ஹைதராபாத் : லக்னோ அணி பலம் வாய்ந்த அணியான ஹைதராபாத் அணியை நேற்று வீழ்த்திய நிலையில் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் தான் சற்று கவலைக்கிடமாக உள்ளது. ஏனென்றால், ஏற்கனவே டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 0 ரன்களிலும், நேற்று நடந்த ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக விளையாடாமல் 15 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் காரணமாக அவருடைய கேப்டன் சி நன்றாக இருந்தாலும் கூட பேட்டிங் சரியாக இல்லை […]
டெல்லி : ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோஅணி, ஐபிஎல் 2025 சீசனின் முதல் ஆட்டத்தில் டெல்லி அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 210 ரன்கள் எடுத்தது, முதலில் இருந்தே தடுமாறி விளையாடி வந்த டெல்லி அணி கடைசி நேரத்தில் 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. லக்னோ அணியில் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களான ஆகாஷ் தீப், அவேஷ் கான், மோஹ்சின் கான் மற்றும் மயங்க் யாதவ் ஆகியோர் காயம் காரணமாக விளையாடவில்லை. […]
டெல்லி : 2016-ஆம் ஆண்டிலிருந்து 2024 வரை டெல்லி அணிக்காக விளையாடி வந்த ரிஷப் பண்டை இந்த முறை 2025 -ஆம் ஆண்டுகான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி 27 கோடி கொடுத்து ஒப்பந்தம் செய்தது. எனவே, அவருடைய பேட்டிங் மற்றும் கேப்டன்சி மீதும் அதிகமான எதிர்பார்ப்புகள் எழுந்தது. இதனையடுத்து, இந்த ஆண்டுக்கான முதல் போட்டி லக்னோ அணி டெல்லி அணிக்கு எதிராக தான் மார்ச் 23 -ஆம் தேதி விளையாடியது. இந்த போட்டியில் லக்னோ அணி […]
விசாகப்பட்டினம் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில், லக்னோ 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய டெல்லி அணியின் பேட்டிங் அடுத்தடுத்து சரிந்தாலும் அசுதோஷ் சர்மாவின் அசத்தல் ஆட்டத்தால் 19.3 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்டின் […]
விசாகப்பட்டினம் : ஐபிஎல் 2025 தொடரில் இன்று நடைபெறும் 4வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஏசிஏ-விடிசிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது, மாலை 7:30 மணிக்கு தொடங்க உள்ளது. இப்பொது டாஸ் போடப்பட்டு, பிளேயிங் லெவனும் அறிவிக்கப்பட்டது. டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த சீசனில் இந்த இரு அணிகளும் புதிய கேப்டன்களுடன் […]
துபாய் : சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் தொடங்குவதற்கு முன்பே இந்திய அணியில் கீப்பராக எந்த வீரர் விளையாடப்போகிறார் என்கிற கேள்விகள் எழும்பியது. ஒரு பக்கம் கே.எல் ராகுல் விளையாடவேண்டும் எனவும் மற்றொரு பக்கம் ரிஷப் பண்ட் விளையாடவேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தது. இறுதியாக கம்பீர் கே.எல் ராகுலை விளையாட வைப்பதில் உறுதியாக இருந்த காரணத்தால் அவருக்கு விளையாட வாய்ப்புகள் வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட வாய்ப்பை ஒரு சில சமயங்களில் கே.எல் ராகுல் சரியாக பயன்படுத்தினாலும் சில போட்டிக்களில் பேட்டிங்கில் […]
துபாய் : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நெருங்கி வருவதால், ரோஹித் சர்மாவின் தலைமையிலான இந்திய அணி, பிப்ரவரி 20 ஆம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான போட்டியின் தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக, இந்திய அணி துபாயில் உள்ள ஐசிசி அகாடமியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. டெல்லியில் இருந்து இரு தினங்களுக்கு முன் அபுதாபி புறப்பட்ட இந்திய அணி, துபாயில் தரையிறங்கிய பிறகு ஓய்வை தவிர்த்துவிட்டு உடனடியாக பயிற்சியில் களமிறங்கியது. சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு முன்பு எதையும் விட்டுவிடக்கூடாது […]
அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணியும், இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 4-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை வென்றது. அடுத்து ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடிய 2 ஒருநாள் போட்டிகளிலும் வென்று இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றியது. நாளை நடைபெறும் 3வது ஒருநாள் போட்டியை அடுத்து இந்திய […]
டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பண்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர், ஐபிஎல் மெகா ஏலத்தில் 27 கோடி ரூபாய்க்கு லக்னோ அணிக்காக எடுக்கப்பட்டிருந்தார். இதன் மூலம் ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெற்றார். இந்த நிலையில், லக்னோ அணியின் கேப்டனாக பதவியேற்ற பிறகு பேசிய ரிஷப் […]
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய வீரர்களுக்கான ஏலம் என்பது தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி, முன்னதாக ஷ்ரேயஸ் ஐயருக்கு கடுமையான போட்டி நடைபெற்றது, அதில் அவரை ரூ.27.75 கோடிக்கு பஞ்சாப் அணி எடுத்தது. அது ஐபிஎல் வரலாறாக பேசப்பட்டு வந்த அடுத்த 10 நிமிடத்தில் ரிஷப் பண்ட அதனை மாற்றியிருக்கிறார். அதன்படி, ரிஷப் பண்ட் ஏலத்தில் வந்த போது, பல அணிகளுக்கு […]
