பெரம்பலூரில் டைனோசர் முட்டை கண்டெடுக்கப்பட்டதாக பரவிய வதந்தி! இணையத்தை கலக்கும் மீம்ஸ்கள்!

பெரம்பலூரில் டைனோசர் முட்டை கண்டெடுக்கப்பட்டதாக கூறப்பட்ட வதந்தி குறித்து, இணையத்தில் வைரலாக மீம்ஸ்கள். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் கிராஅமத்தில், ஏரியை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இந்த ஏரியை தோண்ட, தோண்ட பெரிய அளவிலான முட்டைகள், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நத்தை, ஆமை, நட்சத்திர மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த முட்டைகள் மிகப் பெரிய அளவில் இருந்ததால், இந்த முட்டைகள் டைனோசர் முட்டைகள் என வதந்திகள் பரவி வந்தது. இதுகுறித்து … Read more

உத்தரகாண்ட் முதல்வர் இறந்துவிட்டதாக வதந்தி.. வழக்குப்பதிவு செய்த போலீஸ்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வர் திரிவேந்திர சிங் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் அம்மாநிலத்தின் 8ஆம் முதல்வர் ஆவர். இந்நிலையில், திரிவேந்திர சிங் இறந்துவிட்டதாக சமூகவலைதளகளில் வதந்திகள் பரவியது.  இதனையடுத்து, டேராடூன் மாவட்ட டி.ஜி.பி. அசோக் குமார் உத்தரவின்பேரில், டேராடூன் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு வழக்குபதிவு செய்துள்ளார். வதந்தி பரப்பியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஜி.பி. எச்சரிக்கை விடுத்தார்.

கொரோனா குறித்து வதந்தி பரப்பிய இருவர் கைது.!

கொரோனா  வைரஸிடம் இருந்து தப்பிக்க சமூகவலைத் தளங்களில் தவறான வதந்தி செய்திகளை நம்பவேண்டாம் என அரசு அறிவுறுத்தி வருகிறது.மேலும் வதந்திகளை பரப்புவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் கூறப்பட்டு உள்ளது.  இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது என வதந்தி பரப்பியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வதந்தி பரப்பிய சாமிநாதன், அப்துல் ரகுமான் அகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சமீபத்தில் சமூகவலை தளத்தில் மது குடித்தால் கொரோனா … Read more

கொரோனா.! வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய மூன்று பேரை கைது.!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் கொரோனா  வைரஸ் குறித்து வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய மூன்று பேரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.  தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன.மேலும் கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் பார்கள் ஆகியவை மார்ச் 31-ம் தேதி வரை மூடப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு நேற்று அறிவித்தது. தமிழக  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் யாரேனும் கொரோனா வைரஸ் பற்றி … Read more