரிகளுடன்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், பிளஸ் டூ தேர்வு விவகாரத்தில் முதன்மை கல்வி அலுவலர்கள் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளனர். ப்ளஸ் 2 தேர்வு குறித்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகளிடம் நாளை நன்பகல் 12 மணிக்கு காணொளி மூலம் கருத்துக்கேட்பு நடைபெறும் … Read more

10, 12 ஆம்பொதுத்தேர்வு எப்போது..? அமைச்சர் விளக்கம்..!

தேர்தல் தேதிக்கு பின்னர் தான் 10, +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளா்களிடம் பேசிய தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,  சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே 10 மற்றும் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என  அறிவித்துள்ளார். மேலும், 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளை நூலகமாக மற்றுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். மத்திய அரசு கொண்டு வரும் … Read more

BREAKING: தற்போதைக்கு 6, 7, 8 வகுப்புகளுக்கு பள்ளி திறக்க வாய்ப்பில்லை-அமைச்சர்..!

இன்றைய சூழ்நிலையில் 6, 7 மற்றும் 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தற்போது 98.5 மாணவர்கள் பள்ளிக்கு வந்து கொண்டிருக்கின்றன என அவர் தெரிவித்தார். 6, 7 மற்றும் 8 வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் டேப் வழங்கப்படும் என கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் தெரிவித்தார். கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 24-ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. பின்னர், தொடர்ந்து … Read more

பொதுத்தேர்வு மாற்றங்கள் தொடர்பாக விரைவில் அறிவிப்பு -அமைச்சர் செங்கோட்டையன்..!

கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வந்தது. இதையடுத்து  10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு மட்டும் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பொதுத்தேர்வு வழக்கமாக மார்ச் மாதம் தொடங்கும் என்பதால் மாணவர்கள் மத்தியில் பொதுத்தேர்வு எப்படி இருக்கும்..? பொதுத்தேர்வில் மாற்றம் இருக்குமா..? போன்ற பல்வேறு பல சந்தேகங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில், கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், கொரோனா … Read more

தேர்தலை பொறுத்தே பொதுத்தேர்வு -அமைச்சர் செங்கோட்டையன் ..?

தமிழக தேர்தல் தேதியை பொருத்து பொதுத்தேர்வு தேர்வு முடிவு செய்யப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த தகவல் வெளியாகியுள்ளது. பொதுத்தேர்வு குறித்து நேற்று கூறுகையில்,  மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை முதல்வர் ஒப்புதலுடன் வெளியிடப்படும் என தெரிவித்தார். இந்தாண்டு பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக இருக்க வாய்ப்பில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#BREAKING: நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு உறுதி-அமைச்சர் செங்கோட்டையன்..!

நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு உறுதியாக நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை முதல்வர் ஒப்புதலுடன் வெளியிடப்படும் என தெரிவித்தார். இந்தாண்டு பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக இருக்க வாய்ப்பில்லை, ஏற்கனவே இது குறித்து பேசிய போது முதல்வருடன் ஆலோசித்து இது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்த நிலையில் இந்த அறிவிப்பை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கல்வி தொலைக்காட்சியில் திருவள்ளூர் படம் காவி நிறத்தில் இருந்த … Read more

#BREAKING: அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு..!

தமிழக அரசு அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வை தமிழக அரசு ஒத்திவைத்துள்ளது. தனியாா் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தலாம்; ஆன்லைன் தேர்வு பற்றி அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், 50% பாட குறைப்பு மட்டுமின்றி நடத்தப்படும் பாடங்களில் இருந்து மட்டும்தான் தேர்வுக்கு கேள்விகள் கேட்கப்படும். கொரோனா காரணமாக  கடந்த மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை பள்ளி எப்போதுதிறக்கப்படும் என்பது குறித்து இன்னும் அறிவிக்கவில்லை. … Read more

இந்த மாதம் பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை – அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் பள்ளிகள் இந்த மாதம் பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், கல்வி கூடங்கள் ஆகியவை மூடப்பட்டது. இதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், 8 மாதங்களுக்கு பிறகு இறுதியாண்டு மாணவர்களுக்கு  கடந்த திங்கட்கிழமை முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில், மதுராந்தகம் அருகே செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிகளை இந்த … Read more