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில், ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை விட 83 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் அடித்த சிக்ஸர் தான் பெரிய ஹைலைட் விஷயமாகவும் மாறியிருக்கிறது. பொதுவாகவே ரிஷப் பண்ட்டை பொறுத்தவரையில் மற்ற வீரர்களை விடத் தனித்துவமான முறையில் சிக்ஸர்கள் விளாசுவதில் வல்லவர் […]
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணியைச் சிறப்பாக வழிநடத்தி வந்த ரிஷப் பண்டை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணி தக்க வைக்காத நிலையில், இது குறித்து பல வதந்தி தகவல் பரவியது. பரவிய அந்த வதந்தி தகவல் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ரிஷப் பண்ட் தற்போது விளக்கம் கொடுத்து இருக்கிறார். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் டெல்லி அணி ரிஷப் பண்ட் கேட்ட சம்பளத்தைக் கொடுக்கவில்லை […]
பஞ்சாப் : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலமானது இந்த வருடம் நடைபெறவுள்ள நிலையில், பஞ்சாப் கிங் அணி கையில் 110 கோடி வைத்துள்ள காரணத்தால் பல வீரர்களை ஏலத்தில் எடுக்கும் எனக் கூறப்படுகிறது. ஏனென்றால், அவர்கள் மொத்தமாக ப்ரப்ஷிம்ரான் சிங், ஷஷாங்க் ஆகிய இரண்டு வீரர்களைமட்டும் தான் தக்க வைத்து இருக்கிறார்கள். அணியை மறு சீரமைக்கவேண்டும் என்பதால் மற்ற யாரையும் தக்க வைக்காமல் ஏலத்தில் பார்த்துக்கொள்ள முடிவெடுத்துள்ளது. இந்த சூழலில், அணியின் கேப்டனாக […]
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை தக்க வைக்காதது ரசிகர்களுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், அவரை எந்த அணி ஏலத்தில் எடுக்கப்போகிறது? என்ற எதிர்பார்ப்பும் ஒரு பக்கம் எழுந்துள்ளது. இன்னும் ஏலம் நடைபெறவில்லை என்றாலும் கூட நம்பத்தக்க வட்டாரங்களிலிருந்து கிடைத்த தகவலின் படி அவரை ஏலத்தில் எடுக்கத் திட்டமிட்டுள்ள அணிகள் குறித்த விஷயங்கள் தகவல்களாகப் பரவிக் கொண்டு இருக்கிறது. அந்த வகையில், […]
மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை வழிநடத்த ஹர்திக் பாண்டியா…சூர்யகுமார்யாதவ் ஆகியோர் இருக்கிறார்கள். இருப்பினும், முன்னாள் வீரர்கள் பலரும் தங்களுக்குப் பிடித்த வீரர்கள் பெயரை கூறி அந்த வீரர் கேப்டன் பதவிக்கு தகுதியான நபர் எனப் பேசுவது உண்டு. அப்படி தான் தற்போது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் ரோஹித் சர்மாவுக்குப் பின் ரிஷப் பண்ட் கேப்டன் பதவிக்குத் தகுதியானவர் […]
மும்பை :ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலமானது இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. எனவே, இதனையடுத்து, அணி நிர்வாகங்கள் வீரர்களை ஏலத்தில் எடுக்கும் விஷயங்களும் தகவல்களாக வெளிவந்துகொண்டு இருக்கிறது. அப்படி தான் தற்போது மும்பை மற்றும் சென்னை அணி 5 வீரர்களை எடுக்கத் திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி இருக்கிறது. அவர்கள் யார் என்று பார்ப்போம்… கே.எல்.ராகுல் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியை கேப்டனாக வழிநடத்தி வந்த கே.எல்.ராகுலை லக்னோ அணி தக்க வைத்துக்கொள்ளாமல் […]
புனே : இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில்,முன்னதாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை 1-0 என முன்னிலைப் பெற்று வருகிறது. இந்த தொடரின் 2-வது போட்டியானது நாளை மறுநாள் அக்.-24 (வியாழக்கிழமை) அன்று புனேவில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரிஷப் பண்ட் இந்த போட்டியில் விளையாடவுள்ளார் எனத் தகவல் […]
பெங்களூர் : நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வி அடைந்துள்ளது. இந்த போட்டியில் இந்திய தோல்வி அடைந்த காரணத்தால் இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலையில் உள்ளது. Read More- IND vs NZ : முதல் டெஸ்ட் முடிவு! 36 வருடங்களுக்கு பிறகு இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து! இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த பிறகு அணியின் கேப்டன் ரோஹித் சர்மா […]
பெங்களூரு : இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற வந்த முதல் டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்டத்தில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் செய்த சம்பவங்கள் தான் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த அளவுக்கு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். போட்டியின் போது அவர் அடித்த ஒரு அபாரமான சிக்ஸர் ரசிகர்கள் மட்டுமின்றி எதிரணி வீரர்களையும் வியந்து பார்க்க வைத்தது. போட்டியின் போது, 87வது ஓவரை டீம் சவூதி வீச வந்தார். அந்த […]
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர பணியில் ஐபிஎல் வட்டாரங்கள் இருந்து வருகிறது. இதற்கிடையில், ஐபிஎல் மெகா ஏலத்திற்கு உண்டான விதிகளையும் சமீபத்தில் பிசிசிஐ அறிவித்திருந்தது. அதில், ஒரு சில அணிகளுக்கு முரண்பாடு உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில், டெல்லி அணியில் சில மாற்றங்கள் செய்யவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், டெல்லி அணியின் தற்போதைய கேப்டனான […]