நாளை குடியரசு தினம் பாதுகாப்பு வலையத்திற்குள் டெல்லி.!

இந்தியா முழுவதும் நாளை 71-வது குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. தற்போது ராஜபாதை முதல் செங்கோட்டை வரை போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் நாளை 71-வது குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதை  தொடர்ந்து தலைநகர் டெல்லியில் முப்படை அணிவகுப்பு பல்வேறு மாநிலங்களின் கலை மற்றும் கலாச்சார எடுத்துரைக்கும் வகையில் நடனங்கள் நடைபெற உள்ளன. அதில் தமிழகம் சார்பில் அய்யனார் கோவில் கொடை விழா போன்ற அமைப்பும் இடம்பெற்றுள்ளது. குடியரசு தின ஒத்திகைகள் முடிந்துள்ள … Read more

பெண்களே உஷார்! இந்த 8 இடங்களில் எங்கு வேண்டுமானாலும் ஸ்பை கேமராக்கள் வைத்திருக்கலாம்!

தொழிற்நுட்ப வளர்ச்சிக்கு எல்லை இல்லை என்பது நிதர்சனம் தான். என்றாலும் இதன் தாக்கம் மக்களை நல்ல முறையில் சென்றடைந்தால் அதில் தவறில்லை. ஆனால், அதுவே மிக மோசமான முறையில் சென்றடைந்தால் அதை நாம் கவனமாக கையாள வேண்டுவது அவசியம். இதே நிலை தான் தற்போது ஏற்பட்டு உள்ளது. மிக சிறிய அளவிலான கேமராக்களை கொண்டு பெண்களை தவறான முறையில் ஆபாசமான படங்களை எடுத்து, அதனை வைத்து அவர்களது வாழ்க்கையோடு சிலர் விளையாடி வருகின்றனர். இப்படிப்பட்ட ஸ்பை கேமராக்களிடம் … Read more

கடத்தல்காரர்களிடம் இருந்து உங்களை காக்கும் புதுவித ஆப்ஸ் வந்துள்ளது! எப்படினு தெரிஞ்சிக்கோங்க…

இன்றைய கால கட்டத்தில் தனியாக ஒருவர் வெளியில் செல்ல முடிவதில்லை. காரணம் “பயம்” தான். பட்ட பகலிலே நம்மை உயிரோடு புதைக்கும் அளவிற்கு இன்றைய சமூகம் மாறியுள்ளது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வன்முறை இப்படி பலவற்றையும் மக்கள் நிறைந்த இடங்களிலே கொஞ்சமும் பயமும் பதட்டமும் இல்லாமல் சில மனித மிருகங்கள் செய்து வருகின்றன. இப்படிப்பட்ட அபாயங்களில் இருந்து தனி நபர் பாதுகாப்போடு வாழ சில செயலிகள் உள்ளன. இவற்றில் மிக எளிமையான மற்றும் புதுமையான இந்த செயலி … Read more

போக்குவரத்துத் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாமக்கல் மாவட்டம் காடச்சநல்லூர் பகுதியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், கிராமப்புறங்களில் பொதுமக்கள் எளிதில் ஓட்டுநர் உரிமம் பெற முகாம்கள் அமைக்கப்பட்டு 300 மேற்பட்டோருக்கு ஓட்டுநர் பயிற்சி உரிமம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து வாகன ஆய்வாளர் முத்துசுவாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அணை பாதுகாப்பு மசோதாவை எதிர்ப்போம்…தமிழக முதல்வர் உறுதி..!!

கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான  அணை பாதுகாப்பு மசோதாவை தமிழக அரசு ஏற்காது  என்று, முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற  சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் , அணை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளேன். அணைகள்  பாதுகாப்பு சட்டத்தின்படி ஒரு மாநிலத்திற்கு சொந்தமான அணை வேறு மாநிலத்தில் இருந்தால் தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் கட்டுப்படுத்தும் என்று சுட்டிக் காட்டிய முதலமைச்சர், முல்லைபெரியாறு உள்ளிட்ட அணைகளின் மீதான தமிழகத்தின் உரிமை பறிபோகும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாக … Read more

கார் இருக்கைகள் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து..!

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள , கார் இருக்கைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. சாத்தமை கிராமத்தில் இயங்கும் பார்க் ஆலையில் இருந்து, வெளிநாடுகளுக்கு கார் இருக்கைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆலையில், கழிவுகள் கொட்டப்படும் இடத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தால், அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. பின்னர், ஒரு மணிநேரமாக போராடி, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

ஃபேஸ்புக்(Face book) அதிரடி எச்சரிக்கை: பொய் பதிவுகளை(Fake news) போடுபவர்களுக்கு.

ஃபேஸ்புக்கில் பொய் பதிவுகளை (செய்தி) போடுபவர்களுக்கு இனி காத்திருகிறது ஆப்பு ??!!! சமூக வலைத்தளங்கள் (Social Networking Platforms) ஒவ்வொரு நாளும் அதன் குறைகளை கண்டுகொண்டு பின்னர் அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு அவ்வப்போது சிறப்பம்சங்களை கொடுத்து நெட்வொர்க்கிங் தளத்தினை மெருகேற்றி வருகின்றன‌. ஃபேஸ்புக் தற்போது பொய்யான‌ செய்திகளை பரப்பும் பக்கங்களைக் கண்டிக்கும் விதமாக‌ புது யுக்தி ஒன்றைக் கையாண்டுள்ளது. பொய்யாய் பதிவுகளை வெளியிடும் பக்கங்களில் விளம்பரங்களை நிறுத்த அதிரடியாக முடிவு செய்துள்ளது. பொய்செய்தி, அவதூறு, வதந்திகளை … Read more