சபரிமலை ஐயப்பன் கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த 5 காவலர்களுக்கு சின்னம்மை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அலைமோத தொடங்கிவிட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் எல்லாம் முழுதாக நீங்கி பெருவழிப்பதை எனும் காட்டுவழிபாதையும் எந்த தடையும் இன்றி திறக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் தான் ஒரு சிறிய அதிர்ச்சி தகவலை சபரிமலை காவத்துறையினர் தெரிவித்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த 5 காவலர்களுக்கு சின்னம்மை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்ற உத்தரவை கேரள அரசு அமல்படுத்தியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்காதது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதி அமர்வு கடந்த 2018ஆம் ஆண்டு அனைத்து வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோவில் தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என தீர்ப்பு வழங்கினர். இதற்கு ஐயப்பன் பக்தர்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்தாலும், இரண்டு வருட கொரோனா கட்டுப்பாடுகள் என்பதாலும், […]
கார்த்திகை 1ஆம் தேதியான இன்று முதல் தமிழகமெங்கும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரதத்தை தொடங்கினர். இன்று கார்த்திகை மாதம் 1ஆம் தேதி. இன்று முதல் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்குவர். மகரவிளக்கு தரிசன பூஜைக்காக நேற்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. இன்று முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்தனர். மலை அணிந்து தங்கள் […]
சபரிமலை அயப்பன் கோவிலில் ஒரு நாளைக்கு 1000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று நிபுணர் குழு கேரள அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. கொரோனா பரவி வரும் சூழலில் சபரிமலை கோவிலில் வழிகாட்டு நெறிமுறைகளுக்காக நிபுணர் குழு ஒன்றை கேரள அரசு அமைத்துள்ளது. இந்த குழுவின் அறிக்கையின் படி சபரிமலை கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜை காலங்களில் 1000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 2000 பக்தர்கள் வரை அனுமதிக்கப்படலாம். […]